டா வின்சி போல யோசி !

Author: Nagaraji.B /

டா வின்சி போல யோசி ! - கி.கார்த்திக்கேயன்

லியனார்டோ டா வின்சியை எப்படி அறிமுகப்படுத்துவீர்கள் ? உடற்கூறு வல்லுநர்,பொறியியலாளர், நகர வடிவமைப்பாளர், ஆடை, மேடை வடிவமைப்பாளர், சமையற்கலை நிபுணர், அறிவியல் வல்லுநர், புவியியலாளர், கணிதவியல் வல்லுநர், நகைச்சுவைப் பேச்சாளர், இசைக்கலைஞர், ஓவியர், தத்துவ மேதை, இயற்பியல் மேதை.... இன்னும் என்னவெல்லாம் ?



இந்த எல்லா அறிமுகங்களுக்கும் பொருத்தமானவர், லியனார்டோ டா வின்சி. ""சரி... இந்த உலகத்தை வடிவமைத்த மேதைகளில் வின்சிக்கு மறுக்க முடியாத பங்கு இருக்கிறது. ""அவரைப் போலவே நாமும் யோசித்து ஜீனியஸ் ஆகலாம் என்று பொய் நம்பிக்கை ஊட்டுவதைப் போல உள்ளதே "" கூஏஐNஓ ஃஐஓஉ ஈஅ ஙஐNஇஐ'' என்ற புத்தகத்தின் தலைப்பு என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், வாவ்... நீங்கள் டா வின்சிபோல யோசிக்கத் துவங்கி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் ! '' இப்படி ஆரம்ப வரிகளிலிலேயே உற்சாகம் தெளிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் ஜே.கெல்ப்.



டா வின்சி மறைந்தபோது, ""இந்த மனிதரின் மறைவு உலகத்துக்கே ஈடு செய்ய முடியாதது. இயற்கையாலயே இன்னொரு டா வின்சியை சிருஷ்டிக்க முடியாது !'' என்பதுதான் அவருக்கான அஞ்சலி. அப்படிப்பட்ட ஒருவர் போல நாம் சிந்திக்க முடியாததுதான். ஆனால், அவர் தனது சிந்தனைகளை மேம்படுத்தக் கையாண்ட வழிமுறைகளை அறிந்து கொண்டு, நமது சிந்தனைகளையும் ஒரு புதிய பாதையில் பயணிக்கச் செய்யலாம் என்று உத்தரவாதம் தருகிறார் மைக்கேல்.



* ஆர்வத்துக்கு அணை போடாதீர்கள் !



ஜீனியஸ்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பேசத் தொடங்கியவுடன் குழந்தைகள் எதைப் பார்த்தாலும் அது தொடர்பான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும். ""நான் எப்படிப் பிறந்தேன் ?'', ""அப்பா, பாப்பா எங்கே இருந்து வருகிறது ?'', ""ஏன் ஞாயிற்றுக்கிழமை ஐஸ்க்ரீம் கடை லீவு ?'' இப்படி இப்படி. இந்த உலகத்தில் ஜீனியஸ் என்ற அடைமொழி வழங்கப்பட்டவர்கள் அனைவரும் குழந்தை மனநிலையில்தான் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். டாவின்சிக்குப் பெண்கள், மது, செல்வம், செல்வாக்கு, மதப்பற்று என எந்த விஷயங்களும் கிளர்ச்சியூட்டவில்லை.



மாறாக, எதைப்பற்றியும் எப்போதும் கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருப்பதுதான் அவரை எப்போதும் துடிப்பாக வைத்திருந்தது என்கிறார். எப்போது எந்தக் கேள்வி எழுந்தாலும், தன்னுடைய சின்னக்குறிப்புக் கையேட்டில் குறித்து வைத்துக் கொள்வார் டாவின்சி. பின்னர்,அவற்றுக்கான பதிலுக்காக மண்டையை உருட்டிக் கொண்டிருப்பார்.



* எனிடைம் மாணவன் !



கல்லூரிக் காலம் முடிந்து வேலைக்குச் சேர்ந்து, திருமணம் முடிந்து, ஒரு குழந்தைப் பெற்றுக் கொண்டதும் இந்த உலகம் பற்றி அனைத்தும் அறிந்தவர், தெரிந்தவர், புரிந்தவர் என்ற அந்தஸ்தை நமக்கு நாமே சூட்டிக் கொள்கிறோம். அங்கேதான் நாம் தங்கித் தேங்கிப் போகிறோம். டாவின்சி மரணப்படுக்கையில் விழும் கடைசி நொடிவரை ஏதோ ஒன்றைக் கற்றுக் கொண்டு இருக்கும் மாணவராகவே இருந்தார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். புதிதாக ஓர் விஷயத்தைக் கற்றுக் கொள்ளும்போது நம்மை அறியாமல் நமது மவனது கதவு,ஜன்னல்களை அகலத்திறந்து வைத்துக் கொள்கிறது. புதிய மொழி ஒன்றைக் கற்றுக் கொள்வது



கிடார், நீச்சல், சமையல், டிரைவிங் பழகுவது என சுவாரஸ்யமான பயிற்சிகள் வாழ்வை இன்னும் எளிமை ஆக்கும். அவற்றில் கவனம் செலுத்தலாம். ஆனால், எந்தப் பயிற்சியில் ஈடுபட்டாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பயிற்சியின் போது நாம் செய்யும் தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நாம் ஒரு குழந்தையைப் போலத்தான் என்பதை உணர்ந்து கொண்டு, தெரிந்தவர்கள் வழிநடத்துவதை-அவர்கள் நம்மை விட எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும்-ஏற்றுக் கொள்ள வேண்டும்.



ஒரு பயிற்சியை ஆரம்பித்தால், அதை முடிக்காமல் விடக்கூடாது என்ற உறுதியுடன் இருக்க வேண்டும் !



வாருங்கள்... நாம் அனைவரும் டா வின்சியின் இழப்பை ஈடு செய்வோம் !


0 comments:

Post a Comment

Pages