வாங்க, பழகலாம்!

Author: Nagaraji.B /

வாங்க, பழகலாம்!

தனி மனித வாழ்வில் வெற்றிக்கு காரணமாக இருப்பவை இரண்டு முக்கியமான விஷயங்கள்.



ஒன்று வேலை - உழைப்பு


இரண்டாவது: எல்லோருடனும் சுமூகமாக பழகுவது


சுமுகமாக பழகும் மனித தன்மைகளை நான்கு வகைகயாக பிரித்திருக்கிறார்கள்.


1. பிறரது அறிமுகம்- நட்பு - உறவு. ஒருவரை யொருவர் நம்புதல், இந்த பரஸ்பர நம்பிக்கை நம்உறவுக்குவலிமை தருகிறது.


2. நமது பேச்சு மூலமும், சம்பாஷணை மூலமும் கருத்து பரிமாற்றங்களில் மூலமும் நம் உறவு பலப்படுகிறது. நம்மால் எவ்வளவுக்கெவ்வளவு தெளிவாகவும் குழப்பமில்லாமலும் நம் எண்ணங்களைதெரிவிக்க முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு உறவின் தன்மை அமைகிறது.


3. அடுத்த கட்டமாக, பிரச்னைகள் என்று வரும்போது, நமது பரஸ்பர ஆதரவும், துணையும் உறவுகளின் பிணைப்பை உறுதியாக்குகிறது.


4. எவ்வளவு நெருக்கமாக நட்புக்கொண்டிருந்தாலும் சமயத்தில் மனஸ்தாபம் தோன்றுவது இயல்பு, அவற்றை உணர்த்துவது பிரச்னைகளுக்கு முடிவு காண நாம் முயல வேண்டும். பரஸ்பர நம்பிக்கைக்கும் உறவுக்கும் பாதகம் ஏற்படாதவண்ணம் நம் பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்ள முயலவேண்டும்.


இவை தான் அடிப்படை.


எதன் காரணமாக ஒருவரை யொருவர் விரும்புகிறோம்? ஏன் ஒருவரது நட்பை வளர்க்க ஆசைப்படுகிறோம்? ஒரு கணம் யோசித்து பாருங்கள். ஒரு மனிதரைபார்க்கும்போது இவர் உண்மையானவர். இவரை நம்பலாம். என்று நம்பிக்கை ஏற்படுகிறது அவரதுபேச்சு. தோற்றம் சொல்லின் தொனி. நிதானம் அங்க அசைவுகள் எல்லாம் நம்மிடம் ஓர் உள்ளுணர்வை தோற்றுவிக்கின்றன.


மனித உறவு, நம்பிக்கையில் துவங்குகிறது. போலிகள் கூட நம்மிடம் நம்பிக்கையைதான் உருவாக்க முயல்கிறார்கள். சாயம் போகாதென்று சத்தியம் செய்யும் புடவைக்கடைக்கரரிலிருந்து, வாக்குறுதிகளைஅள்ளி தெளிக்கும் அரசியல் தலைவர் வரை நம்மிடையே நம்பிக்கையை தோற்றுவிக்க முயல்கிறார்கள். இவன் உண்மையானவன்சொன்ன வார்த்தையை காப்பாற்றுவான் என்ற எண்ணம் தான் காதலன் முதல் மேலதிகாரி வரை நம்ப வைக்கிறது.


அந்தரங்களை பரிமாறிக்கொள்ளும்போது பிறருடன் நெருக்கமாகிறோம். நம் உறவு தனித்தன்மையை பெறுகிறது. ஆனால், எல்லா விஷயங்களிலும் நாம் எவ்வளவு தூரம் செல்லலாம் என்பதற்கு ஓர் எல்லை இருக்கிறது. வள்ளுவர் கூறுகிறார் மரக்கிளையில் நுனிக்கு போகிறவர்கள், அதற்கும் மேலே போக விரும்பினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று.


ஞானிகள் கூடத் தங்கள் பூர்வாசிரமத்தை கூறுவதில்லை. எனவே, பிறரது நம்பிக்கையை பெற நாம் நம்மை பற்றி எல்லாவற்றையும் குடத்தை கவிழ்ப்பது போல கொட்டி கவிழ்க்க வேண்டும் என்பதல்ல.


நம்பிக்கையை ஏற்படுத்தும் கருத்து பரிமாற்றம் என்பதற்கும், அந்தரங்கங்களை எல்லாம் கொட்டும் மன வெளிபாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை நன்கு உணர வேண்டும்.


-எம்.எஸ்.உதயமூர்த்தி


0 comments:

Post a Comment

Pages