பெரும் பணம் ஒரு சிறை

Author: Nagaraji.B /

ஆடம்பரமும், படோடோபமும் வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒருவகை ஹிம்சை (violence)!' என்றார் மகாத்மா காந்தி. உண்மையில், பலரால் தங்களிடம் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டுள்ள ஆடம்பரத்தை, அது ஒரு ஹிம்சை என்று உணரமுடிவதே இல்லை. மாறாக, அதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஆடம்பரம் ஒரு சிறை!

ஒருமுறை நண்பர் ஒருவரை சந்தித்தபோது, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு தங்கக் காசு மாலையை அவர் திருப்பதி கோயிலுக்கு வழங்கியிருப்பதாகக் கூறினார். ஆகவே அங்கு அவருக்கு பிரத்தியேக சலுகை என்றும் கூறினார். நான் அங்கு செல்லவேண்டி இருந்தால், அவரிடம் தெரிவித்தால், செளகர்யமாகப் போய் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார்.

எங்கோ சம்பாதித்த பணம், ஏதோ ஒருவிதத்தில் கோயிலுக்கு போய்ச் சேர்வதில் எனக்கு உடன்பாடுதான். அந்தப் பணம் பிறகு அன்னதானமாகவோ, வேறு பல நலத்திட்டங்களுக்கோ பயன்படுகிறதே என்பதில் மகிழ்ச்சிதான். இருந்தாலும் அதைப் பற்றிய அவரின் தம்பட்டம் இந்த அளவுக்குத் தேவையில்லையே என்று தோன்றியது.

வேளுக்குடி கிருஷ்ணன் தன்னுடைய உபந்யாசத்தில் அடிக்கடி ஒரு கருத்தை வலியுறுத்துவார்.

'பெருமாளை மட்டும் தரிசிக்கவேண்டும் என்றால், நம் வீட்டிலுள்ள பூஜை அறையிலேயே தரிசித்துக்கொள்ளலாம். திருப்பதிக்கு செல்லும் நோக்கமே, வரிசையில் நின்று செல்லும்போது வைணவர்கள் ஒருவருடன் ஒருவர் இடித்துக்கொண்டு, அதனால் ஏற்படும் தெய்விகத்தன்மையின் ஆனந்தத்தை அனுபவிப்பதற்காகத்தான்!' என்று சொல்வார்.

காசு கொடுப்பவர்களுக்கும், காசு மாலை கொடுப்பவர்களுக்கும் தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுமானால் சலுகை காட்டலாம். ஆனால், பெருமாள் காட்டமாட்டார். கோடி ரூபாய் கார், பல லட்சம் ரூபாய வாட்ச், செல்போன் என்று உபயோகிப்பது இப்போதைய நாகரிகமாகிவிட்டது. முடியாதவர்களின் பொறாமையைக் கண்டு பெருமைப்படுவது, முடிந்தவர்களின் ஒரு கொடூர சந்தோஷமாகி விட்டது. தற்போதைய பொருளாதாரச் சரிவு இந்த மதம் பிடித்த யானைகளுக்கு சரியான அங்குசம் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒருசமயம், ஏசு கிறிஸ்து ஒரு ஊருக்குச் சென்றபோது, அந்த ஊரிலுள்ள பெரும் பணக்காரர்களெல்லாம் முத்து, பவளம் மற்றும் தங்கத்தினாலான ஆபரணங்களைக் கொண்டுவந்து அவருக்கு காணிக்கையாகச் செலுத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் தயங்கியபடியே நின்றுகொண்டிருந்த ஒரு மூதாட்டி தன் துணியில் முடித்து வைத்திருந்த சிறிய ஒற்றை வெள்ளிக் காசை எடுத்து ஏசுநாதரிடம் கொடுத்தாள். கூட்டம் ஏளனமாக சிரித்தது.

சிரித்தவர்களைப் பார்த்து ஏசுநாதர் சொன்னார்: ''நீங்கள் அனைவரும் உங்களிடமுள்ள பெரும் செல்வததின் ஒரு பகுதியை மட்டும் எனக்குக் கொடுத்தீர்கள். ஆனால், இந்த மூதாட்டி தன்னிடமிருந்த மொத்த செல்வத்தையும் எனக்கு கொடுத்து விட்டாள். ஆகவே, என் நினைவில் இவர்தான் உயர்ந்து நிற்கிறார்!'

பல ஊர்களுக்கு நடந்தும், கழுதை மேல் ஏறியும் சென்ற அந்த ஏழை மரத்தச்சன் மகனின் எளிய பல அறிவுரைகளை இன்று ஆடம்பர கார்களில் போய், நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, ஏசி அறைகளில் போதிக்கிறார்கள்!

பெரும் செல்வமும் அதனால் ஏற்படும் கர்வமும் உங்களை இறைவனையும், மகிழ்ச்சியையும் அண்டவிடாமல் சிறைப்பிடித்து வைத்திரும். இருப்பதை இல்லாவர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்துவிட்டால் சிறைக்கதவு தானே திறக்கும்!

வேங்கடம் எழுதிய 'இனி எல்லாம் சுகமே...' நூலிலிருந்து....

புத்தகம்:விகடன் பிரசுரம்


சத்தமில்லா சரித்திரம்

Author: Nagaraji.B /

அந்நியனிடம் அடிமைப்பட்டிருப்பதை நினைத்துக் கொந்தளித்து அலையலையாய்த் திரண்ட இடம் சென்னை மாநிலக் கல்லூரிக்கு எதிரே இருக்கும் திலகர் திடல். சீமைக்காரனுக்குச் சிம்மச் சொப்பனமாய் இருந்த சுப்ரமணி சிவாதான் இந்த இடத்துக்கு 'திலகர் திடல்' என்று பெயரிட்டார். திலக மாமுனிவர் இந்தியா சுதந்திரம் பெற தலைமை தாங்கிய மகாணாக திகழ்ந்து வந்தார். ஆகவே அவன் நினைவாக இந்த இடத்துக்கு திலகர் திடல் என்ற பெயரை பொறுத்தமாக சூட்டினார் சுப்ரமணிய சிவா.

ஆனால் நடந்தது என்ன? திலகர் திடலாக திகழ்ந்த இடம் நாளடைவில் அரசாங்க மாறுதல்களால் சீரணி அரங்கமாக மாறியது.

சுதந்திர வேள்வியை வளர்த்த இந்த மண்ணின் வீரியம் வீணாக வேண்டுமா? திலகரின் நாமம் என்றென்றும் இங்கே விளங்கவேண்டும் என்று உள்ளம் கொதித்து எழுந்தார். யார்? இன்றைய 'பாரத மணி' பத்திரிகை ஆசிரியர் திரு. பி.என்.சீனிவாசன்.

'திலகர் கட்டம்' என்கிற இந்த மண்ணின் பெயர் நிலைத்திருக்கவேண்டும். அதற்கு ஓர் நினைவுச் சின்னம் வேண்டும் என்று அரசிடம் அனுமதி கேட்டார்.

''சுதந்திரமா? போராட்டா? பழங்கதை!'' என்று பதிலளிக்காமலேயே ·பைலை மூடிவிட்டது அரசாங்கம்.

சீனிவாசனும் அவரது குழுவினரும் துடித்தனர் துவண்டனர். சிந்தித்தனர். செயல்பட்டனர்.

உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வெற்றி பெற்றனர்.

விளைவாக உயர்நீதி மன்ற உத்தரவால் கல்வெட்டு ஒன்று 26-01-2010 குடியரசு தினத்தன்று கோலாகலமாய் ஆனால் சத்தமில்லாத ஒரு சரித்திரமாக திலகர் திடலிலே நாட்டப்பட்டுள்ளது.

அது கல்வெட்டா? அல்ல. தியாகப் பெருமக்களின் மங்களா சாசனம். விடுதலை வேள்வியின் சிம்மாசனம்.

கண்களைக் காக்கும் ஸ்பெஷல் சமையல்

Author: Nagaraji.B /

மூலிகை சமையல்
கண்களைக் காக்கும் ஸ்பெஷல் சமையல்
எஸ்.ஆர். கிஷோர் குமார்


''காந்த விழிகள், கவர்ச்சிப் பார்வை, மான் விழி, மயக்கும் கண்கள், குறுகுறுக்கும் இள¨மை வழியும் நயனங்கள்'' இப்படியெல்லாம் கதைகளில் வர்ணிக்கப்படும் கண்கள்.
''உனக்கு அளிக்கப்பட்ட இளமை கோட்டா ஓவர்'' என்று இவை டாட்டா காட்டி மறைந்து, வயது ஏறு முகமாகும்போது என்னவாகின்றன?
கண்களின் ஒளிகுன்றி, கண்ணின் கீழ் உப்பலான பை போன்ற வீக்கத்தாலும், சுருக்கங்களாலும் நிலைகுலைந்து வீழ்ந்து விடுகிறது. இந்த இளமை.
கண்களைச் சுற்றியுள்ள தசைகள் தளர்ந்த விடுவதால் டொக்கு விழுந்து விடும்நிலை. கண் புரை வளர்தல், ரெட்டினா விலகல், கிளாக்கோமா, வெள்ளெழுத்து போன்ற கண் குறைபாடுகள் வேறு அடுக்கடுக்காகத் தோன்றி இம்சைப் படுத்திவிடும்.
நாற்பது ஏன் முப்பதைக் கடந்த உடனேயே உணவில் கொஞ்சம் கவனம் செலுத்தினால், கண்பார்வையை முடிந்தவரை, சீராக வைத்துக் கொள்ளலாம்.
கண் பார்வையைக் கூர்மைப்படுத்தும் இயற்கை வரப்பிரசாதங்கள் எத்தனையோ! அதில் முதன்மை பெற்ற ஒரு சிறப்பான மூலிகையைக் காண்போம்.
பொன்னாங்கண்ணிக் கீரை
இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்கள் பொன்போல் ஆகிவிடுமாம். அதாவது பொன்னைப்போல போற்றிக் காக்க வேண்டிய கண்களுக்கு உகந்தது என பெரியோர் கூறுவர்.
பளபளக்கும் மேனியெழிலுக்கும், தெள்ளிய பார்வைக்கும் உகந்தது இந்தக் கீரை.
பொன்னாங்கண்ணி துவையல்
தேவையானவை:
ஆய்ந்த சுத்தம் செய்த பொன்னாங்கண்ணி இலைகள்: 1 கப்
தக்காளி துண்டுகள் - 2 மேஜைக் கரண்டி
மிளகு : 10
உப்பு : ருசிக்கேற்ப
தேங்காய் துருவல் : ஒரு மேஜைக் கரண்டி
நெய் : 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை : தாளிதம் செய்ய
செய்முறை:
சுத்தம் செய்த இலைகளைக் கழுவி ஈரம் போக காற்றாட வைக்கவும்.
வாணலியைச் சூடாக்கி நெய்யை உருக வைத்து அதில் மிளகாய் வறுத்து எடுக்கவும். தேங்காய்த் துருவலை லேசாக வறுத்து எடுக்கவும். தக்காளி மற்றும் இலைகளை வதக்கி எடுக்கவும்.
இலைகள், தேங்காய்த் துருவல், தக்காளி, மிளகு தேவையான உப்பு யாவையும் ஒன்றாக்கி சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும். கண்டிப்பாக புளி சேர்க்கக்கூடாது.
தாளிதம் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிலாம்.
'ஆராக்கிய மூலிகை சமையல்' நூலிலிருந்து...
புத்தகம் கிடைக்குமிடம்:
பிரேம் சாய் பப்ளிகேஷன்ஸ்
39/13 நாகப்பன் தெரு
புதுப்பேட்டை
சென்னை - 600 002
போன் - 98403-60797

ஒரு சாப்பாடு 37 பைசா

Author: Nagaraji.B /

இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி தொழிலாளர் போராட்டத்தினால் பத்திரிகை காரியலாயத்தைக் கதவடைப்பு செய்துவிட்டார் திரு.கோயங்கா அவர்கள். லேபர் கமிஷனரின் சமரச முயற்சி தோல்வி அடைந்தது. சில காலம் கழித்து சித்தூரிலிருந்து எக்ஸ்பிரசும் தினமணியும் வெளிவந்து கொண்டிருந்தன. நாங்கள் கேண்டீனை மூடிவிட்டோம். P.M.G. ஆபீசும், மவுண்ட் ரோடு புதிய கட்டிடத்தில் இயங்கியது.

A.G.S. ஆபீசும் தேனாம்பேட்டையில் புதிய கட்டிடத்தில் இயங்கியது. எனவே எங்களுக்கு வியாபாரம் இல்லாததால் நாங்களும் மூடிவிட்டு வெளியில் வியாபாரத்துக்கு (இதே ஓட்டலுக்கு) இடம் தேடிக்கொண்டிருந்த சமயம் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார். கிண்டியில் ரயில் நிலையம் அருகில் ஒரு சாய் பாபா கோவில் இருக்கிறது. அதை லோகனாத முதலியார் என்ற பெரியவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அந்தப் பகுதியில் நிறைய காலி இடங்கள் இருக்கின்றன. அவரைப் போய் பாருங்கள் உங்கள் ஓட்டலுக்கு இடம் கிடைக்கும் என்றார்.
நானும் என் சகோதரரும் மறுநாள் காலை 8 மணிக்கு ஆலந்தூர் பஸ்ஸில் ஏறி கத்திப்பாரா என்ற பஸ் ஸ்டாப்பிங்கில் இறங்கினோம். அதன் அருகில் ரயிலடியும் சாய்பாபா கோவிலும் இருந்தது. கோவிலில் வாசல்படியில் இருவரும் உட்கார்ந்தோம். அப்பொழுது சுமார் 50 வயது மதிக்கக் கூடிய ஒரு பெரியவர் வந்து எங்களைப் பார்த்து கோவிலுக்கா வந்திருக்கிறீர்கள்? உள்ளே போய் பாபாவைப் பாருங்கள் என்றார். ஆமாம் நாங்கள் சாய் பாபாவையும் உங்களையும் பார்க்கதான் வந்தோம் என்று சொல்லிவிட்டு முதலில் பாபாவை தரிசனம் (ஷீரடி சாய் பாபா) செய்துவிட்டு அவரிடம் விஷயத்தைச் சொன்னோம். அவரும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்த ஒரு பெண்மணி 40 வயதுக்குள் இருக்கும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவர்; கமலா என்று கூப்பிட்டு எங்களைச் சுட்டிக்காட்டி ஐயர் பாக்டரி பக்கத்தில் இருக்கும் இடத்தை இவர்களை அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்துவா என்றார். எனக்கும் சகோதரருக்கும் ரொம்ப சந்தோஷம். பெரியவர்தான் என்று மனதில் வாழ்த்திக் கொண்டே அந்த பெண்மணியுடன் போனோம். அது ஆலந்தூருக்குத் திரும்பும் வழியல் முதலில் இருந்தது. நீண்ட ஹால், பின் பக்கம் முழுதும் அதே மாதிரி காடிகானாவைப் போல் இருந்தது. ஆனால் ரோடிலிருந்து சுமார் 100 அடி தள்ளி இருந்தது. அப்பொழுது அங்கே கிண்டி தொழில்பேட்டை உருவாகிக் கொண்டிருந்தது.

காமராஜ் முதல்வர். இவருக்குத் துணைவராக சுப்ரமணியம், பக்தவம்சலம், R. வெங்கட்ராமன் போன்ற கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மூன்றும் ஒருங்கே நிறைந்த மக்கள் நலத்தில் உண்மையான அக்கறை உள்ள மந்திரிகள் ஆண்டு கொண்டிருந்த காலம். இந்த இண்டஸ்ட்டிரியல் எஸ்டேட் அங்கு வந்ததினால் வெறும் குதிரைப் பந்தய சூதாடிகள் மட்டுமே அறிந்திருந்த கிண்டி எல்லோருக்கும் தெரிந்த இடமாய் தொழில் பேட்டை ஆனது. அதற்கு காரணம் காமராஜ் மந்திரிசபையில் இந்த R. வெங்கட்ராமன்தான். இடத்தைப் பார்த்துவிட்டு லோகனாத முதலியாரிடம் வந்தோம். ''இடம் பிடித்து இருக்கு சார், வாடகை அட்வான்ஸ் எவ்வளவு வேண்டும்'' என்று கேட்டோம். அதற்கு அந்த பெரியவர் (வயதிலும் மட்டுமல்ல, மனதிலும் மிகப் பெரியவர்) சொன்னார். ''தம்பி, எனக்கு அட்வான்ஸ் எதுவும் வேண்டாம். உங்களால் அந்த இடத்தில் ஓட்டல் நடத்த முடியுமா?'' என்று கேட்டார். ''முடியும்'' என்று என் சகோதரர் கூறினார். ''சரி அப்படியானால் தினசரி 5 ரூபாய் வாடகையைக் கொடுத்து விடுங்கள். அட்வான்சும் தேவை இல்லை. மாத வாடகை வேண்டாம். தினசரி 5 ரூபாய் வீதம் கொடுத்து விடுங்கள். ஓட்டலுக்கு ஏற்றபடி இடத்தை உங்கள் செளகரியப்படி உங்கள் செலவில் நீங்கள் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டார். எங்களக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் அவ்வளவு இடத்திற்கு 500 ரூபாய்க்கு குறைந்து வாடகைக்கு நிச்சயம் கிடைக்காது. அந்தப் பெரியவர் வக்கீல் தொழில் நடத்தி வந்தவராம். இப்பொழுது தான் மட்டும் அங்கே இருக்கிறார். குடும்பம் வெவ்வேறு இடத்தில் வசதியாக இருக்கிறார்கள்.
தினமணி ஆபீஸில் கேன்டீன் நடத்தி சுமார் 10,000 ரூபாய் வரை சம்பாதித்து பேங்கில் போட்டிருந்தோம். 5 ஆயிரம் எடுத்து எல்லாச் சாமான்களும் புத்தம் புதியதாக ஆர்டம் கொடுத்து வேலைக்கு ஆட்களும் ஏற்பாடு செய்து 1960 ஜூன் மாதம் 1 தேதி விக்னேஸ்வர பவன் என்ற பெருடன் ஓட்டலை திறந்தோம். 2000 நோட்டீஸ் அடித்து இண்டஸ்டிரியல் எஸ்டேட் முழுவதும் கொடுத்தோம். கத்திப்பாரா என்ற பெயர் உள்ள இடத்தில், தொழில் பேட்டைக்கு எதிர்ப் பக்கம் இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்தோ அல்லது அதற்கு அப்பாலிருந்தோ பஸ்ஸிலும், காரிலும் சைக்கிளிலும் நடந்தும் வருபவர் கண்ணில் பார்வையில் எங்கள் விக்னேஸ்வர பவன் படாமல் தப்ப முடியாது. எங்கள் எதிர்பார்ப்பைவிட வியாபாரம் இருமடங்கு நடந்தது. நாங்கள் எதிர்பார்த்தது 200 -லிருந்து 300 வரைதான். ஆனால் 550-லிருந்து 600 வரை நடந்தது. தினமணிக்குக் கேண்டீனில் 6 பேர்கள் மட்டுமே வேலைக்கு இருந்தார்கள். இந்த கடைக்கு மொத்தம் 22 பேர்கள். எல்லோருக்கும் வாரச் சம்பளம். இரண்டு சமையல்காரர்களுக்கு மட்டும் மாதச் சம்பளம். எல்லாருக்கும் தினசரி நான்கு அணா. அந்த காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்காகவும், மற்ற சில்லறை செலவுகளுக்காகவும் எல்லாம் ஓட்டல்களிலும் கொடுப்பது வழக்கம்.
1961 -ஆம் ஆண்டு விலைவாசிப்படி எங்கள் ஓட்டலின் விலைகளை உள்ளபடி எழுதியிருக்கிறேன்.
அளவு சாப்பாடு 37 பைசா (அதாவது 6 அணா) சாப்பாடு வாழை இலையில்தான். 1 பொரியல், 1 கூட்டு, 1 பச்சடி, 1 அப்பளம், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய்.
மற்ற விலைகள்:
கப் காபி 12 காசு, தோசை 12 காசு, பூரிகிழங்கு 12 காசு, பொங்கல் 12 காசு, மசால் தோசை 15 காசு, இட்லி 5 காசு, வடை 5 காசு.
-
'ஜெமினி கேன்டீண்' நூலிலிருந்து....
புத்தகம் கிடைக்குமிடம்:
சாந்தி பதிப்பகம்
27, அண்ணா சாலை
சென்னை - 600 002

சுதந்திரத்தையே விற்ற நாடு மொனாகோ

Author: Nagaraji.B /

வாமன தேசங்கள்

சுதந்திரத்தையே விற்ற நாடு மொனாகோ
- ஜி.எஸ்.சுப்பிரமணியன்
ஆண் வாரிசு இல்லாமலேயே அந்த இளவரசர் இறந்துவிட்டால் மொனாகோ ஃபிரான்ஸுக்குச் சொந்மாகிவிடும்!
சென்னையை விடுங்கள், அதிலுள்ள ஒரு சராசரி தொகுதி அளவுக்குக்கூட இருக்காது மொனாகோ. இரண்வு சதுரகிலோமீட்டரைவிடக் குறைவான பரப்பளவு. அப்படியானால் பிரபல பன்னாட்டு நிறுவனங்கள் மொனாகோவில் தங்கள் கிளைகளைத் திறக்க ஆர்வம் காட்டுவது ஏன்? தெரிந்து கொள்ள மொனாகோவின் சரித்திரப் பக்கங்களைக் கொஞ்சம் புரட்ட வேண்டும்.
சில வருடங்களுக்கு முன் இப்போது இருப்பதைவிடக் குறைவான பரப்பளவு கொண்டதாகத்தான் மொனாகோ இருந்தது. கடல் கொஞ்சம் பின்னடைந்ததால் இலவசமாக 100 ஏக்கர் பரப்பளவு வந்து சேர்ந்திருக்கிறது!
1861க்குப் முன்பு இப்போதைப் போல இரண்டு மடங்கு அதிகமானதாக இருந்தது மொனாகோ. என்ன செய்ய...! நிதி தேவைப்பட, தன்னில் பாதியை ஃபிரான்ஸுக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மொனாகோவுக்கு. இதனால் நிலப்பகுதியை மட்டுமல்லாமல் அதில் உள்ள இயற்கை வளங்களையும் சேர்த்தே இழந்ததனால் மொகாகோவின் பொருளாதாரத்துக்கு மிகவும் பபிதப்பு. அதைச் சரிக்கட்ட அப்போதைய இளவரசர் மொனாகோவில் மாண்டே கார்லோவை உருவாக்கினார். அதற்குப் பிறகு உலகத்து கோடீஸ்வரர் எல்லாம் இங்கு வந்து ஆனந்தமாகத் தங்கள் பணத்தைத் தொலைத்துவிட்டுப் போவது வாடிக்கையாகிவிட்டது.
மாண்டே கார்லோ பகுதியில் உலகப் புகழ்பெற்ற காசினோக்கள் (சூதாட்ட நிலையங்கள்) இருக்கின்றன. (007 ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் தகவல் - முதல் ஜேம்ஸ்பாண்ட் கதைகூட மொனாகோவில் உள்ள காசினோக்களைப் பின்னணியாகக் கொண்டு உருவானதுதான்)
தனக்கு ராணுவப் பாதுகாப்பு வேண்டும் என்று ஃபிரான்ஸை அணுகியது மொனாகோ. ஒப்பந்தம் போட்டுக் கொள்ளத் தயாரானது ஃபிரான்ஸ். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு முக்கிய நிபந்தனை மொனாகோவை அதிரவைத்தது!
இனி மொனாகோ தன் சுதந்திரத்தை ஃபிரான்ஸுக்கு விட்டுத் தந்துவிட வேண்டும். மறுத்தது மொனாகோ. மீண்டும் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை, கடைசியில் மிக மிக விநோதமான ஒரு நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டது மொனாகோ.
அப்போது மொனாகோவை ஆண்டுவந்த இளவரசர் மூன்றாம் ரெய்னியர் திருமணமாகாத இளைஞர். ஆண் வாரிசு இல்லாமலேயே அவர் இறந்துவிட்டால் மொனாகோ ஃபிரான்ஸுக்குச் சொந்தமாகிவிடும்!
இவளரசருக்குத் திருமணம் செய்து கொள்ளும் �ண்ணமே இல்லை என்று தெரிந்தே ஃபிரான்ஸ் இதனை வலியுறுத்தியது.
மனம் மாறியதோ அல்லது உடன்படிக்கை காரணமாக மனத்தை மாற்றிக் கொண்டாரோ தெரியாது; இளவரசர் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார். அந்தப் பெண் உலகெங்கும் பல ஆண்களின் கனவுநாயகியாக விளங்கிய நடிகை கிரேஸ் கெல்லி.
திருமணம் நடந்தது. குழந்தையும் பிறந்தது. அது ஆண் வாரிசு! விடுதலை என்று ஆனந்த் கூத்தாடினார்கள் மக்கள்.
இன்றுவரை மொனாகோவில் மன்னர் ஆட்சிதான். இதன் அதிகாரப்பூர்வமான பெயர்கூட (பிரின்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட) The Principality of Monaco என்பதுதான். ஏழு நூற்றாண்டுகளாக மொனாகோவை ஆட்சி செய்வது கிரிமால்டி குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள்தான்.
1297ல் ஃபிராங்காயில் கிரிமால்டி என்பவர் துறவி வேடத்தில் ஒரு சின்னப் பையனோடு நுழைந்து மொனாகோ கோட்டையைத் தம் வசமாக்கிக் கொண்டதிலிருந்தே அது அவர்கள் ராஜ்ஜியம்தான். (சமீபகாலமாக, போனால் போகிறது என்று ஒரு தேசியக்குழுவுடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க பெரிய மனது செய்திருக்கிறார் இளவரசர்).
1943ல் இத்தாலிய ராணுவம் மொனாகோவைக் கைப்பற்றியது, ஒருவிதத்தில் கொடுங்கோல் ஆட்சிதான். பின் ஜெர்மனியைச் சேர்ந்த நாஜிக்களின் பிடிக்குள் அது சென்றது இந்த நிலையில்தான் மூன்றாம் ரெய்னியர் பட்டத்துக்கு வந்து ஃபிரான்ஸின் ராணுவ உதவியைக் கோரினார். 56 வருடங்கள் இவர் தொடர்ந்து ஆட்சி புரிந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மொனாகோவில் இன்று ஐந்தில் ஒருவர்தான் உள்ளூர்வாசி. வெளிநாடுகளிலிருந்து மொனாகோவுக்கு வந்துநிரந்தரமாகத் தங்குபவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் என்ன தெரியுமா? காசினோக்களா? இல்லை மொனாகோவில் வருமானவரி கிடையாது என்பதுதான் முக்கியக் காரணம். இதனால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் மொனாகோவில் தங்கள் கிளையைத் திறப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றன.
ஆனால் இதற்கும் வந்தது வேட்டு. பல நாடுகளும் இப்படித் தங்கள் செல்வம் மொனாகோவில் குவிவதைக் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, மொனாகோ சமீபகாலமாக ஒரு வித்தியாசமான நடைமுறையைப் பின்பற்றுகிறது.
வெளியூரிலிருந்து வந்து தங்குபவர்களுக்கு வருமானவரி உணடு. காசினோக்களில் தாராளமாக அவர்கள் சூதாடலாம். மண்ணின் மைந்தர்களுக்கு வருமான வரி கிடையாது. ஆனால் அவர்கள் காசினோக்களில் தாராளமாக அவர்கள் சூதாடலாம். மண்ணின் மைந்தர்களுக்கு வருமானவரி கிடையாது. ஆனால் அவர்கள் காசினோக்களில் ஆடக்கூடாது. ஆடுவது மட்டுமல்ல, நுழையவே கூடாது!
சூதாட்டத்துக்கு மட்டுமல்ல வேறொரு சாகச விளையாட்டுக்கும் உலகப்புகழ்பெற்றது. மொனாகோ, இங்கே நடைபெறும் மொனாகோ கிராண்ட் ஃப்ரீ பந்தயம் ஒரு மாபெரும் திருவிழா. உலகின் பல பகுதிகளில் இந்தப் பந்தயம் நடந்தாலும், மொனாகோவில் ஜெயிப்பது தனிப்பெருமைதான். காரணம் இங்கு அமைந்துள்ளது. மிகவும் சவாலான பந்தயப் பாதை. நடுவே மிக மிகக் குறுகுலான கடினமான சந்துகளையேல்லாம் கடக்க வேண்டும்.
1983ல் ஐ.நா.சபையின் உறுப்பினரானது மொனாகோ. 2002ல் ஃபிரான்ஸுக்கும் மொனாகோவுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. இனி கிரிமால்டியின் வம்சம் மொனாகோவை ஆளக்கூடாது. தனி சுதந்திர நாடாகவே மொனாகோ இருக்கும். ஆனால் அதற்கான ராணுவ பாதுகாப்பை ஃபிரான்ஸ் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்!
ஃபிரான்ஸ் முதலாளியா? முள் முதலாளியா? இப்படி ஒரு கேள்வி அடிக்கடி எழுந்தாலும் மொனாகோ மக்கள் தங்களுக்கு விட்டுவிட்டுக் கிடைத்துவரும் சுதந்திரத்தை அனுபவித்துப் பூரிக்கிறார்கள்தான்.
* மொனாகோவில் இது தலைநகரம், இது நாடு என்று எந்தப் பிரிவுக்கோடும் கிடையாது. அதுவே இது. இதுவே அது! அங்கே தங்கியிருப்பவர்களில் 84 சதவிகிதம் வெளிநாட்டவர்கள்.
* கிரேக்க வார்த்தையான மொனோக்கோஸ் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான் மொனாகோ. அந்த கிரேக்க வார்த்தைக்கு அர்த்தம் ஒரே குடியிருப்பு.
* மொனாகோ கொடியை வரைவது ரொம்ப சுலபம். மேல்பாதி சிகப்பு, கீழ்பாதி வெள்ளை அவ்வளவே.
* ஹெர்குவிஸ் தெரியுமல்லவா? பலத்துக்கு� உதாரணமாகக் கருதப்படும் கிரேக்க வீரன். அவன் ஒரு முறை மொனாகோ வழியாகச் சென்றானாம். அங்கிருந்த தெய்வங்களையெல்லாம் அனுப்பிவிட்டானாம். எனவே ஹெர்குலஸுக்கு என்றே ஒரு ஆலயமும் இங்கு எழுப்பப்பட்டிருக்கிறது.
* புகையிலையிலிருந்து தபால்துறைவரை பலவும் அரசின் பிடியில்தான்.
* ஐரோப்பாவில் இருந்தாலும், ஐரோப்பிய யூனியனில் மொனாகோ உறுப்பினர் அல்ல. எனினும் நாணயம் யூரோதான்! மொனாகோவில் பாரம்பரியச் சின்னங்கள் கலந்த யூரோ நாணயங்களை வெளிவிடுகிறது மொனாகோ.
* அதிகாரபூர்வமான மதம் கத்தோலிக்க மதம்.
* மொனாகோவில் எத்தனை நகராட்சிகள் தெரியுமா? இரண்டுக்கு முந்தைய எண் எது? ஆம், அதுதான் விடை!

Become a பிஸினஸ் மேக்னட்!

Author: Nagaraji.B /


நானும் வருஷக்கணக்கா ஒரு கம்பெனி தொடங்கி சாதிக்கணும்னு கனவு காண்றேன். ஆசை வெறும் கானல்நீராப் போச்சு என்று தொழில் ஆர்வம் உள்ளவர்கள் கவலையுடன் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். இதில் பலர் அதிர்ஷ்டத்தையும் ஜாதகத்தையும் காரணம் காட்டுவார்கள்; என்னிடம் பணம் இல்லை; படிப்பு இல்லை; உதவும் சொந்தக்காரர்கள் இல்லை; அனுபவம் இல்லை; என் உடல்நலத்தில் பல கோளாறுகள்; பெண்ணாகப் பிறந்துவிட்டேன்... இப்படி பல சாதனையாளர்களுக்கு இந்தக் காரணங்கள் இருந்திருக்கின்றன. ஆனாலும் அவர்கள் ஜெயித்துக் காட்டியிருக்கிறார்கள் எப்படி?
தொழில் தொடங்கப் பணம் வேண்டாம்



* இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், துபாய் போன்ற 18 நாடுகளில் 64 உணவகங்கள், 18 பேக்கரிகள், ஆண்டு விற்பனை 120 கோடிக்கும் மேல்! ஹாட் பிரெட்ஸ் மகாதேவன் வியாபாரம் தொடங்கியபோது, அவரிடம் இருந்த பணம் ஐநூறே ரூபாய்.



* 23 கிளைகள் பல இறக்குமதி, காளான் வளர்ப்பு ஆகிய துறைகளில் முத்திரை பதித்திருக்கும் கோவை பழமுதிர் நிலையம் தொடங்கியவர் சின்னசாமி. அவருடைய முதல் கடை, தள்ளு வண்டி!



தொழில் தொடங்க படிப்பு வேண்டாம்
* நம்மைப் பேரீச்சம்பழ ரசிகர்களாக்கிய லயன் டேட்ஸ் நிறுவன அதிபர் பொன்னுத்துரையின் படிப்பு பத்தாம் வகுப்பு.



தொழில் தொடங்கச் செல்வாக்கான குடும்பப் பின்னணி வேண்டாம்
Bharatmatrimony.com சுமார் பத்து லட்சம் திருமணங்கள் நடக்கப் பாலமாக இருந்திருக்கிறது. மாதம் 35 லட்சம்பேர் உறுப்பினர்களாகச் சேர்கிறார்கள். இந்த வெற்றிக் கதைக்கு வித்திட்ட முருகவேல் ஜானகிராமனின் அப்பா, சென்னை துறைமுகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி. பதினாறு ஒண்டுக் குடித்தனங்களுக்கு நடுவில் ஒரே ரூம் வீடு.



தொழில் தொடங்க அனுபவம் வேண்டாம்
* அறுநூறு கோடிக்கும்மேல் வருட வருமானம் தரும் நம் எல்லே,�ருக்கும் பரிச்சயமான ஃபேஸ்புக்(Facebook) தொடங்கியவர் மார்க் ஸூக்கர்பெர்க் (Mark Zuckarberg) கம்பெனி தொடங்கியபோது அவர் இருபது வயதுப் பொடியர்.



தொழில் தொடங்க சிறப்பான உடல்நலம் வேண்டாம்
* டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger) வடிவமைக்கும் சட்டைகள், டி ஷர்ட்கள் உலகம் முழுக்கப் பிரபலம். இவர் உரை மாறுபாடு எனத் தமிழில் கூறப்படும். நரம்புக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர்.



தொழில் தொடங்க ஆணாக இருக்க வேண்டாம்
* பயோகான் நிறுவனம் இந்தியாவின் முன்னணி பயோடெக் கம்பெனி. ஆண்டு வருமானம் சுமார் ஆயிரம் கோடி. இதை நிறுவி, தலைமையேற்று நடத்துபவர் திருமதி கிரஸ் மஜும்தார் ஷா.



* பாரு ஜெயக்கிருஷ்ணா, குஜராத் மாநிலத்தில் இவர் குடும்பம் பிஸினஸில் ஈடுபட்டிருந்தது. ஏகப்பட்ட நஷ்டம். கம்பெனி மூடப்பட்டது. குழந்தைகள், குடும்பச் செலவுகளுக்கு சொத்துக்களிலிருந்து வந்த வாடகை வருமானம் போதவில்லை. அஸாஹி ஸாங்கோவன் Asaahi Songowon) என்ற பெயின்ட்களுக்கான மூலப்பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியை தம் 48வது வயதில் தொடங்கினார். அதன் இன்றைய வருட விற்பனை இருநூறு கோடிக்கும் மேல்.



எனில் பிஸினஸ் தொடங்க என்னதான் வேண்டும்?
* முன்னேறும் வெறி, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல், தெளிவான இலக்கு, கடும் உழைப்பு, வித்தியாசச் சிந்தனை, நிர்வாகத் திறமை, அவ்வளவுதாங்க... அது போதும்!
- எஸ்.எஸ்.வி. மூர்த்தி


இருட்டுக்கடை ரகசியம்!

Author: Nagaraji.B /

இருட்டுக்கடை ரகசியம்!

நெல்லையப்பர் கோயில் எதிரே அந்தி வெயில் சாய்ந்து சுள்ளென முதுகில் படர்கிறது. ஆண்களும், பெண்களுக்குமாய்ப் பூட்டியிருக்கும் கடை முன்பக்க வரிசை கட்டி நிற்கிறார்கள். இது என்ன ரேஷன் கடையா? கேட்டால், இதாம்ல, இருட்டுக் கடை அல்வா; உலக பேமஸ்ல என்கிறார் ஒருவர்.
வருஷம் இருக்கும், இந்தக் கடை ஆரம்பித்து! கிருஷ்ணசிங் இதனோட நிறுவனர். அவரது மகன் பீஜிலிசிங். இந்த இரண்டு பேரோட காலத்துக்குப் பிறகு, தற்போது நிர்வாகத்தை நடத்தி வருபவர் ஹரிசிங். பூர்வீகத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்துலேர்ந்து வந்தவர்கள் நெல்லையிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள்.
அந்தக் காலத்துல ஒரு அரிக்கேன் விளக்கை மட்டும் எரிய விட்டு இந்தக் கடையை நடத்தி வந்தார் என் அப்பா. அப்ப எல்லாம் சாயந்திரம் ஆறு மணியிலேர்ந்து ராத்தி பத்து மணி வரைக்கும்தான் கடை திறந்திருக்கும். துவக்க காலங்கள்ல நெல்லை மக்கள், அந்திக்கடைனு தான் சொல்லி வந்தாங்க. அதுக்கு கொஞ்ச வருஷம் கழித்து ஜனங்க என்ன நெனைச்சாங்களோ தெரியலை. இருட்டு நேரத்தில் மட்டும் திறந்து யாவாரம் நடக்குறதால பொதுமக்களே இருட்டுக்கடைனு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. உலகத்திலேயே வாடிக்கையாளர்களா பேர் வெச்சது எங்க கடைக்கு மட்டும்தான்! எனப் பெருமிதம் கொள்கிறார் ஹரிசிங்.
கடை வாசலில் பெயர் பலகையோ, அதன் முகப்பில் மின்விளக்கோ கூட கிடையாது. சிறிய கடையின் உள்ளே அறுபது வால்ட் குண்டு பல்பு மட்டுமே. மின்சாரம் இருந்தும், அதுவும் நவீன மின்விளக்கு வசதிகள் ஏராளம் வந்தும் அநியாயத்துக்கு ஏனிப்படி அடம்பிக்கிறீர்கள்? என்றால்,
''இருட்டுக்கடை அல்வா சூப்பர்னு ஒரு நிரந்தர டிரேட்மார்க் எங்க மேல விழுந்திடுச்சு. அதை நாங்க ஏன் மாத்தணும்? கடைக்கு மின்சாரம் சப்ளை வந்த பிறகும், ஒரே ஒரு குண்டு பல்புதான் மாட்டினாங்க என் அப்பா. அது ப்யூஸ் போனா, புதுசா ஒரு குண்டு பல்பு போட்டுடுவோம். அவ்வளவுதான். அதை இன்னியவரைக்கும் கடைபிடிச்சு வர்றோம். மத்தபடி எங்க கவனம் முழுவதுமே நாங்க தயாரிக்கிற அல்வாவின் குவாலிட்டிய மெய்ன்ட்டெய்ன் பண்ணிட்டு வர்றதுலதான் இருக்கும்'' என்கிறார் ஹரிசிங்.


ஆத்துத் தண்ணி, அரைக்கிற பக்குவம்!

''எந்தவிதமான எந்திரமும் இல்லாமல் கல் உரலில் ÷ பாட்டுத்தான் கோதுமையை அரைக்கிறோம். சுத்தமான சம்பா கோதுமை, நெய், சர்க்கரை, தாமிரபரணி தண்ணீர். இவை நான்கும் ரொம்ப முக்கியம். முந்திரிப்பருப்பு, அது... இது... என எக்ஸ்ட்ராவாக எந்தப் பொருளையும் சேர்ப்பதில்லை. நிறம் வேண்டும் என்பதற்காக கலர் பவுடர் எதையும் போடுவதில்லை. சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊற வைக்கணும். மறுநாள் உரல்ல போட்டு நல்லா அரைக்கணும். அரைக்க அரைக்க கோதுமை பாலாக மாறி வரும். இந்தப் பாலை வடிகட்டி எடுத்து பெரிய இரும்புச்சடியில் ஊற்றி நன்கு கொதிக்க கொதிக்க கிளறணும். அந்தப் பால் இலேசாகச் சூடானதும் சர்க்கரை போட்டுக் கிண்டனும். கிளறுவதை விட்டுவிடக்கூடாது. பாலும் சர்க்கரையும் இறுகிக் கெட்டியான பதத்துக்கு வரும்போது நெய்விட்டுக் கிறளணும். அல்வா குங்கும நிறத்தில் உருவாக ஒரு இறுகலான பதத்துக்கு வந்ததும், இறக்கி ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைத்து ஆறியபின் எடுத்துச் சாப்பிட்டால், அதாங்க இருட்டுக் கடை அல்வா!''


மஞ்சரி : 10/10 எப்போதும் வெற்றி ! எல்லோருக்கும் வெற்றி !! - நந்தவனம் சந்திரசேகரன்

Author: Nagaraji.B /

10/10 எப்போதும் வெற்றி ! எல்லோருக்கும் வெற்றி !! - நந்தவனம் சந்திரசேகரன்
ஜூன் 22,2009,08:49 IST

வாழ்க்கை அழகானதாக அமைய வேண்டுமானால் பலவகையான முயற்சிகளால் செதுக்கப்பட வேண்டும். தோல்விகளைத் தாங்கும் மனஉறுதி அவசியம் வேண்டும். வாழ்க்கையினுள் மறைந்திருக்கின்ற வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றுவதற்காகத்தான் நாம் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். சும்மா ஓடினால் கிடைக்குமா ? குறிப்பிட்ட கோடுகளின் இடைவெளியில்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓட வேண்டும். அந்தக் கோடுகளைப் போல் வெற்றி பெறுவதற்குக் கீழ்க்கண்ட பத்து வழிகளைப் பயன்படுத்தினால் எளிதில் கோப்பை நம் கைக்கு வரும்.





1. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்





வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து விட்டால் மனதில் அது பற்றியே அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் எனது முயற்சிகளில் இருந்து விலக மாட்டேன் என்ற உறுதியோடு இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நான் வெற்றி பெறுவேன் என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும்.




2. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும்




வெற்றிச் சிந்தனையில் மூழ்கி இருக்கும்போது, தவறிக்கூட குறுக்குவழி பற்றிய சிந்தனை வரக்கூடாது. குறுக்குவழி நம்மைச் சறுக்கலில்தான் கொண்டுபோய் விடும். எப்படிப்பட்டச் சூழலிலும் நேர்வழிகளில் மட்டுமே நமது முயற்சிகளில் இருக்க வேண்டும். தாவிக்குதிக்க நினைத்தோமானால் நம்மை நிலை நிறுத்திக் கொள்ள முடியாமல் விழுந்து விடுவோம் என்பதை மறந்து விடக்கூடாது.





3. வாய்ப்புக்களைப் பயன்படுத்திடத் தயாராக இருக்க வேண்டும்





வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதைப் பயன்படுத்த நாம் தயாராக இருக்க வேண்டும். நழுவவிட்டோமானால் பின்பு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. வராமல் கூட போகலாம். எப்போது போர் வந்தாலும், சண்டையிடத் தயராய் இருக்கும் போர் வீரனைப்போல் நாமும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். வாய்ப்புகள் வரும்போது கொக்கைப் போல் உடனே கவ்விக்கொள்ள வேண்டும்.





4. வாய்ப்புக்களைத் திறக்கும் சாவி உழைப்புதான்





வாய்ப்பு என்பது சும்மா வராது. உங்களின் கடினமான உழைப்பு தான் உங்களின் வாய்ப்பைத் தேடித்தரும். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நேர்மை, பணிவு, வேலையின் மீது காட்டும் அக்கறை... இவற்றை வைத்துத்தான் உங்களுக்கான வாய்ப்பு தேடி வரும். எனவே எப்போதும் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.





5. துணிச்சலான முடிவுகள் எடுக்க வேண்டும்





ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறது. அப்போது எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் இதை என்னால் செய்ய முடியும் என்று துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். உங்கள் திறமையை வைத்துத்தான் இந்த வாய்ப்பு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறு தயக்கமும் இல்லாமல் அதைச் சவாலாக ஏற்று வெற்றியடைய முயற்சி செய்ய வேண்டும். என்னால் முடியும் என்று முடிவெடுக்கும் துணிச்சலே உங்களுக்குப் பாதி வெற்றியைத் தந்து விடும்.





6. முடியாது, நடக்காது என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது





வெற்றிப் பெற வேண்டும் என்று முயற்சிகளில் நாம் ஈடுபடும் போது சில எதிர்மறை எண்ணங்களும் நம்மை வந்து தாக்கும். என்னால் முடியுமா ? அது நடக்குமா ? என்ற எதிர்மறையான எண்ணம் நம் முயற்சிகளைத் தடுக்கும். இதை வளர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாகக் கூட முடியாது, நடக்காது என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. முயற்சி செய்து பார்க்கிறேன். நடக்கும் என்று நம்புகிறேன் என்று நேர்மறையாகவே பேச வேண்டும்.





7. எதையும் நாளை என்று தள்ளிப்போடக் கூடாது





வெற்றியாளராக வேண்டும் என்று எண்ணுகின்ற ஒவ்வொருவரும் இதை அவசியம் கடைபிடிக்க வேண்டும். நாளை என்று தள்ளிப் போடும் வேலை, நாளை நடக்காமலே போகலாம். தள்ளிப் போடுவற்கு முக்கிய காரணம் சோம்பல்தான். எந்த வேலையையும் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். அன்றைய வேலையை அன்றே முடித்து விட்டு நாளை புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வெற்றியின் இலக்கை விரைவில் தொட வேண்டுமானால் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும்.





8. மற்றவர்கள் நம்மை வழிநடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது





நம்முடைய வெற்றிக்கு மற்றவர்கள் வந்து வழி நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. நாமே சுயமாக முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்களின் ஆலோசனை வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம். ஆனால், முடிவெடுப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும். யாராவது வழி நடத்தினால் தான் என்னால் இயங்க முடியும் என்ற இயந்திரத்தனமாக இருக்கக் கூடாது. நமக்குச் சிந்திக்கத் தெரியும். எனவே நாமே சுயமாக இயங்க வேண்டும்.





9. எதற்கும் கவலைப்படக் கூடாது. கவலையில் எந்த நன்மையுமில்லை




எதற்காகவும், எப்போதும் நாம் கவலைப்படக் கூடாது. கவலைப்படுவதால் எந்தப் பயனும் வரப் போவதில்லை. கவலை என்ற சிலந்தி நம் தலைக்கு மேல் கூடு கட்டி விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தோல்விக்கும் நாம் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் அடுத்த முயற்சியை நாம் மறந்து விடுவோம். எடிசன் ஒரு பேட்டரியை உருவாக்க எட்டாயிரம் முறை தோல்வியைச் சந்தித்தாராம். எனவே, சோதனைக்குப் பின்புதான் சாதனை இருக்கிறது என்பதை உணர வேண்டும்.





10. பிடித்த காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதைவிட, செய்யும் காரியத்தைப் பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்





எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடைய வேண்டுமானால், அதில் முழு ஈடுபாடு இருக்க வேண்டும். முழுமையான ஈடுபாடு தான் முழுமையான வெற்றியைத் தரும். எனக்குப் பிடித்தமான வேலைதான் என்று ஏனோதானோ என்று செய்யாமல் விருப்பத்துடன் நம் கவனம் முழுவதையும் அதில் குவித்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றியை எட்ட முடியும்.





""எல்லா ஆற்றல்களும் உன்னுள் குடி கொண்டு இருக்கின்றன. உன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று சுவாமி விவேகானந்தர் சொல்வதுபோல் மேலே கண்ட பத்து வழிகளைப் பயன்படுத்தி உங்களின் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்ற முயலுங்கள்.'' -





""இனிய நந்தவனம்'' மாத இதழிலிருந்து.

கல்வி -கட்டுப்பாடுகள் தடைகளாகலாமா?

Author: Nagaraji.B /


""உற்றுழி உதவியும் உறுபொருள்கொடுத்தும்


பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே'' -என்ற பழந்தமிழ்பாடலுக்கு ஏற்ப, இன்றைய நிலையில் டொனேஷன் என்ற நன்கொடை மற்றும் உயர்ந்த கட்டணம் கொடுத்துதான் தமிழ்நாட்டில் கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஏழாம் நூற்றாண்டுகளிலே குருகுலக் கல்வி முறை இருந்தும் கல்விப்பணிக்கூடங்கள் ""கடிகைகள்'' என்ற பெயரில் நாடெங்கும் அமைக்கப்பட்டன. நாளந்தா பல்கலைக்கழம் போல் தமிழ்நாட்டு மன்னர்கள் கல்விப்பயிற்சிக்கென பெரும் கோயில்களிலே விசாலமான பிரகாரங்கள் மண்டபங்கள் கட்டினர். ஆயினும் குருகுல முறைக்கல்வியே சிறந்து விளங்கியது.



இன்று உலகளாவிய வாழ்வியலாலும் அறிவியல் மேன்மையின் காரணமாகவும் கல்வித்துறையிலும் கல்வி முறையிலும் கட்டாயமாக மாற்றம் வேண்டியிருக்கிறது. இத்தேவையை இன்றயை மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நிறைவு செய்கின்றன. ஆயினும் ஒரு சில பள்ளிகளின் தவறான நிர்வாகத்தால் பள்ளிகளில் குறைபாடுகள் ஏற்பட்டுப் பாதிப்புகள் பல ஏற்பட்டதன் உச்சபட்சமாக 2004ஆம் ஆண்டு நேரிட்ட கும்பகோணம் பள்ளித் தீ விபத்துக்குப்பின் பள்ளிகள் சீரமைப்புக்காக, சம்பத் கமிட்டியைய அரசாங்கம் அமைந்தது.



இதன்படி நாற்பது கட்டட விதிக்கப்பட்டள்ளன. கட்டட உறுதிச்சான்று, சுகாதாரச்சான்று, தீயணைப்புதுறையினரின் சான்று, ரூபாய் இரண்டரை லட்சம் அரசிடம் வைப்புத்தொகை, ஆண்டு ஆய்வுக்கட்டணமாகப் பத்தாயிரம் ரூபாய் முதல் பத்து லட்சம் வரை பங்குத் தொகை முதலியன கட்டுப்பாடுகள். இந்த வகையில் அங்கீகாரம் பெற்ற பின்னரும் கூட பள்ளிகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கடுமையான நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, சுமார் இரண்டாயிரம் பள்ளிகள் மறு அங்கீகாரம் பெற முடியாமல் தவிக்கின்றன.



அங்கீகாரம் புதுப்பிக்கப்படத் தாமதமோ அல்லது தடைகளோ உள்ள பள்ளிகளில் நிர்வாகமும் ஆசிரியர்களும் தவிப்புநிலைக்கு உட்படுவதுமட்டுமன்றி, படிக்க வருகின்ற பிள்ளைகள் மற்றும் அவர்தம் பெற்றோருக்கும் பதட்டமான மனநிலையை உருவாக்கக்கூடும். ""விஞ்ஞானம் வேகமாக முன்னேறும் ஒரு கல்வி. அதைத் தொடர்ந்து நாம் ஓடவேண்டும்'' என்பது கல்வித்துறை வித்தகர் முனைவர் கி.வேங்கடசுப்பிரமணியம் அவர்களது கருத்து. அதன்படி கல்வித்துறையில் பெருமளவு விஞ்ஞானமயமாகிவிட்ட சூழ்நிலையில் இத்தகைய இடையூறுகள் பள்ளிகளுகு“கத் தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே, விதிமுறைகளைக் கடைப்பிடிக்க செய்வதில், பாரபட்சமோ நிதிமுறைகேடுகளோ ஏற்படாதவண்ணம் செயல்பட நிரந்தர அங்கீகாரத்தை மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அளிப்பதுடன் போதிய கட்டுப்பாடுகளைக்கண்காணித்தல், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுடன் கல்வி அதிகாரிகளும் அடிக்கடி கலந்துகொண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கிக்கொள்வது போன்ற நடைமுறைகளே வேண்டத்தக்கது. ""கல்வி என்பது ஆற்றில் எதிர்நீச்சல் போடுவதுபோன்றது. முன்னேறிக்கொண்டே போக வேண்டும். தடங்கல் இருந்தால் பின்னுக்க அடித்து தள்ளிவிடும்'' என்ற சீனப் பழமொழி கல்வி பெறுவதற்கு மட்டுமல்ல; கற்பிப்பதற்கும் உரியது.


ஏ.ஆர்.ரஹ்மான்: இசையின் ஆளுமை

Author: Nagaraji.B /

காலச்சுவடு-அம்ஷன் குமார்

1990ஆம் ஆண்டு ஒரு விளம்பரப் படத்தை இயக்கும் வாய்ப்பு தற்செயலாக எனக்குக் கிடைத்தது. அப்போது சென்னையில் தயாரிக்கப்பட்ட விளம்பரப் படங்கள் பலவும் பொருட்களைக் கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தன. விளம்பரப் பொருட்களின் பெயரைப் பலமுறை உரக்கக் கூறி அவற்றின் கல்யாண குணங்களை வானளாவப் புகழ்வதோடு அவை முடிந்துவிடும். மும்பையிலிருந்து வெளிவந்த விளம்பரப் படங்கள் அழகுணர்ச்சி கொண்டிருந்தன. அவற்றில் பேச்சு குறைவாகவும் காட்சி அம்சங்கள் அதிகமாகவும் இடம்பெற்றன. விளம்பரப் பொருட்கள் பற்றிய மேன்மைகள் அவற்றில் உயர்வு நவிற்சியின்றிச் செ?ல்லப்பட்டன. நான் அந்தப் பாணியில் படத்தை எடுத்தேன்.



படத்தை முடித்த பிறகு அதற்கு நல்ல பின்னணி இசை தர வேண்டி, சில இசையமைப்பாளர்களை அணுகினேன். விளம்பரப் படங்களுக்கு இசையமைப்பது தங்கள் மேதமைக்கு ஏற்றதன்று என முன்னணி இசையமைப்பாளர்கள் கருதினார்கள். மார்க்கெட்டை இழந்தவர்கள்கூட இது போதும் என்கிற மனே?பாவத்துடன் ஏனோதானோவென்று இசை அமைத்தனர். அச்சமயம் அசோக் நகர் சாமியார் மடத்தில் ஒரு துடிப்பான இளம் இசையமைப்பாளர் ஒருவரைச் சந்தித்தேன்.



அவர் எலக்ட்ரானிக் இசையமைப்பாளர் என்பது தெரிந்தவுடன் என் படத்திற்கு அவர்தான் இசையமைக்கப் போகிறார் என்று முடிவுசெய்தேன். எலக்ட்ரானிக் இசை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தார்கோவ்ஸ்கியின் படங்களில்தான் நான் முதன்முறையாக எல்க்ட்ரானிக் இசையைக் கேட்டிருந்தேன். என் படமும் இசையமைப்பாளருக்குப் பிடித்திருந்தது. அவர் என்னுடன் பணியாற்ற இசைந்தார். அவர் பெயர் திலீப்குமார் என்று சொன்னவுடனேயே அவர் சில காலம் கழித்து வேறு பெயரால் நன்கு அறியப்படலானார் என்பதை எவரும் செ?ல்லிவிடுவார்கள். ஏ.ஆர். ரஹ்மான். திரையரங்குகளில் வெளியிட ஒரு நிமிட நேரப் படம், தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருபது நொடிப் படம் என இரண்டு விதமாக அதை எடிட் செய்திருந்தேன். படம் எடுக்கும்பொழுதே இரண்டும் தனித்தனியாக முழுமை பெற்றிருக்க வேண்டும் என்கிற உணர்வுடன் எடுத்தேன். ஒரு நிமிடப் படத்திலிருந்து அதிரடியாக இருபது வினாடிப் படமாகக் குறைக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளது என்கிற எண்ணம் பார்வையாளர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதால், ரஹ்மான் மோகன ராகத்தின் சாயல் கொண்ட ஒரு ட்யூனை இரண்டு விதமாகப் போட்டுக் கொடுத்தார். அது அற்புதமான இசை. அதன் பிறகு நான் எடுத்த விளம்பரப் படங்களுக்கெல்லாம் ஏ. ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளர். எனக்கு விளம்பரப் படங்கள் எடுப்பதில் முற்றாக ஆர்வம் குறைந்தபொழுது அவர் திரைப்படங்களில் பிரபலமான இசையமைப்பாளராகியிருந்தார்.



அரை நிமிட நேரப் படம் என்றாலும் அவர் அதற்கு இசையமைக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வார். இரவு ஒன்பது மணிக்குத்தான் வேலையை ஆரம்பிப்பார். நானும் அருகிலேயே இருப்பேன். மதுரை சோமு கச்சேரிபோல் அது விடிய விடிய நடக்கும். ஒருமுறை அவர் கொடுத்த இசை எனக்கு அவ்வளவாகத் திருப்தி தரவில்லை. அதை அவர் புரிந்துகொண்டார். அவருக்கும் அதில் திருப்தி இல்லை. மாற்றி மாற்றி ட்யூன்களைப் போட்டுக்கொண்டிருந்தார். கடைசியாக இருவராலும் விரும்பப்பட்ட ஒரு ட்யூனுக்கு முழு இசை வடிவம் தரப்பட்டபொழுது விடியற்காலை ஆறு மணி. அவருடைய வீட்டுக் காம்பவுண்டுக்குள் அமைந்திருந்த அவருடைய பஞ்சதன் இன் ஒலிக்கூடத்திற்கு வெளியே மணி ரத்னமும் பாடகி மின்மினியும் காத்திருந்தார்கள். ரோஜாவில் இடம்பெற்ற பிசின்ன சின்ன ஆசை' பாடல் ஒலிப்பதிவாக இருந்தது. ரஹ்மானுக்கு ரோஜா முதல் படம். பிரபலமான இயக்குநர் வெளியே அமர்ந்திருந்தார். ஆனால் ரஹ்மான் தான் செய்துகொண்டிருந்த வேலையைப் பதற்றப்படாது முடித்துக்கொடுத்த பிறகே அவர்களை உள்ளே அழைத்தார்.



அவருடைய திரையிசையைப் பலரும் கொண்டாடுகிறார்கள். அவர் விளம்பரப் படத்தின் இசையைப் புரிந்துகொண்ட விதமும் அலாதியானது. முன்னோடிகளற்ற அத்துறையில் அவர் செய்த சாதனைகளை இதுவரை எவரும் தாண்டிச் செல்லவில்லை. ஒரு யமஹா சிந்தசைஸரை வைத்துக்கொண்டு ஒரு பெரிய ஆர்கெஸ்டிரா இசை அமைத்தது போன்ற பிரமிப்பை ஏற்படுத்திவிடுவார். இந்த வளத்தையெல்லாம் திரையிசைக்கும் கொண்டு சென்றார். ஃப்யூஷன் இசையில் அவரது பாணி எல்லோராலும் பாராட்டப்பட்டது. ஃப்யூஷன் இசையை முதன்முதலில் தமிழ்த் திரைக்குக் கொண்டுவந்தவர் எல். வைத்தியநாதன். கர்நாடக மெல்லிசையுடன் மேற்கத்திய வாத்தியங்களை இணைத்த ஃப்யூஷன் அவருடையது. கிராமிய மெட்டுகளுடன் அலங்கார அடுக்குகள் மிகுந்த பரோக் இசையின் முக்கிய அங்கமான ஃப்யூக்கை இணைத்த ஃப்யூஷன் இளையராஜாவினுடையது. ரஹ்மான் ராக்கிலிருந்து சூபி இசைவரை பல பாணிகளையும் எடுத்தாள்பவர். குளுமையான இசை தருவதில் கை தேர்ந்தவர். அவர் குறுகிய காலத்தில் தன் இசையால் அனைவரையும் கவர்ந்ததற்கு மற்றுமொரு முக்கியக் காரணம் அவரது ஒலிப்பதிவுத் திறமை.



நல்ல இசை மட்டுமின்றி உயர்தரமான ஒலிப்பதிவையும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். கார்களில் ஸ்டீரியோக்களும் வீடுகளில் ஊஃபர் பொருத்தப்பட்ட ஹைஃபை ஒலி பெருக்கிகளும் வந்துவிட்டிருந்தன. ஆனால் அவற்றில் துல்லியமாகக் கேட்க அதற்கேற்ப ஒலிப்பதிவுசெய்யப்பட்ட திரையிசை வரவில்லை. வந்தது. அதுதான் ரஹ்மானின் இசை. ஒலிப்பதிவையே இசைபோல் ரசிக்க வைத்தவர் ரஹ்மான். அவர் சிறந்த ஒலிப்பதிவாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்வார். அவரே ஒலிப்பதிவுசெய்வதில் நிபுணர். ஒலிப்பதிவுக் கருவிகளை வாங்குவதற்காக நிறையச் செலவிடுபவர்.



ரஹ்மான் மட்டுமின்றி இசைக் கலைஞர்கள் அனைவரும் ஆழ்ந்த இறைபக்தியுடையவர்கள்தாம். "சங்கீத ஞானமு பக்திவினா சன்மார்க்கமு கலதே' இருந்தாலும் ரஹ்மானின் பக்தி பற்றியே மீண்டும் மீண்டும் எழுதப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் அவரைப் பற்றி அதிகம் வெளி உலகினருக்குத் தெரியாது என்பதால். ஓரளவு பிரபலமான சினிமாக்காரர்களின் வாழ்க்கை வரலாறுகளெல்லாம் பத்திரிகைகளில் தொடராக வந்துவிடுகின்றன. ஆனால் உலகம் முழுவதும் அறியப்பட்டுவரும் ரஹ்மானைப் பற்றித் தெரிந்ததெல்லாம் அவருடைய இசை ஈடுபாடும் இறை நம்பிக்கையும் கொஞ்சம் குடும்பப் பின்னணியும்தான். தன்னைப் பற்றி அவரும் அதிகம் பேசுவதில்லை.



அவர் புகழ்பெறத் தொடங்கிய காலத்தில் அவரைப் பலவாறாகவும் விமர்சித்தனர். திரைப்பட இசையமைப்பாளர்கள்கூடப் போட்டி தாங்க முடியாமல் கிண்டல் செய்தார்கள். ஜென்டில்மேன், ரங்கீலா போன்ற படங்களுக்கு இசையமைத்த பின்னர் அவரது வணிகரீதியான செல்வாக்கு மிகவும் உயரத் தொடங்கிற்று. அவர் நினைத்திருந்தால் தனது எதிரிகளுக்குச் சவடாலாகப் பதில் அளித்திருக்கலாம். அவர் மௌனம் காத்தார். சிறு வயதிலிருந்தே தன்னைவிட வயதில் மிகவும் மூத்தவர்களுடன் அவர் பணியாற்றிவந்தவர். பக்குவப்பட்ட நடத்தை அவரிடம் இதனாலும் ஏற்பட்டிருந்தது. அவருக்குத் தன்னம்பிக்கையும் விவேகமும் அதிகம். நண்பர்களிடம் மட்டும் ஒளிவுமறைவின்றித் தன் எண்ணங்களை வெளிப்படுத்துவார். இன்று ரஹ்மானின் பாணி பலராலும் பின்பற்றப்படுகிறது. ஆர்மோனியத்திற்குப் பதிலாக இசையமைப்பாளர்களிடம் கீபோர்டு வந்துவிட்டது. இசையமைப்பாளர்கள் இரவில் கண்விழிக்கிறார்கள். ஒலிப்பதிவின் தரம் நன்கு கூடியுள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அவர்தான் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. கோல்டன் க்ளோப், பஃப்டா உள்ளிட்ட பல சர்வதேச விருதுகள் அவரிடம் குவிந்துவிட்டன. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவருக்குக் கிடைக்கவிருக்கும் ஆஸ்கார்கள் ஒன்றா இரண்டா என்பது பற்றி ஒவ்வொருவரும் ஆருடம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை பிரசுரமாகும் பொழுது முடிவுகள் வெளிவந்திருக்கும்.



அட்டன்பரோவின் காந்தி (1982) பட ஆடை அலங்காரத்திற்காகப் பானு ஆதையாவிற்கு ஆஸ்கார் தரப்பட்ட பிறகு, சத்யஜித் ராய்க்கு 1992ஆம் வருடம் வாழ்நாள் சாதனை ஆஸ்கார் விருது கிடைத்தது. மரணப்படுக்கையில் கிடந்த அவர் நாக்குக் குழறியவாறு அவ்விருதுக்கு நன்றி கூறியதைக் கல்கத்தாவிற்கு வந்து படம்பிடித்து ஆஸ்கார் விருது மேடையில் ஒளிபரப்பினார்கள். ஆஸ்கார் விருதுக் காட்சிகளிலேயே கோரமானது அதுதான் என்பதை அந்நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் உடனே ஒப்புக்கொள்வார்கள்.



ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட ராய் சாதனைகள் புரிந்துகொண்டிருந்த காலத்தில் அவ்விருது அவருக்கு அளிக்கப்பட்டிருந்தால் ஆஸ்காரின் மதிப்பு இந்தியர்கள் மத்தியில் மேலும் உயர்ந்திருக்கும். அந்தக் கசப்பான நினைவை மறக்கடிக்கிறார்போல் சாமியார் மடத்திலிருந்து கொடாக் தியேட்டர் செல்கிற ரஹ்மான் தான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படப் பாடல் நிகழ்ச்சியுடன் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சி வழியாகக் கண்டுகளிக்கும் வகையில் அகாதமி அவார்டு மேடையேற இருக்கிறார். ஆஸ்கார் விருதுகள் பெற நண்பர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.


ஸ்ரீதர்: சில குறிப்புகள்

Author: Nagaraji.B /

பாறையை மோதிய இளங்காற்றுடிசம்பர் 21,2008,15:00 IST

ஸ்ரீதர்: சில குறிப்புகள்









உமா வரதராஜன்


கட்டுரை

ஸ்ரீதர் என்றதும் ஒரு நீரோடை இன்னமும் என் மனத்துள் சலசலத்து ஓடிக்கொண்டுதானிருக்கின்றது. மங்கிய நிலவில் காஷ்மீரத்து ஏரியின் படகொன்றிலிருந்து "நிலவும் மலரும் பாடுது' எனக் காதல் வண்டுகள் இரண்டு ரீங்காரமிடுகின்றன. குயிலின் கூட்டுக்குக் குடிவந்த காகத்தின் இறுமாப்புடன் 'தேடினேன் வந்தது' என்றொரு பெண்குரல் துள்ளிக் குதிக்கின்றது. சிதிலமடைந்த மாளிகையின் சுவர்களிலே வொவால்களைப் போல நிராசையின் கனவுகள் தாங்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற வரிகள் பட்டு மோதி அலைகின்றன. சிட்டிபாபுவின் வீணையின் தந்திகளில் தத்தித் தத்தி நடக்கின்ற ஒரு குயில் கேட்கின்றது "சொன்னது நீதானா?' இறுதிக் கணத்தின் ஒளி நடனத்துடன் ஒரு மெழுகுவர்த்தி உருகுகின்றது "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' என. ஸ்ரீதர் தன் பெயருக்கு முன்னால் ஏதும் பட்டங்கள் சூடிக்கொண்டதாக ஞாபகமில்லை. "கல்யாணப் பரிசு" படம் வெளியாகி வெற்றி பெற்றவுடன் வழங்கப்பட்ட "கலைஞர் திலகம்" பட்டத்தைக்கூட அவர் ஒரு குல்லாபோல் மாட்டிக் கொண்டவரல்ல.



ஸ்ரீரீதரைத் தமிழ்த் திரையுலகின் சாதனையாளர்களில் ஒருவர் எனவும் அவருடைய "கல்யாணப் பரிசை' ஒரு திருப்புமுனைப் படமாகவும் பலர் குறிப்பிடுகின்றனர். இலக்கணத் தமிழைக் கொண்ட புராணப் பட யுகத்திலிருந்து தமிழ் சினிமாவை வேறொரு திசைக்கு நகர்த்தியவர் ஸ்ரீதர்தான் எனக் கூறுவதுமுன்டு. ஆனால் இன்றைய பார்வையில் "பராசக்தி'க்கு இருந்த சமூகக் கரிசனை "கல்யாணப் பரிசு'க்கு இருந்ததாகச் சொல்ல முடியாது. "பராசக்தி' தர்மாவேசத்தின் வெளிப்பாடாகவும் அதுவரை நிலவிய தார்மீக மதிப்பீடுகளைச் சவக்கிடங்கில் தள்ளியதாகவும் அமைந்தது. ஆனால் "கல்யாணப் பரிசே?' சற்று நெகிழ்வான இடங்களில் நீரூற்று மேற்கிளம்பும் இள மனங்களின் கனவு பூமி. இன்றைய தினம் "கல்யாணப்பரிசை" புதுமையான ஒரு படைப்பாகக் யாரும் கொள்ளமாட்டார்கள். விக்கல்களுக்கும் கேவல்களுக்கும் மிகைத் தியாகங்களுக்கும் இன்று வரவேற்புக் கிடைப்பதில்லை. தனது குழந்தையை முன்னாள் காதலிக்குக் கல்யாணப் பரிசாக வழங்கிவிட்டு நடையைக் கட்டுவது இன்றைய ரசிகனுக்குப் பெரும் புதுமையாகத் தென்படப்போவதில்லை. மனைவியையே மாற்றானுக்குப் பரிசாக வழங்கிவிட்டு ஸ்லோமோஷனில் நடந்து செல்லும் பரந்த மனம் கொண்ட கதாநாயகர்கள் தமிழ்த் திரைக்கு இன்று வந்துவிட்டார்கள். ஸ்ரீதரையும் அவருடைய படங்களையும் இன்றைக்கு யோசிக்கும்போது தென்படும் பொதுமையான முக்கிய அம்சம் இளமனங்களின் உணர்ச்சிப் போராட்டமும் அவற்றுக்கிடையேயான ஊசலாட்டமும்.

அவருடைய ஆரம்ப காலப் படங்கள் இன்றைக்கும் கிழடு தட்டாதவை. அவருடைய சமகாலத்தில் வெளியான பானா, பாவன்னா வரிசைப் படங்களின் சந்தை இரைச்சல் ஸ்ரீதரின் படங்களில் சற்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இளமையின் சாலையில் அவர் கைவீசி நடந்தவர். இன்னொரு வகையில் அவர் ஒரு Trioligist. முக்கோணக் காதல் ரசத்தை சாறு பிழிந்து தந்துகொண்டிருந்தவர். "கல்யாணப் பரிசு', "நெஞ்சில் ஓர் ஆலயம்' தந்த வெற்றிகளால் தன்னைப் பற்றிய பிம்பமொன்றை வடிவமைத்துக் கொண்ட அவர் அதைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியிலேயே பின்னாட்களில் ஈடுபட்டார். "வெண்ணிற ஆடை', "நெஞ்சிருக்கும்வரை', "அவளுக்கென்று ஒரு மனம்', "இளமை ஊஞ்சலாடுகிறது', "ஒரு ஓடை நதியாகிறது' போன்றவை இத்தகைய முயற்சிகள்.

பள்ளிக்கு நான் மட்டம் போட்டுவிட்டு அலைந்து திரிந்த ஒரு காலத்தில் மட்டக்களப்பு பஸ் நிலையத்துப் பெட்டிக் கடைகளில் பால்கன், பொன்மலர் போன்ற கொமிக்ஸ்களுடன் "சித்ராலயா' என்ற பத்திரிகையும் தொங்கிக்கொண்டிருக்கும். அந்நாளில் வெளிவந்த "பேசும் படம்', "பொம்மை' போன்ற சினிமாப் பத்திரிகையல்ல "சித்ராலயா'. மேற்கத்திய சினிமா செய்திகளுக்கு அது முக்கியமளித்ததாக ஞாபகம். ஸ்ரீதருடைய ரசனையின் அடையாளமாகவும் நாட்டத்தின் இலக்காகவும் அதைக் கொள்ளலாம். அவர் ஹொலிவூட் படங்களின் நேசராக இருந்திருக்க வேண்டும். உச்சி வெயிலில் மெரீனாக் கடற்கரையில் முத்துராமன் கழுத்துப் பட்டியணிந்து "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா... தா...' எனப் பாடுவதற்கு வேறு எந்த விசேஷக் காரணமும் இருந்திருக்காது. அந்நாட்களில் அவர் ஆர்வத்துடன் சந்தித்த ஒரு ஹொலிவூட் இயக்குனர் டேவிட் லீன். பாலு மகேந்திராவுக்குப் பிரமிப்பை ஏற்படுத்திய அதே இயக்குனர்.


ஸ்ரீதர் கதை வசன கர்த்தாவாகவே தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். 1954இல் "எதிர்பாராதது' படத்தில் தொடங்கி "அமரதீபம்', "மாதர்குல மாணிக்கம்', "யார் பையன்', "உத்தம புத்திரன்' போன்ற பல படங்களுக்கு அவர் வசனங்கள் எழுதியுள்ளார். அடிப்படையில் வசனகர்த்தாவான ஸ்ரீதர் திரைப் படமொன்றின் முக்கிய லட்சணமான "காட்சி நிலையை' முதன்மைப்படுத்தியவரல்ல. காட்சி என்பது அவரைப் பொறுத்தவரையில் விதவிதமான காமராக் கோணங்கள், இயற்கை எழில் என்பவற்றுடன் பின்தங்கிவிடுகின்றது. வசனங்களே அவருடைய படங்களில் ஆதிக்கம் செலுத்தி நகர்த்திச் செல்லுகின்றன. நாடக பாணியிலிருந்து முற்றிலும் விடுபடாத, ஆனால் முற்றாக அதில் அமிழ்ந்தும் போகாத ஒரு இடைநிலைப் பாணியை அவர் கையாண்டார். ஒளிப் பதிவாளர் வின்சென்டின் பங்கும் இதில் முக்கியமானது. தமிழ்த் திரைப்பட நாயக, நாயகிகளுக்கு நிகராக ஸ்ரீதர் என்ற பெயர் ரசிகர்களைத் தன்பக்கம் ஈர்த்த ஆண்டுகளாக 1959 - 1967களைச் சொல்லலாம் இந்தக் காலப்பகுதியில் வெளியான "கல்யாணப் பரிசு', "மீண்ட சொர்க்கம்', "விடிவெள்ளி", "தேன் நிலவு', "நெஞ்சில் ஓர் ஆலயம்', "சுமைதாங்கி', "போலீஸ்காரன் மகள்', "நெஞ்சம் மறப்பதில்லை, "கலைக்கோயில்', "காதலிக்க நேரமில்லை', "வெண்ணிற ஆடை', "ஊட்டி வரை உறவு', "கொடி மலர்', நெஞ்சிருக்கும்வரை போன்ற படங்களின் உள்ளடக்கங்கள் பல்வகையானவையாக இருப்பினும் இள மனங்களின் ஊசலாட்டம் முக்கோணக் காதல் போன்ற அம்சங்களே இப்படங்களுக்கும் அடிநாதம். ஸ்ரீதர் இயக்கிய உல்லாசமான படங்களாகத் "தேன்நிலவு', "காதலிக்க நேரமில்லை", "ஊட்டிவரை உறவு" ஆகியவற்றைச் செ?ல்லலாம். ஸ்ரீதரின் படங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்தது "காதலிக்க நேரமில்லை'. தமிழின் நகைச்சுவைத் திரைப் படங்களைப் பட்டியலிடும்போது அது சிகரமாகவும் தமிழின் முக்கியப் பெ?ழுதுபே?க்குப் படங்களைக் குறிப்பிடும்பே?து முன்வரிசையிலும் இன்றுவரை உள்ளது. பிரிவின் துயரத்தையும் ஜென்மங்களை வென்று நிலைப்பது காதல் என்ற ஐதீகத்தையும் உருக்கமாக வெளிப்படுத்திய படம் நெஞ்சம் மறப்பதில்லை. மதுமதியின் சாயலில் அமைந்த இந்தப் படம் ஸ்ரீதரின் கையாளுகையால் மூலத்தையும் சில இடங்களில் மிஞ்சிப் பட்டை தீட்டப்பட்டுள்ளது, ஜெயலலிதா தன் வாழ்நாளில் நடிப்பதற்குச் சற்று முயன்ற மூன்று படங்களில் ஒன்றாக வெண்ணிற ஆடையைக் குறிப்பிடலாம்.

"ராஜ பார்வையை' எடுத்து நஷ்டப்பட்ட கதையைச் சொல்லாத கமலஹாசனின் பேட்டியையே? "கலைக்கோயிலை' ஆதரிக்காத தமிழ் ரசிகர்கள் பற்றிச் சாடாத ஸ்ரீதரின் பேட்டியையே? சந்திப்பது அபூர்வம். கலைக் கோயில் (1964இல்) வெளிவந்த காலத்தில் பெரும்பான்மைத் தமிழ் ரசிகர்களின் கொட்டாவிகளையும் முகச் சுளிப்புக்களையும் மிக எளிதாகச் சம்பாதித்திருக்கும். போல்முனி நடித்த A SONG TO REMEMBER இன் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆங்கிலப் படத்தின் பியானே? ஸ்ரீதரின் கலைக்கோயிலில் வீணையாகிவிட்டது. மேடையில் பாடிக்கொண்டே? அல்லது ஆடிக்கொண்டே? சாவை அரவணைக்கும் மிகை உணர்ச்சிப் படக்காட்சிகளுக்கு ஸ்ரீதரும் விலக்களிக்கவில்லை.


ஸ்ரீதர் பிரமாண்டத்தின் திசைநோக்கி நகர்ந்தமைக்கான அடையாளம் 1969இல் வெளிவந்த "சிவந்த மண்'. எளிமையின் அழகை விட்டு அகலத் தொடங்கிய ஸ்ரீதர் GUNS OF NAVARONE பாணியில் எடுத்த இந்தப் படத்தின் அனேகமான பாடற்காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டவை. ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகில் தொடங்கிவைத்த இந்த "நாகரிகம்' இன்றும் வழக்கொழியவில்லை. ஏதோ ஒரு தேசத்தின் தெருக்களில் நமது நாயக நாயகிகள் கட்டாக் காலிகள்போல இன்றைக்கும் மேய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

75க்குப் பின்னர் வெளியான ஸ்ரீதருடைய திரைப்படங்கள் அவருக்கு அவ்வளவாகப் பெருமை சேர்க்கவில்லை எம்.ஜி.ஆர் - சிவாஜி - இளமை - புதுமை என்ற அலைதலினூடாக அவருடைய பயணம் இலக்கற்றதொன்றாக மாறியிருந்தது. 59இலிருந்து 65வரை அவர் உருவாக்கிவைத்திருந்த பெருமிதங்களை இழக்கும் வகையில் பின்னாட்களில் அவருடைய படங்கள் வரத்தொடங்கின. "வைரநெஞ்சம்', "ஓ மஞ்சு', "மீனவநண்பன்', "உரிமைக்குரல்', சொந்தர்யமே வருக வருக, 'மோகனப் புன்னகை', "துடிக்கும் கரங்கள்', "தென்றலே என்னைத் தொடு’, "நானும் ஒரு தொழிலாளி, உன்னைத் தேடி வருவேன், "இனிய உறவு பூத்தது', "தந்துவிட்டேன் என்னை', "ஆலய தீபம்'... இப்படிப் பல அரை அவியல்கள்.


"அலை கடலில் சிறு தோணி. கலை உலகில் எங்கள் புதிய பாணி' என்பதே ஸ்ரீதரின் நிறுவனமான சித்ராலயா கொண்டிருந்த அடையாள வாசகம். வியாபார அகோர அலைகளுக்கு மத்தியில் ஸ்ரீதரின் காவிய அணுகு முறையும் அவருடைய தோணியும் பின்னாட்களில் நொறுங்குண்டு போனமை ஒரு துயரமான கதைதான்.


Pages