nov7

Author: Nagaraji.B /

nov7

sdsds

Author: Nagaraji.B /

ssds

sdsd

Author: Nagaraji.B /

dsd

The Four Conversations

Author: Nagaraji.B /

 23.06.10    தொடர்கள்
ரண்டு கோஷ்டிகள், நீ பெரிசா, நான் பெரிசா என்று பயங்கரமாக முட்டி மோதிக்கொள்கிறார்கள். ஒரே தள்ளு முள்ளு, அடிதடி, இருவருமே கொஞ்சமாவது ரத்தம் பார்க்காமல் விடமாட்டார்கள் என்கிற நிலைமை.
அப்போது, திடீரென்று ஒருவர் உள்ளே நுழைகிறார். நாலு வார்த்தை பேசுகிறார்.இருதரப்பினரும் தலையாட்டிவிட்டுத் தங்கள் வழியில் போகிறார்கள். சுபம்.

சினிமாவில் இதுமாதிரிச் சம்பவங்களை நிறையப் பார்த்திருப்போம். ஆனால், நிஜத்திலும் பேச்சுக்கு அப்படி ஒரு மரியாதை உண்டு. சாதாரணக் குழாயடிச் சண்டையில் ஆரம்பித்து, இரு நாடுகளுக்கு இடையிலான போர்கள்வரை எப்பேர்ப்பட்ட பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க முடியும் என்பதற்குச் சரித்திரத்தில் ஏகப்பட்ட சாட்சிகள் உள்ளன.

நாம் அவ்வளவு தூரம் போகவேண்டாம். தினசரி வாழ்க்கையில் வீட்டிலும் வெளியிலும் எத்தனையோ பேரிடம் பேசுகிறோம். அவர்களிடமெல்லாம் எப்படிப் பேசவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டால்,அதன்மூலம் பலவிதமான வேலைகளைச் சுலபமாகச் சாதித்துக்கொள்ளலாம் என்கிறது ஒரு சமீபத்திய புத்தகம். ஜெஃப்ரெ ஃபோர்ட், லௌரி ஃபோர்ட் தம்பதியர் எழுதிய அந்தச் சுவாரஸ்யமான நூலின் பெயர்,‘The Four Conversations'.

அதென்ன நான்கு வகைப் பேச்சுகள்?

 1. ‘பிள்ளையார் சுழி’ப் பேச்சுகள் (Initiative Conversations)

 2. ‘பரஸ்பரம் புரிஞ்சுக்குவோம்’ பேச்சுகள் (Understanding Conversations)

 3. ‘இப்ப என்ன செய்யணும்?’ பேச்சுகள் (Performance Conversations)

 4. ‘நடந்தது என்ன?’ பேச்சுகள் (Closure Conversations)

எந்த ஒரு வேலையையும் தொடங்குவதற்குமுன்னால், இப்போது நாம் என்ன செய்யப்போகிறோம், அதை எப்படிச் செய்யவேண்டும், யார் எதைச் செய்யவேண்டும்,இதற்குத் தேவையான உதவிகள் எங்கிருந்து கிடைக்கும், எப்படிப்பட்ட பிரச்னைகள் வரக்கூடும், ஏதாவது இடைஞ்சல் என்றால் யாரைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம்,இப்படிப் பல விஷயங்கள் இருக்கின்றன. இதுதான் ‘பிள்ளையார் சுழி’ப் பேச்சுகள்...

உதாரணமாக, ஒரு வீட்டில் இருக்கும் பழைய தொலைக்காட்சியை மாற்றிவிட்டுப் புதியது வாங்கவேண்டும். இதற்காக அந்தக் குடும்பத்தின் தலைவர் தன்னுடைய மனைவி, மகன், மருமகள், பேரப் பிள்ளைகளையெல்லாம்கூடக் கூப்பிடுகிறார், பிரச்னையைச் சொல்கிறார், ‘இந்தக் காரணங்களுக்காக நான் டி.வி.யை மாற்ற நினைக்கிறேன், அதற்காக இவ்வளவு ரூபாய் செலவழிக்கப்போகிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார். அவர்களுடைய எண்ணங்களைத் தெரிந்துகொள்கிறார்.

உண்மையில்,அவர் இப்படி யாரிடமும் பேசவேண்டியதே இல்லை. அதிகாரமாக அவரே போய்ப் புது டி.வி. வாங்கிவந்துவிடலாம். அதற்குச் சகல உரிமைகளும் அவருக்கு உண்டு.

ஆனால், நாளைக்கு அந்தத் தொலைக்காட்சியை உபயோகிக்கப்போகும் குடும்பத்தினர், இந்த முடிவு அவர்கள்மேல் திணிக்கப்பட்டுவிட்டதுபோல் உணர்வார்கள்.இது சரியில்லை,அது சரியில்லை என்று குறை சொல்வார்கள்.

அதற்கு வழி வைக்காமல்,அவர் ஒரு ‘பிள்ளையார் சுழி’ப் பேச்சு நடத்துகிறார்.மற்றவர்கள் இப்போதைய டி.வி.யில் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளைச் சொல்ல,அதன்மூலம் எப்படிப்பட்ட புதுத் தொலைக்-காட்சியை வாங்கவேண்டும் என்று அவர்களே முடிவெடுக்கிறார்கள். இதுதான் ‘பரஸ்பரம் புரிஞ்சுக்குவோம்‘ வகைப் பேச்சு. அதாவது, Understanding Conversations.

அடுத்து, டி.வி. வாங்கவேண்டிய நேரம். இப்போது அவர் மூன்றாவது வகைப் பேச்சுக்குத் தாவுகிறார். தன் மகனைக் கூப்பிடுகிறார். கையில் பணத்தைக் கொடுத்து,‘இங்கே நாம பேசினபடி ஒரு நல்ல டெலிவிஷனாத் தேர்ந்தெடுத்து இந்த வாரத்துக்குள்ள வாங்கிடு’ என்று சொல்கிறார்.

இது, ‘Performance Conversations’ வகையில் வருகிறது. அதாவது, நீ இதைச் செய்யவேண்டும், அதற்கான கட்டுப்பாடுகள் இவை, இத்தனாம் தேதிக்குள் செய்துமுடிக்கவேண்டும்,அது இப்படிப்பட்ட தரத்தில் இருக்கவேண்டும் என்று கறாராகப் பேசுவது, ஒப்புக்கொண்டபடி அந்த வேலைகள் சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்வது.

கடைசியாக, நான்காவது வகைப் பேச்சு, 'Closure'. அதாவது, நாம் செய்ய நினைத்த வேலையைச் செய்து முடித்துவிட்டோம்,புது டெலிவிஷன் வீட்டுக்கு வந்துவிட்டது. அது நாம் யோசித்தபடி நன்றாக இருக்கிறதா, அல்லது சொதப்புகிறதா? வேலை வெற்றிகரமாக முடிந்தது என்றால், அதைப் பாராட்டி எல்லோரும் ஒரு க்ளாஸ் ஜூஸ் குடித்துக் கொண்டாடலாம், சொதப்பல் என்றால், எங்கே என்ன தப்பு நடந்தது என்று தெரிந்துகொண்டு அடுத்தமுறை இன்னும் கவனமாக இருக்கலாம்.

நீங்களும் நானும் இந்த நான்கு வகைப் பேச்சுக்களைத் தினந்தோறும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால்,அதை நாம் யோசித்துச் செய்வதில்லை.எப்போது எந்த வகைப் பேச்சு சரிப்படும் என்று சிந்திக்காமல் செயல்படும்போதுதான் பிரச்னைகள் பெரிதாகிவிடுகின்றன.

இதேபோல், அலுவலகத்திலும் நாம் சந்திக்கிற எந்தப் பிரச்னைக்கும் இந்த நான்கு வகைப் பேச்சுக்களைச் சிறப்பாகப் பயன்படுத்திப் பலன் பெறமுடியும் என்று ஏகப்பட்ட உதாரணங்களுடன் விளக்கிச் சொல்கிறது இந்தப் புத்தகம். நான்கையும் இதே வரிசையில்தான் பேசவேண்டும் என்று அவசியம் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து உபயோகப்படுத்தினால் உங்களுடைய பேச்சுத்திறன், செயல்திறன் இரண்டுமே கணிசமான அளவு உயரும்,சமூக மதிப்பும் தானாக அதிகரிக்கும்!.

எனர்ஜி பஸ்

Author: Nagaraji.B /

ரு பஸ் பயணம் வாழ்க்கையை மாற்றுமா? மாற்றும் என்கிறார் ஜான் கார்டன். ‘எனர்ஜி பஸ்’ என்ற பிஸினஸ் நாவலின் ஆசிரியர். இந்த நாவலின் ஹீரோ ஜார்ஜ்.
அவனுடைய வாழ்க்கையில் எல்லாமே பிரச்னைதான். அலுவலகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. வீட்டில் குடும்பப் பிரச்னை. இந்தச் சூழலில் ஒரு நாள் பஸ் பயணம் செய்ய வேண்டியதாகிறது.

அந்த பஸ்ஸின் ஓட்டுநர் பெயர், ஜாய். அவள் ஜார்ஜை மகிழ்ச்சியோடு வரவேற்கிறாள், ‘ஏன் இப்படி பேய் அறைஞ்சமாதிரி இருக்கீங்க? கொஞ்சம் ஜாலியாச் சிரிச்சு, உற்சாகமா பேசக்கூடாதா?’ என்று உரிமையோடு கண்டிக்கிறாள்.

ஆரம்பத்தில் ஜார்ஜுக்கு ஜாயின் அதிகப்பிரசங்கித்தனம் பிடிக்கவில்லை. ஆனால் போகப்போக,அவளிடம் தன்னுடைய பிரச்னைகளை மனம் திறந்து சொல்கிறான்.

‘இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரே இல்லைப்பா’ என்கிறாள் ஜாய், ‘நாம இப்ப பயணம் செஞ்சுக்கிட்டிருக்கிறது சாதாரண பஸ் இல்லை, எனர்ஜி பஸ்,இதிலேர்ந்து உன்னோட வாழ்க்கைக்குத் தேவையான பல பாடங்களைத் தெரிஞ்சுக்கமுடியும்!’ என ஒவ்வொன்றாய் சொல்கிறாள். அவள் சொல்லியதிலிருந்து பத்து இதோ:
 உங்களுடைய பஸ்ஸுக்கு, நீங்கள்தான் ஓட்டுநர். அதில் மற்றவர்கள் ஏறிக்கொள்ளலாம். உங்களுக்கு வழிகாட்டலாம். ஆனால் கடைசியில் அதைச் சரியான திசையில்,சரியான வேகத்தில் ஓட்டப்போவது நீங்கள்தான், நீங்கள்மட்டும்தான்!
 நம்முடைய பஸ் எந்த திசையில் செல்லவேண்டும் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? ரொம்பச் சுலபம், உங்களுடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று கொஞ்சம் யோசியுங்கள்.அந்தக் கனவுகள்,ஆசைகள், விருப்பங்கள்தான் நீங்கள் போகவேண்டிய பாதையைத் தீர்மானிக்கப்-போகின்றன.
 இந்த பஸ்ஸுக்கு பெட்ரோல், டீசல் என்ன தெரியுமா? ‘எதுவும் நன்றாகவே நடக்கும்‘ என்கிற பாஸிட்டிவ் சிந்தனைகள்தான்
 நீங்கள்மட்டும் பஸ்ஸில் தனியே பயணம் செய்தால் சரிப்படாது.உங்களுடைய குடும்பத்தினரை, நண்பர்களை, கூட வேலை செய்கிறவர்களை ‘ஏற்றிக் கொள்ளுங்கள்.அவர்கள் உங்களுக்கு ஆதரவாய் இருப்பார்கள். உதவி செய்வார்கள்.
 ‘இந்த பஸ் ஊர் போய்ச் சேராது. மக்கராகிவிடும்’ என்று கிண்டலடிப்பவர்களை பஸ்ஸில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
 உங்களுடைய பஸ்ஸிலேயே பயணத்தைப் பற்றி சந்தேகப்பட்டு புலம்பி உங்கள் உற்சாகத்தைக் கெடுப்பவர்கள் இருந்தால் தயவுதாட்சண்யம் இல்லாமல் இறக்கிவிடுங்கள்.இந்தப் புலம்பல் ஆசாமிகள் எல்லோர் உற்சாகத்தையும் கெடுத்துவிடுவார்கள்.
 பயணம் என்பது, சும்மா ஒரேமாதிரி இருந்தால் போரடிக்கும், மியூசிக், சினிமா என்று உற்சாகப்படுத்துங்கள்.
 உங்களுடைய பயணிகளை உண்மையாக நேசியுங்கள். அவர்கள்மேல் அக்கறை காட்டுங்கள்.சுயநலம் இல்லாமல் அவர்களுக்கு உதவுங்கள். அவர்கள் உங்கள் வெற்றிக்கு உதவுவார்கள்.
 எந்தப் பயணத்துக்கும் ஓர் உயர்ந்த நோக்கம் இருக்கட்டும். வெறுமனே சுயலாபமாய் மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் பயனளிப்பதாய் இருக்கட்டும்.
 நம்முடைய வாழ்நாள் எவ்வளவோ, நமக்குத் தெரியாது. அதை நினைத்து ஒவ்வொரு நாளையும் கசப்பாக்கிக்கொள்ளாதீர்கள்.உங்களுடைய பயணத்தை முழுமையாக ரசித்து அனுபவியுங்கள்

இவைதான் ஜாய் தந்த பத்து யோசனைகள். இந்த பத்து யோசனைகளை தன் வாழ்க்கையில் பயன்படுத்திய ஜார்ஜ் இன்று ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்டார்.
நீங்கள்?  

The Elephant And The Twig-ஜெஃப் தாம்ஸன்

Author: Nagaraji.B /

 
ங்கள் வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பெரிய யானை வளர்க்கிறீர்கள். அந்த யானையைக்  கட்டிப்போடுவதற்கு எதைப் பயன்படுத்துவீர்கள்?
தோல் பட்டை? தாம்புக் கயிறு? இரும்புச் சங்கிலி?... இவை எதுவும் தேவையில்லை,யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டுவைத்தாலே போதும்.

இது என்ன கூத்து? அத்தனை பெரிய மிருகத்தைக் கட்டிப் போடுவதற்குத் தக்கனூண்டு குச்சியா?யானை நினைத்தால் அரை நொடியில் அறுத்துக்கொண்டு ஓடிவிடுமே.

உண்மைதான். ஆனால், அந்த யானை ‘நினைக்க’ வேண்டுமே, அதான் மேட்டர்!

சின்ன வயதில்,அந்த யானைக்குட்டியை ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் பிணைத்து நன்றாகக் கட்டிப்போட்டிருப்பார்கள். யானைக்குட்டி அதிலிருந்து விடுபடுவதற்கு எவ்வளவோ போராடிப் பார்க்கும். இழுக்கும், தள்ளும், முட்டும், மோதும், ஒரு பலனும் இருக்காது.

இப்படிக் கொஞ்ச நாள் போராடித் தோற்கிற யானைக்குட்டி, ஒருகட்டத்தில் தன்னால் இந்தப் பிணைப்பிலிருந்து விடுபடமுடியாது என்று முடிவு செய்துவிடுகிறது. விடுதலைக்கு முயற்சி செய்வதையே நிறுத்திவிடுகிறது.

இப்போது அந்த யானை பல நூறு கிலோ எடை கொண்ட பிரமாண்ட மலைபோல நிற்கிறது. ஆனால், இப்போதும் நம்முடைய யானை தப்பி ஓட முயற்சி செய்வதே இல்லை.தன்னைக் கட்டிப் போட்டிருப்பது ஒரு சாதாரணக் குச்சிதான்,லேசாக இழுத்தாலே அது விடுபட்டுவிடும் என்பதுகூட அந்த யானைக்குப் புரிவதில்லை.

நம்மில் பலரும் இந்த யானையைப் போல்தான்.நமது திறமைகள் என்னென்ன,நம்மால் எதையெல்லாம் சாதிக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளாமல், அதிசாதாரணமான மனத்தடைகளுக்கெல்லாம் பயந்து ஒதுங்கி நிற்கிறோம்.அவற்றை உடைத்துக்கொண்டு வெளியே வரத் தயங்குகிறோம்.

இந்த யானைக்கதையை மையமாக வைத்து ‘The Elephant And The Twig’
என்ற பிரமாதமான பாஸிட்டிவ் சிந்தனைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜெஃப் தாம்ஸன்.

ஜெஃப் தாம்ஸனைப் பொறுத்தவரை, நாம் ஒவ் வொருவரும் யானை பலம் கொண்டவர்கள். நம்மைச் சில சின்னக் குச்சிகள் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. அவற்றை முறித்து எறிந்துவிட்டு வெளியேறும் போதுதான் நமது முழு பலமும் முழுத் திறமையும் உலகிற்குத் தெரிகிறது. அதிவேக முன்னேற்றம் சாத்தியப்படுகிறது.

இதற்காக, ஜெஃப் தாம்ஸன் 14 முக்கியமான விதிமுறைகளைச் சொல்லித்தருகிறார். அவை இங்கே சுருக்கமாக:

1  எதையும் அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம், இதோ, இந்த விநாடிதான்!

2  நம்முடைய உலகத்தில் நாம்தான் கடவுள். அந்த சக்தியை உணர்ந்து, பொறுப்போடு முடிவெடுங்கள்.

3  நாம் நம்மை என்னவாகக் கற்பனை செய்துகொள்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். நீங்கள் என்ன நினைக்கப் போகிறீர்கள்?

4  உங்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்கான பயணத்திற்கு எரிபொருள் தேவை.அந்த ‘எனர்ஜி’யை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக்கொள்வது என்று யோசியுங்கள்.

5  வாழ்க்கை நெடுகிலும் நாம் பல முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும். அதை வேறு யாரும் செய்யமாட்டார்கள்.நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது.

6  சுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற மனநிலை அவசியம். உற்சாகமான மனத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்

7  உங்களுக்கென்று சில இலக்குகளைக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நோக்கிப் பயணம் புறப்படுங்கள்.உங்கள் செயல்வேகம் ஜிவ்வென்று எகிறும்

8  இலக்கை அடையும்வரை விடுவதில்லை என்கிற பிடிவாதம் வேண்டும். நடுவில் வேறு எந்த இலக்கையும் பார்த்து மயங்குவதில்லை என்கிற மன உறுதியும் வேண்டும்

9  உங்களுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அடிக்கடி கவனியுங்கள்.அநாவசியமான நேரக்கொல்லிகளை விரட்டியடியுங்கள்

10 நதியைப்போல்  ஓடிக்கொண்டிருக்க, நம் திறமைகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துக் கொள்ளவேண்டும்.

11 தேவைதான் நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்

12 நேர்மை முக்கியம். இலக்கை அடையக் குறுக்குவழிகளைப் பின்பற்றாதீர்கள்

13 நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். அவற்றைப்போலச் சிறந்த ஆசிரியர்கள் எங்கும் கிடையாது

14 அடுத்தவர் உங்கள்மீது குறை சொன்னால் கோபப்படாதீர்கள். தவறு செய்யாத மனிதர் யார்? அவர்கள் சுட்டிக்காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத் திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது, வேகப்படுத்தும்!.

fgfg

Author: Nagaraji.B /

fgfg

புத்தக விமர்சனம் -Maruti's story

Author: Nagaraji.B /

புத்தக விமர்சனம்

1983, டிசம்பர் 14, சஞ்சய் காந்தியின் பிறந்தநாளன்றுதான் மாருதியின் முதல் 800 சிசி கார் வெள்ளோட்டம் விடப்பட்டது. அந்த விழாவில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி, ''இந்த சிறிய காருக்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது'' என்று நா தழுதழுக்க தனது மகன் சஞ்சய்காந்தியின் கனவையும் ஆசையையும் நினைவு கூர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரையான மாருதியின் கதைதான் 'தி மாருதி ஸ்டோரி' என்கிற பெயரில் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. 'மாருதி சுஸ¨கி இந்தியா லிட்'டின் தற்போதைய சேர்மன் ஆர்.சி. பார்கவா, சுமார் 20 ஆண்டுகள் மாருதியில் பல வகைப் பொறுப்புகளிலிருந்து இன்று அதன் சேர்மனாக உயர்ந்திருப்பவர். இவரும் பிரபல பத்திரிகையாளர் சீதாவும் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள்.
இந்தப் புத்தகத்தின் மூலம் நூலாசிரியர்கள் மாருதியின் 27 ஆண்டு சரித்திரத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நாளன்றுக்கு 100 கார்கள் (ஆண்டுக்கு சுமாராக 36,500 கார்கள்) மட்டுமே உற்பத்தித்திறன் கொண்டிருந்த மாருதி, இப்போது ஆண்டுக்கு 10 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறன் பெற்றிருக்கிறது. அரசு நிறுவனமாக ஆரம்பித்த 'மாருதி உத்யோக்' இன்று 'மாருதி சுஸ¨கி'யாக மாறி, தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நிரூபித்திருக்கிறது.
என்னதான் அரசு நிறுவனமாக இருந்தாலும், அனுமதிகள் என்பது பறித்த பழமாக தானாக வந்து விடவில்லை. இதன் சேர்மன்களும், மேலாண்மை இயக்குநர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைத் திறம்பட முடிக்க நிறையவே கஷ்டப் பட்டதை புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள் ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். சுஸ¨கி நிறுவனத்தின் பிரசிடென்ட்டாக இருந்த ஓசாமு சுஸ¨கி மாருதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப் பிலிருந்தவர்களிடம் வைத்திருந்த நம்பிக்கை பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது.
ஆரம்ப காலத்தில் கார் புக் செய்தவர்களுக்கு எப்படி அது டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா? ஹரியானாவின் குர்கானில் உள்ள மாருதி தொழிற் சாலையிலிருந்து மாருதி டீலர் எங்கிருக்கிறாரோ, அதுவரை கார் ஓட்டிச் செல்லப்பட்டது. இதனால் கார் புக் செய்தவர் களுக்கு இன்றைக்கு ஷோ ரூமிலிருந்து கிடைப்பது போல புத்தம் புதிய கார் அன்று கிடைக்கவில்லை. காரணம், அன்றைக்கு கார்களை கொண்டு செல்லும் அளவிற்கு ரயில் பெட்டியோ, டிரெய்லரோ இல்லை. இந்த நேரத்தில், அமெரிக்காவில் வேலை பார்த்துவந்த கே.ரங்கசாமி என்கிற ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயர் இந்தியா திரும்ப தீர்மானித்தார். இந்தியாவுக்கு ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாருதி காரைக் கொண்டு செல்லத் தேவையான டிரெய்லரை வடிவமைத்துக் கொடுக்க மாருதியுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் வடிவமைத்த டிரெய்லரில்தான் 1984 முதல் மாருதி கார்கள் கொண்டு செல்லப்பட்டன. அதன்பிறகு ரயில்வே வேகன்களில் கார்களைக் கொண்டு செல்லும் படி மாற்றி அமைக்கப்பட்டது. இப்படி பல சுவையான விஷயங்கள் இப்புத்தகத்தில் பொதிந்து இருக்கின்றன.
அன்றைக்கு ஆண்டுக்கு லட்சம் கார்கள் தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இன்று ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் தயாரிப்பது சாதாரண விஷயமாகி விட்டது என்பதை தன் அனுபவங்களோடு விவரிக்கிறார் நூலாசிரியர் பார்கவா. ஜப்பானியர்களின் தொழில் நேர்த்தியையும், கலாசாரத்தையும் மாருதி நிறுவனத்தில் அறிமுகப்படுத்த அன்றைக்குத் தலைமைப் பொறுப்பிலி ருந்தவர்கள் பட்ட கஷ்டங்களும் இப்புத்தகத்தின் ஆரம்பத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
மாருதி ஆரம்பிக்கும்போது இந்தியாவில் கார் தயாரிக்கும் நிறுவனங்கள் மூன்று மட்டும்தான். அதாவது, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் (அம்பாசிடர்), பிரிமீயர் ஆட்டோமொபைல்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ். ஆனால் இன்றைக்கு 26 கார் நிறுவனங் களும், 125 மாடல்களும், 400 விதமான (Varients) கார்களும் இந்தியாவில் விற்பனையாகிறது. அது போல ஒரு லட்ச ரூபாய் 'நானோ'விலிருந்து பல கோடி பெறுமான 'மேபாக்' (Maybach) வரையிலும் கிடைக்கிறது.
உலகத்தின் முக்கியச் சாலைகளில் ஓடும் அனைத்துக் கார்களும் இந்தியாவில் விற்பனைக்கு இருக்கின்றன.
ஆனால் இன்றைக்கும் இந்திய கார் சந்தையில் முதலிடம் மாருதிக் குத்தான். (கார் சந்தையில் இதன் பங்கு கிட்டத்தட்ட 55%). ஒரு மாடலில் ஆரம்பித்த மாருதி, இன்றைக்கு 13 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஆரம்பித் ததிலிருந்து இதுவரை கிட்டத் தட்ட 87 லட்சம் கார்கள் தயாரித்து விற்பனை செய்திருக்கிறது.
இந்நிறுவனம்தான் முதன் முதலில் 40% வெளிநாட்டு மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1991-ன் தாராளப் பொருளாதாரக் கொள்கையின் முன்னோடி மாருதி!
ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இந்நிறுவனத்தின் செயல்பாடு குறித்து பாராளுமன்றத்தில் பல முறை கேள்வி கேட்கப்பட்டு சர்ச்சைக்கு உள்ளாயிருக்கிறது. ஆளுங்கட்சி எம்.பி.யின் உறவினருக்கு கான்ட்ராக்ட் தரவில்லை என்பதற்காக பழிவாங்கும் நோக்குடன் நூலாசிரியரின் மீது விசாரணை நடத்தப்பட்ட சம்பவங்களும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு சுவராஸ்யமான செய்தி: மாருதியின் முதல் காரைப்பெற்ற அதிர்ஷ்டசாலி, திருப்பதி வெங்கடாசலபதிதான்! இந்நிறுவனத்தின் கொள்கைப்படி யாருக்கும் காரை நன்கொடையாகவோ அல்லது இலவசமாகவோ கொடுக்கக்கூடாது. மாருதி ஊழியர்கள் மற்றும் டீலர்கள் சேர்ந்து பணம் போட்டு முதல் காரை வாங்கி அதை ஏழுமலையானுக்குச் சமர்பித்தனர். ஆண்டவனும் மாருதியைக் கைவிடவில்லை. முதல் ஆண்டே ரூபாய் 1.7 கோடி லாபம் ஈட்டித் தந்தார். திட்ட அறிக்கையின்படி 1987, 88-ல்தான் மாருதி ப்ரேக் ஈவனைத் தாண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் 1984-85லேயே லாபத்தைத் தொட்டுவிட்டது.
'மக்கள் கார்' பற்றிய இந்தப் புத்தகம் மக்கள் பலரைச் சென்றைடையும் புத்தகமாக (விலை மலிவாக) இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

புத்தக விமர்சனம்

Author: Nagaraji.B /

புத்தக விமர்சனம்

னவரி 27, 2010... அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்திலுள்ள 'யெர்பா பியூனா சென்டர் ஃபார் ஆர்ட்ஸ்' மையம் முக்கியமான ஒரு வி.ஐ.பி-க்காக காத்துக் கொண்டிருந்தது. 70 மற்றும் 80-களில் கணினித் துறையைக் கலக்கிய ஆப்பிள் கம்ப்யூட்டரின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் அந்த வி.ஐ.பி. அன்றைய தினம், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மெகா தயாரிப்பான 'வீறிணீபீ' என்கிற டேப்லட் (TABLET) கம்ப்யூட்டரை அகில உலகுக்கும் அறிமுகம் செய்யவிருந்தார் ஸ்டீவ்.
புதுமைக்கும், புரட்சிகரமான யோசனைகளுக்கும் உலகளவில் பெயர் பெற்றது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிதாமகனான ஸ்டீவ் ஜாப்ஸ், 1976-ல் அந்த நிறுவனத்தை தனது பெற்றோர்களின் கார் ஷெட்டில்தான் ஆரம்பித்தார். நன்றாக நடந்துவந்த நிறுவனம் 1980-களில் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தது. நிறுவனத்தின் உட்பூசலால் அதைத் தொடங்கிய ஸ்டீவையே தூக்கி யெறிந்தனர் உடனிருந்தவர்கள். அதற்குப் பிறகு ஸ்டீவ் தனியாக 'நெக்ஸ்ட்' (NeXT) என்கிற நிறுவனத்தையும் அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிக்கும் 'பிக்ஸர்' (Pixar) என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்து, மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார்.
1997-ல் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை அதலபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் ஸ்டீவ்வின் 'நெக்ஸ்ட்' நிறுவனத்தின் திறமை கண்டு அதற்கு விலை குறிக்கப்பட்டது. அதன்படி, கிட்டத்தட்ட 450 மில்லியன் டாலர்களுக்கு அது ஆப்பிளால் வாங்கப்பட்டது. ஸ்டீவ் மீண்டும் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனால் மூடப்படவிருந்த ஆப்பிள் நிறுவனம் காப்பாற்றப்பட்டது.
இந்தப் புத்தகத்தில் ஆப்பிள் நிறுவனம் பற்றியும் அந்நிறு வனத்தின் கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் இருக்கும் செயல்திறன் பற்றியும் விலாவாரியாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் லியாண்டர். ஸ்டீவ்வின் குணாதிசயங்களான முழுமைத்துவம், சிறுசிறு விஷயங் களிலும் கவனம் செலுத்தும் தன்மை, பொருளின் வடிவமைப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் போன்ற பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்திருக்கிறார். இவருக்கும் மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ¨க்கும் இடையிலான விவாதங்களும் தீர்வுகளும் ஆங்காங்கே தலைகாட்டியிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் லியாண்டர் அமெரிக்காவின் பிரபலமான 'வயர்ட்.காம்' (Wired.com) என்கிற நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் என்பதால் ஸ்டீவ் பற்றிய அனைத்து அம்சங்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
இந்தப் புத்தகம் தொழில்முனைவோர்களுக்குத் தேவையான பல தொழில் யுக்திகளை புட்டுப் புட்டு வைக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்தப் புத்தகத்தை எல்லோரும் படிக்கவேண்டும். இதற்கு ஒரு சின்ன உதாரணம், ஸ்டீவ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக வந்தபிறகு அவர் எடுத்த முதல் நடவடிக்கை ஆப்பிள் நிறுவனம் சந்தைப்படுத்தி வந்த 40 பொருட் களை 4 பொருட்களாகக் குறைத்ததுதான்! 50, 60 பொருட்களை மானாவாரியாகத் தயார் செய்து விற்பதைவிட நம்மால் சிறப்பாகத் தயார் செய்து விற்க முடியக்கூடிய 5 பொருட்களை தயார் செய்தால் போதும் என்பதுதான் இதற்குக் காரணம்.
'புதிய பொருட்களை அல்லது கருவிகளை உருவாக்கி வடிவமைக்கும் திறமை, ஒரு பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அவர் அந்தப் பொருளை அறிமுகப்படுத்தும் விதம் (Product Presentations), அவருடைய ஒப்பந்தநோக்குடன் கூடிய கலந்துரையாடல் (Negotiation Skill or Skills in cutting deals). இந்த மூன்றிலும் இவரை மிஞ்ச ஆளில்லை' என்கிறார் ஆசிரியர். இதற்கு 'ஸ்டே ஃபூலிஷ், ஸ்டே ஹங்ரி' (Stay Foolish, Stay Hungry) என்கிற பெயரில் அவர் சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையே சான்று.
இவ்வளவு பேரும், புகழும் பெற்ற ஸ்டீவ் ஒரு என்ஜினீயரோ அல்லது புரோகிராமரோ அல்லது நிர்வாகவியல் படித்தவரோ அல்ல. கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டவர். பொருட்கள் பற்றியும் தொழில் நுட்பம் பற்றியும் என்ஜினீயராக அல்லாமல் சாதாரண வாடிக்கையாளராக, உபயோகிப்பாளராக இருந்து சிந்திப்பவர். தனது நிறுவனப் பொருட்கள் மற்ற நிறுவனப் பொருட்களைவிட தரத்தில் உயர்ந்தே இருக்கவேண்டும் என்று கருதுபவர். இதனால், ஆப்பிள் நிறுவனப் பொருட்களின் விலையும் சற்றே தூக்கலாகத்தான் இருக்கும்.
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டீவை அறிந்த பலரிடம் அவரைப் பற்றி கருத்து கேட்டு எழுதி இருக்கிறார். அதுபோல ஸ்டீவையும் சந்தித்து அவருடைய கருத்துக்களையும், எண்ணங்களையும் வெளியிட்டிருந்தால் இப்புத்தகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அட்லீஸ்ட், அவரிடமிருந்து ஒரு முன்னுரையாவது கேட்டு வாங்கிப் போட்டிருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் 'ஸ்டீவிட மிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள்' என தொகுத்துக் கொடுத்திருப்பது இதன் சிறப்பு.

புத்தக விமர்சனம் -The India Way..

Author: Nagaraji.B /

புத்தக விமர்சனம்
ரு காலத்தில் எதற்கெடுத்தாலும் மேலை நாட்டை மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று அவர்கள் நம்மை அனைத்துத் துறைகளிலும் பின்பற்றும் நிலைக்கு வளர்ந்திருக்கிறோம், வளர்ந்து கொண்டிருக்கிறோம்... இதன் பின்னணியில் அமெரிக்காவின் வார்ட்டன் ஸ்கூலைச் சேர்ந்த நூலாசிரியர்கள் இந்தியாவில் உள்ள 100 பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.-க்களிடம் பேட்டிக் கண்டு, அவர்களின் நிறுவனங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் முடிவுகளை புத்தக வடிவில் தந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் 3,000 டாலருக்கு காரும், 300 டாலருக்கு கம்ப்யூட்டரும், 30 டாலருக்கு மொபைல் போனும் கிடைப்பது சாத்தியமாகியிருக்கிறது. இதற்குக் காரணம் புதுமைகளைக் கண்டறியும் ஆராய்ச்சிக் கூடமாக இந்தியா மாறிவருவதுதான். இந்தியாவின் மென்பொருள் தொழில் வளர்ச்சி பற்றி நூலாசிரியர்கள் குறிப்பிடும்
போது, ''ஆரம்பத்தில் விலை மலிவு என்பதால் வாடிக்கையாளர்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கிறார்கள். அதற்குப்பிறகு அத்தொழிலில் இருக்கும் தகுதி, திறமை கருதி அப்படியே இங்கேயே நிலைத்து விடுகிறார்கள்'' என்கிறார்கள். இதனால்தானோ என்னவோ, நமது மென்பொருள் மற்றும் பி.பீ.ஓ. நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 'இந்தியாவுக்கு வேலைகளை அனுப்பும் நிறுவனங்களுக்கு அதிகமாக வரி விதிக்கப்படும்' என்கிற அறிவிப்பை கேட்டும் அதிகமாக சலித்துக் கொள்ள வில்லை!
1991-க்கு முன்னும், பின்னும் அரசு அதிகாரிகளின் செயல்பாடு குறித்து புராக்டர் அண்ட் கேம்பிளின் தலைமைப் பொறுப்பிலிருந்த குருசரண்தாஸ் குறிப்பிடும் போது, ''எனது முப்பது ஆண்டுகால பிஸினஸ் வாழ்க்கையில் நான் சம்பந்தப்பட்டத் தொழிலை அறிந்து கொண்ட ஒரு அதிகாரியைக் கூட நான் சந்தித்ததில்லை. இருப்பினும் எனது தொழிலை நசுக்கும் சக்தி அவர்களிடம் இருந்தது'' என்கிறார். எவ்வளவு அப்பட்டமான உண்மை. ஆனால் இன்று நிலைமை மாறிவருகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமங்களான டாடாவும், பிர்லாவும் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியுடன், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டன. 1898-ம் ஆண்டில், நாட்டு நலனில் அக்கறை கொண்ட டாடா குழுமத்தின் அப்போதைய தலைவ ரான ஜாம்ஷெட்ஜி டாடா தனது சொத்தில் பாதியை கிட்டத்தட்ட 2 லட்சம் பவுண்ட்டை பெங்களூரில் 'இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்' ஆரம்பிக்கக் கொடுத்தார். இது அமெரிக்காவில் 'கார்னிஜ் மெலன் பல்கலைக்கழகம்' ஆரம்பிக்க ஆண்ட்ரூ கார்னிஜ் கொடுத்த 1 மில்லியன் டாலரை விட அதிகமானதாகும் (அந்த காலகட்ட மதிப்பீட்டின்படி)!. ஆக, இந்திய நிறுவனங்களிடம் தனிநலனிலும் பொதுநலம் மிகுந்திருக்கிறது. தவிர, 'ஜுகாத்' என சொல்லப்படுகிற இருக்கிற வசதி வாய்ப்புகளை மிகவும் திறமையாகப் பயன்படுத்தும் தன்மையும் இந்தியர்களாகிய நமக்குக் கை வந்த கலை.
இந்தியா வழி நிறுவனங்கள் செயல்படும் விதம் மேல்நாட்டு நிறுவனங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. இவைகளில் முக்கியமானவை...
தங்கள் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை நிர்வகிக்கும் திறன்.
தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் நிர்வாகத்திறமை.
போட்டியிடும் செயல்திறம்.
நிறுவனத்தை நடத்திச் செல்லும் விதம்.
பொதுநலனில் அக்கறை.
அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணி புரிபவர்களை ஒரு பளுவாகவே கருதுகின்றன. மாறாக, இந்திய நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிபவர்களை ஒரு சொத்தாகக் கருதுகிறார்கள். இன்றைக்கு மென்பொருள்
துறையில் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத் திற்கு தாவிச் செல்பவர்கள் அதிகம் (சராசரியாக 17 சதவிகிதம்). அப்படியிருந்தபோதும் அவர்களுக்கு 6 மாதம் முதல் 9 மாதம் வரை பயிற்சி கொடுக்கப்படுகிறது. காரணம், பயிற்சி கொடுத்த நிறுவனத்தை விட்டு அவர்கள் வேறு நிறுவனத்திற்குச் சென்றாலும் பலன்
மென்பொருள் துறைக்குத்தான் என்கிற ஒரு பரந்துபட்ட கண்ணோட்டம் அத்துறையை நிர்வகிப்பவர்களிடம் இருப்பதுதான்.
அமெரிக்க நிறுவனங்களின் குறிக்கோள், நிறு வனத்தின் பங்குதாரர்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது மட்டும்தான். ஆனால் இந்திய நிறுவனங்கள் பங்குதாரர்களின் நலனுடன் பணிபுரிபவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டுவருகின்றன.
இது பற்றி 18 நாடுகளில் 55,000 பேர்கள் வேலை பார்க்கும் ஹெச்.சி.எல்.நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் வினித் நய்யார் தங்களது நிறுவனத்தின் குறிக்கோளாகச் சொல்வது.. 'பணியாளர்கள் முதலில், வாடிக்கை யாளர்கள் பிறகு'. இது சற்று கடினமான ஆனால் மிகவும் தைரியமான ஒரு கொள்கைதான். இதற்கு அவர் கூறும் காரணம், பணியாளர்களை நன்கு கவனித்துக் கொண்டால் அவர்கள் வாடிக்கையாளர்களைக் கண்டிப்பாக நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கைதான்!
இந்தியர்களிடம் உள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து செல்லும் தன்மையும், நிர்வாகத்தை வழிநடத்தி செல்லும் திறமையும் நிறுவனங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. இதற்கு உதாரணம், 2001-ம் ஆண்டு வார்ட்டன் ஸ்கூலின் 120 ஆண்டுகால வரலாற்றில் எப்போதும் இல்லாத நிகழ்வாக அதன் பட்டமளிப்பு விழாவில் கிட்டத்தட்ட 1,000 எம்.பி.ஏ. மாணவர்களின் மத்தியில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தலைமையுரை நிகழ்த்தினார். அதன் பின் 2007-ல் லட்சுமி மிட்டல் உரை நிகழ்த்தினார். காரணம், அவர்களின் நிர்வாகத்திறனில் அவர்கள் தலைமை வகித்த நிறுவனங்கள் பெற்ற வெற்றிதான்!
இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் பேட்டி கண்ட இந்திய தொழில் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் 100 பேர்கள் பற்றிய குறிப்பும், இந்நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் உள்ளவர்களிடம் கேட்ட கேள்விகளும், அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்களுக்கிடையேயான வித்தியாசங்களும் மட்டுமே புள்ளி விவரங்களுங்களுடன் கிட்டத்தட்ட 120 பக்கங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஆசிரியர்களின் முயற்சியை வெளிப்படுத்தினாலும், படிக்கும் நமக்கு கொஞ்சம் சலிப்புத் தட்டுகிறது.
இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது நமக்குத் தோன்றுவது, 'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்..' என்கிற வரிகள்தான். இந்தியாவை உலகம் உற்று நோக்குவதுடன் மட்டுமல்லாமல் பின்பற்றவும் ஆரம்பித்திருக்கிறது என நினைக்கும் போது மனது நிறைகிறது!

Tipping Point...

Author: Nagaraji.B /

டிப்பிங் பாயின்ட் என்றால் என்ன? ஏதாவது ஒரு சமூகப் பழக்கம் அல்லது ஒரு புதிய பொருள் அல்லது ஒரு புத்தகம் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்து, காட்டுத் தீ போல் பரவுவதை பார்த்திருக்கிறோம். இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று ஆராய்ந்தால், ஒரு சிறிய விஷயம்தான் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். அந்தச் சிறிய விஷயம்தான் டிப்பிங் பாயின்ட்.
இன்னொரு கோணத்தில் இதைப் பார்ப்போம். நம்மைச் சுற்றியுள்ள பல பொருட்கள் லேசில் அசைக்க முடியாதவையாக உள்ளன. ஆனால், சரியான இடத்தில் ஒரு சிறிய தள்ளு தள்ளினால், அது அசைந்து கொடுக்கத்தான் செய்கிறது. அந்தச் சரியான இடம்தான் டிப்பிங் பாயின்ட். இதை எப்படி நம் வசப்படுத்துவது என்கிற நெம்புகோல் சூத்திரம், சக்ஸஸ் ஃபார்முலா. அதைத்தான் இந்தப் புத்தகம் அருமையாகச் சொல்லி இருக்கிறது. 1958-இல் வுல்வரின் வேர்ல்ட் வைட் (Wolverine World Wide) என்ற நிறுவனம் ஹஷ் பப்பீஸ் ஷூக்களை அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. பன்றித் தோலால் செய்யப்பட்ட இந்த ஷூக்களின் அடிப்பாகம் (Sole) ரப்பரால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தக் காரணங்களால், ஹஷ் பப்பீஸ் மக்கள் மனங்களில் நச் என்று இடம் பிடித்தது; விற்பனை பல லட்சம் ஜோடிகளாகிச் சிகரம் தொட்டது.
1994-ல் விற்பனை சரியத் தொடங்கியது. அந்த வருட விற்பனை 30,000 ஜோடிகளே. தயாரிப்பை நிறுத்த முடிவு செய்தது கம்பெனி. அப்போது ஓர் ஆச்சரியம்.... கம்பெனி எந்த முயற்சியும் எடுக்காமலே, விற்பனை எகிறத் தொடங்கியது. 1995-ல் விற்பனை 4 லட்சம் ஜோடிகள்; 1997-ல் 17 லட்சம் ஜோடிகள். எப்படி நடந்தது இந்த ஜீபூம்பா வேலை?
செசமி ஸ்ட்ரீட் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி. அமெரிக்கக் குழந்தைகளுக்கு கல்வி அறிவை சுவாரசியமாக ஊட்டுவதற்காக 1969-ல் தொடங்கியது இந்த நிகழ்ச்சி. இன்று 120 நாடுகளில் 350 சேனல்களில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு 80 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 40 வருடங்களாகத் தொடர்ந்து ஒளிபரப்பாகி, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் அதிக வருடங்கள் ஓடும் தொடர் என்ற பெருமையையும் நூற்றுக்கணக்கான விருதுகளையும் இந்த நிகழ்ச்சி பெற்றது எப்படி?
நமக்குள்ளும் இப்படி விடைகள் கிடைக்காத புதிர்கள் பல உண்டு. நாம் இந்தக் கேள்விகளை அடிமனத்தில் ஆராரோ பாடி தூங்க வைத்துவிடுகிறோம். ஆனால், இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் மால்கம் க்ளேட்வெல், கொஞ்சம் வித்தியாசமாக, தன் மனத்தில் எழுந்த பெரிய கேள்விகளை ஆழமாக ஆராய்கிறார்; அதற்கான விடைகளைச் சொல்கிறார். அவர் கண்டுபிடித்த விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். புத்தகம் வெளியான ஆறே வருடங்களில் அமெரிக்காவில் மட்டும் 20 லட்சம் பிரதிகள் விற்பனையானது என்கிற தகவலே போதும், இதன் வரவேற்பை எடுத்துச் சொல்ல.
க்ளேட்வெலின் இந்த அமோக வெற்றிக்குக் காரணம், அவருடைய தர்க்க ரீதியான, வித்தியாசமான சிந்தனை. நாம் விடைகள் தேடும் பல கேள்விகளுக்கு க்ளேட்வெல் தரும் பதில்களும் அவர் எடுத்துவைக்கும் வாதங்களும் நாம் ஆண்டாண்டு காலமாக நம்பிக் கொண்டிருக்கும் ஏராளமான கோட்பாடுகளைத் தகர்க்கின்றன.
சில உதாரணங்கள்:
குழந்தைகளின் அறிவு மற்றும் குணங்கள் டி.என்.ஏ. காரணங்களால் மரபணுக்கள் மூலம் நிச்சயிக்கப்படுகின்றன. இது அறிவியல் உண்மை. டி.என்.ஏ. தவிர, பெற்றோர் நம்மை வளர்க்கும் முறையும் குண நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நம் நீண்ட கால நம்பிக்கை. 'இல்லை' என்கிறார் புத்தக ஆசிரியர் க்ளேட்வெல். பெற்றோர் வளர்ப்பினால் பாதிப்பு ஏற்படாது; சுற்றுப்புறச் சூழலில் இருக்கும் சம வயதினரின் தாக்கமே பாதிப்பை உண்டாக்கும் என்று வாதிடுகிறார், நாமே ஒப்புக் கொள்ளும் விதத்தில் அழகாக, ஆணித்தரமாக.
'புகை பிடிப்பதைத் தடுக்க மக்கள் மனத்தில் கேன்சர் பயத்தை ஏற்படுத்துகிறோம்; விற்பனையைக் கட்டுப்படுத்துகிறோம்; பொது இடங்களில் புகைக்கத் தடை விதிக்கிறோம். இவை அத்தனையும் மிகக் குறைவான பலன்களையே தரும். புகை பிடித்தலுக்கு முக்கிய உந்துதல் மனச்சோர்வு. இதைத் தடுத்தால் மட்டுமே புகை பிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்' என்கிறார். மறுக்க முடியவில்லை.
இப்படி ஏராளமான புதுமைக் கருத்துக்கள். அத்தனையிலும் என்னை மிகவும் கவர்ந்தது க்ளேட்வெலின் தி ரூல் ஆஃப் 150. கூட்டங்கள், தொழிற்சாலைகள் திறமையாகச் செயல்பட வேண்டுமெனில் அவை அணிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். அதன் மொத்த அங்கத்தினர்கள் எண்ணிக்கை நூற்று ஐம்பதைத் தாண்டக்கூடாது. ஏன் என்பதற்கான காரணத்தை இந்தப் புத்தகத்தில் ஆணித்தரமாக எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர்.
க்ளேட்வெல் முக்கிய டிப்பிங் பாயின்ட்டாக எதைச் சொல்கிறார்? எந்தக் கருத்தையும் வீரியத்தோடு பரப்ப வேண்டுமானால், வாய்வழிச் செய்தி மிக மிக முக்கியமானது. சரியான தொடர்பாளர்கள் மூலமாகச் செய்தி பரப்பப்பட்டால், வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம் என்கிறார். இந்தச் சரியான தொடர்பாளர்களை க்ளேட்வெல் 'மாவென்'கள் என்று அழைக்கிறார். 'மாவென்'கள் பரந்த அறிவு கொண்டவர்கள்; தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சுயநலமே இல்லாமல் தங்கள் அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்பவர்கள்; எல்லோருடனும் தயக்கமில்லாமல் பழகும் சமூகத் திறமை பெற்றவர்கள். உங்களுக்குத் தெரிந்த எல்லா டிப்பிங் பாயின்ட்களையும் நினைவுபடுத்திப் பாருங்கள். அவற்றுக்குப் பின்னால் நிச்சயம் ஒரு 'மாவென்' இருப்பார்.
புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்த சித்தார்த்தன் சுந்தரம், நிச்சயம் கை குலுக்கலுக்குத் தகுதியானவர். மொழிபெயர்ப்புப் புத்தகம் என்ற உணர்வே தோன்றாமல் எளிமையாக, சுவாரஸ்யமாக புத்தகத்தைத் தமிழில் தந்திருக்கிறார்.
சின்ன ஆலோசனை... ஹஷ் பப்பி பற்றி மட்டுமே முதல் அத்தியாயம் விளக்குகிறது. அப்புறம் வரும் செசமி ஸ்டிரீட், பாஸ்ட்டன் டீ பார்ட்டி போன்ற உதாரணங்கள் அமெரிக்க வாசகர்களுக்குப் பரிச்சயமானவை. நமக்கு இந்த உதாரணங்கள் தெரியாதவை. எனவே, ஆசிரியரின் கருத்துக்களைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கிறது. இவை போன்ற உதாரணங்களின் பின்புலங்கள் புத்தகத்தின் ஆரம்பத்திலோ அல்லது ஆங்காங்கேயோ விளக்கியிருந்தால், இன்னும் எளிதாகப் புரிந்திருக்கும். ஃப்ரான்சிஸ் பேக்கன் சொல்வார்: ''சில புத்தகங்கள் ருசிக்க; சில விழுங்க; சில சுவைத்துச் சாப்பிட்டுச் செரிக்க.'' இந்தப் புத்தகம் நிச்சயமாக மூன்றாம் வகைதான்.
 

புத்தக விமர்சனம் -Alexander the Great's Art of Starategy

Author: Nagaraji.B /

மாவீரன் அலெக்ஸாண்டர் பற்றி அறியாதவர்கள் அபூர்வம். 33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் உலகையே தன் காலடியில் கிடத்தியவன். எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அலெக்ஸாண்டரின் வீரத்திலும் விவேகத்திலும் கட்டுண்டவர்களாகதான் இருப்பார்கள். குறிப்பாக ராணுவம், அரசியல் மற்றும் தொழிற்துறைகளில் இருப்பவர்களுக்கு அந்த மாவீரன் ஒரு முக்கியமான ரோல் மாடல்.
அவன் இறந்து (கி.மு. 323) கிட்டத்தட்ட 2400 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் உலகம் அவன் புகழ் பாடக் காரணம் அவனுடைய செயல்திறன்தான். கி.மு. 356-ல் கிரேக்க நாட்டில் பிறந்த அலெக்ஸாண்டருக்கு மெசடோனியாவின் அரசனாக முடிசூட்டப்பட்ட போது 20 வயதே! அடுத்த 13 ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம்.
இந்நூலாசிரியரான பார்த்தா போஸிற்கு அலெக்ஸாண்டர் பற்றிய அறிமுகம், குவைத்திற்கு அருகிலிருக்கும் ஃபெயில்கா தீவிலுள்ள சிதிலமடைந்த துறைமுக நகரத்தை பெற்றோர்களுடன் தனது ஏழாவது வயதில் பார்வையிடச் சென்றபோது ஏற்பட்டதாகக் கூறுகிறார். அந்த ஈடுபாடும், தாக்கமும்தான் அலெக்ஸாண்டர் பற்றிய தேடலுக்கு வித்திட்டது என்றும் அதன் விளைவுதான் இந்தப் புத்தகம் என்றும் கூறும் இவர் 'டெல்லி மேனேஜ்மென்ட் அசோஸியேஷன்' விருது பெற்றவர்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு பிளேட்டோ அகாதமியில் அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்றவர் அலெக்ஸாண்டர். அன்றைக்கு அவர் கண்டுபிடித்த, பயன்படுத்திய ராணுவ யுக்திகள் இன்றும் பலரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அலெக்ஸாண்டரின் தலைமைப் பண்பு மற்றும் ராணுவ செயல்திறனால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர். அவர்களில் சிலர் வின்ஸ்டன் சர்ச்சில், ஆப்ரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, பிராங்ளின் ரூஸ்வெல்ட், ஜாக் வெல்ஸ் (ஜீ.இ. நிறுவனத்தின் முன்னாள் அதிபர்). அது போல அவனது யுக்திகளில் சிலவற்றை தங்களது தொழில் மேம்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வெற்றி பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் கிழக்கிந்திய கம்பெனி, டெல், ஜீ.இ, ஹோண்டா, வால்மார்ட் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்நூலின் சிறப்பு என்னவென்றால் அன்றைக்கு அலெக்ஸாண்டரினால் கடைப்பிடிக்கப்பட்ட, அறிமுகப்படுத்தப்பட்ட பல செயல்திறன்கள் எப்படி அவனுக்குப் பிறகு இன்றைக்கு வரைக்கும் தொழில், ராணுவ மற்றும் அரசியல் வெற்றிகளுக்கு உதவியாக இருந்து வருகிறது என்பதைப் பல ஆதாரங்களுடன் தந்திருப்பதுதான். அலெக்ஸாண்டர் அப்படி என்னதான் செய்துவிட்டார்? என்று கேட்கிறவர்களுக்கு இதோ அவருடைய சில செயல்முறைகளும் யுக்திகளும்:


பல தரப்பிலிருந்தும் செய்திகளை சேகரித்து அதன் அடிப்படையில் தனது செயல்திறனையும் தாக்கும் தன்மையையும் வடிவமைப்பது.
எதிரியை வெற்றி கொள்வதுடன் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தைப் படிப்படியாக நிர்மாணிப்பது.
ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் தான் எடுத்த முடிவு அல்லது தனது செயல்பாடுகள் குறித்து தனக்குள்ளே தர்க்கம் செய்து கொள்வது. இது நாமே ஒரு தெளிவான முடிவுக்கு வர வழி வகுக்கும்.
கேட்கும் கேள்வியை நன்கு, தெளிவாகக் கேட்பது.இது தலைமைப் பண்புக்கு மிகவும் அவசியமான ஒன்று. அனைவருக்கும் அறிமுகமான, தெரிந்த முகத்தை தலைமைப் பதவிக்கு அமர்த்துவது. தனக்குப் பிறகு தலைமைப் பொறுப்பிற்கு யார் வருவார் என்பதை அனைவரும் அறியும்படி செய்வது.
எந்த இடத்தில் தாக்குதல் நடத்துவது அல்லது போட்டியிடுவது என்பதைத் தீர்மானிப்பது. உதாரணம். 1959-ல் அமெரிக்காவில் ஹோண்டாவின் 'சூப்பர் கப்' மொபெட் அறிமுகம். இன்றைக்கு வரை, இதன் உலகம் தழுவிய விற்பனை கிட்டத்தட்ட மூன்று கோடி. இன்னும் இது உற்பத்தியில் உள்ளது.
எப்போது சந்தையில் நுழைவது, எப்போது வெளியேறுவது. மழை காலத்தில் உப்பு விற்க கிளம்பாதே என்பார்கள். எந்தத் தொழிலாக இருந்தாலும் எந்த நேரத்தில் நாம் சந்தையில் நுழைகிறோம் என்பது முக்கியம். அதே போல, ஒரு தொழிலை விட்டு வெளியேற வேண்டுமெனில் சரியான நேரத்தில் வெளியேற வேண்டும். கம்பெனியின் பெயர் நல்ல நிலையில் இருக்கும்போது விற்றால் லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் கிடைக்கும் லாபத்தைத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பெரிய தொழிலை திறம்பட நிர்வகிப்பது. இதற்கு மிகச் சிறந்த தீர்வு, அதை பல சிறிய பிரிவுகளாக ஆக்குவது. குழப்பத்தைத் தவிர்க்க 'ஒரு முகத் தொடர்பு' (single point contact) அமைப்பது.
இப்படி புத்தகம் முழுவதும் யுக்திகளும் யோசனைகளும் செயல் திறன்களும் ஆதாரப்பூர்வமான உதாரணங்களுடன் பரவலாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். இவை எல்லாவற்றையும் அலெக்ஸாண்டர் கடைப்பிடித்தாலும் இறுதியில் தனக்குப் பிறகு யாரிடம் அரசாட்சியை ஒப்படைப்பது என்பதைச் சரியாகத் தீர்மானிக்கவில்லை. அதனால் கிரேக்கச் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்தது. அவருக்குக் காய்ச்சல் வந்து படுத்தப் படுக்கையாக இருந்தபோது அவரிடம், 'உங்களுக்குப் பிறகு யார்?' என அவருக்கு நெருங்கியவர்கள் கேட்டபோது அவர், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் 'இருப்பதி லேயே வலிமையானவர்' எனப் பொதுப்படையாகச் சொல்லியதால் அரசை வழி நடத்த ஒரு திறமையான தலைமை அமையவில்லை. தனக்குப் பிறகு யார் என்கிற கேள்வி இன்றைக்கு நமது அரசியல் வட்டாரத்திலும் தொழில் வட்டாரத்திலும் முக்கியமாகக் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.
வாழ்க்கையில் வெற்றிக்கான சூத்திரங்களை வரலா றோடு எடுத்துச் சொன்ன இந்தப் புத்தகம், பிஸினஸ் உலகில் உள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
கொசுறு: உலகையே தன் காலடியில் விழ வைத்த அலெக்ஸாண்டரை வீழ்த்தியது ஒரு சின்ன விஷயம்தான். அந்த மகா மன்னன் இறந்ததற்குக் காரணம் அற்ப ஜந்துவான கொசுக்கள்தான். ஆம்..அந்த வீரனைச் சாய்த்தது மலேரியா நோய்தானே!
 

The Science of selling

Author: Nagaraji.B /


வாய்ஜாலம் மட்டும் போதாது!
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், பல வீடுகளில் நீங்கள் அடிக்கடி கேட்கும் உரையாடல் இது...
''உங்க பையன் டிகிரி முடிச்சிட்டானே? அடுத்து என்ன பண்ணப் போறான்?''
''குறைவான மார்க்தான் வாங்கிருக்கான்; எம்.ஏ. சேர முயற்சி பண்றான். அதுக்கு இடம் கிடைக்காட்டி இன்னொரு திட்டம் வெச்சிருக்கேன்.''
''என்னது அது?''
''பய நல்லாப் பேசுவான், எல்லோர்கிட்டேயும் நல்லாப் பழகுவான். அதனால் அவனை சேல்ஸ் லைனில் விட்டுடலாம்ன்னு நினைக்கிறேன்.''
''நல்ல ஐடியா சார். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். அதுவும் விற்பனைத் துறையில் ஜெயிக்க நல்லாப் பேசத் தெரிஞ்சாப் போதும். வேறே ஒண்ணுமே வேண்டாம்.''
இன்று எல்லாப் பொருட்களின் தயாரிப்பிலும்
விற்பனையிலும் போட்டிகள். அதுவும், பொருளாதாரத் தாராளமாக்குதலுக்குப் பிறகு போட்டிகள் உலக மயமாகிவிட்டன. உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் விற்பனையாகும் பொருட்களைப் பாருங்கள். பள்ளிக்கூடக் குழந்தைகள் வாங்கும் பேனா, பென்சில், ரப்பர், பொம்மைகள் என அவர்களுடைய பல தேவைகளைத் தீர்த்து வைப்பது தமிழ்நாட்டு, தென்னிந்திய, வட இந்தியப் பொருட்கள் அல்ல; சீனாவின் தயாரிப்புகள்தான் எல்லாம்!
எங்கிருந்து போட்டி வரும் என்றே தெரியாத சூழ்நிலை. நிறுவனம் தன் அதிக வியாபாரத்துக்கு, லாபத்துக்கு நம்பியிருப்பது விற்பனையாளர்களைத்தான். அந்த விற்பனையாளர்கள் அந்தக் காலத்தைப் போல வாய் ஜாலத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியாது. பழகும் சாமர்த்தியம், பேச்சுத் திறமை ஆகியவற்றைத் தாண்டி, ஏராளமான திறமைகள், குணநலன்கள் விற்பனையாளர்களுக்குத் தேவைப்படுகின்றன. அவை என்னென்ன என்று சொல்வதுதான் இந்தப் புத்தகம்.
தற்போதைய காலகட்டத்தில் விற்பனை என்பது வெறும் கலை மட்டும் அல்ல, அது அறிவியல் துறையை அடித்தளமாகக் கொண்டதும் ஆகும். அதனால்தான் 'தி சயின்ஸ் ஆஃப் செல்லிங்' என்கிற தலைப்பை இந்தப் புத்தகத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
விற்பனை என்பது கம்பெனிகளுக்கு எவ்வளவு முக்கியம் என்கிற பாலபாடத்தில் இருந்து முதல் அத்தியாயம் தொடங்குகிறது. அடுத்து வரும் பகுதிகளில்...
விற்பனையாளரின் பணிகள்.
விற்பனைத் திறமைகள்.
இலக்கில் குறி வைத்தல்.
வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்து கொள்ளுதல்.
வாடிக்கையாளர்களிடம் என்ன கேள்விகள், எப்படிக் கேட்பது?
வாடிக்கையாளர் எதிர்ப்புகளை வெற்றிகரமாகச் சந்தித்தல்.
விற்பனையைப் பெருக்கும் வழிகள்.
என விற்பனையின் எல்லா அம்சங்களையும் ஆசிரியர் முழுமையாக விளக்குகிறார்.
புத்தக ஆசிரியர் ஆலப்பாட், ஜாம்ஷெட்பூர் நகரில் இருக்கும் இந்தியாவின் முன்னணி நிர்வாகவியல் கல்லூரியான 'சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட்டில்' எம்.பி.ஏ. படித்தவர். பல ஆண்டுகள் சென்னை கோத்தாரி நிறுவனத்தில் பணியாற்றியவர். கடந்த முப்பது ஆண்டுகளாக சொந்த விற்பனை நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருவதோடு, விற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
இதனால், ஆலப்பாட் சொல்லும் கருத்துக்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் நடைமுறையில் கடைப்பிடிக்கக் கூடியவையாக இருக்கின்றன. புத்தகத்தின் அமைப்பிலும் எழுத்திலும் ஆசிரியரின் திறமை பளிச்சிடுகிறது.
விற்பனைத் துறை என்பது ஒரு மாபெரும் கடல். அதில் எந்த ஒரு முக்கிய அம்சத்தையும் விடாமல், அத்தனை விஷயங்களையும் 200 பக்கங்களில் சொல்லியிருப்பதை ஒரு சாதனை என்றே சொல்லலாம்! சொல்லிய விதத்திலும் அபார நேர்த்தி, ஒழுங்கு இருக்கிறது. பொதுவாக 200 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தில் 15, 20 அத்தியாயங்கள் இருக்கும். ஆனால், ஆலப்பாட் தன் புத்தகத்தை 37 சின்னச் சின்ன அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார்.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மையக் கருத்தைச் சொல்கிறது. அத்தியாய முடிவில் கருத்துச் சுருக்கத்தோடு முக்கியச் சொற்களுக்கான பொருளும் தந்துள்ளார். இரண்டாம் அத்தியாயம், முதல் அத்தியாயத்திலிருந்து நம் புரிதலை அடுத்த படிநிலைக்கு எடுத்துக்கொண்டு போகிறது. இப்படி 37 அத்தியாயங்களிலும் புரிதலில் மேலே நாம் பயணிப்பதை அருமையாகவே உணர வைக்கிறார் ஆசிரியர்.
விற்பனைத் துறையில் முதல் அடி எடுத்துவைக்க விரும்பும் கத்துக்குட்டி முதல் அனுபவசாலிகள் வரை அத்தனை பேருக்கும் பயன்படும்படியாகப் புத்தகம் அமைந்திருக்கிறது.
சில ஆலோசனைகள்: ஆசிரியரின் பல்வேறுபட்ட அனுபவங்களைப் பிரதிபலிக்கும் உதாரணங்களும் நிகழ்ச்சிகளும் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். வாசகர்களின் அறிவுக்கு மட்டுமல்ல, படிக்கும் சுவாரஸ் யத்தை அதிகரிக்கவும் அவை உதவியிருக்கும்.
வாசகர்களுக்கு சில பயிற்சிகளைக் கொடுத்திருக் கலாம். தெரிந்துகொண்ட கருத்துக்களைப் பட்டை தீட்டிக் கொள்ள அவை உதவியிருக்கும்.
இவை குறைகள் அல்ல, புத்தகத்தை இன்னும் மெருகேற்றும் ஆலோசனைகள்.
மொத்தத்தில் விற்பனைத் துறையில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி, அல்லது இத்துறை பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவராக இருந்தாலும் சரி, கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது

Employees First....

Author: Nagaraji.B /

பெரும்பாலான கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் 'வாடிக்கையாளர்தான் ராஜா' (Consumer is the King) என்று எழுதி வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 'கA Customer is the most important visitor to our premises என்று மகாத்மா காந்தி சொன்னதாக பல இடங்களில் எழுதி வைத்திருப்பதை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் ஹெச்.சி.எல். டெக்னாலஜியின் சி.இ.ஓ. வினித் நய்யார், தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குத்தான் முதல் மரியாதை; அதற்குப் பிறகுதான் வாடிக்கையாளர்கள் என்று ஒரு 'தடாலடி'யான கருத்தைத் திடமாகக் கூறியதுடன், அதை நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார். இந்தப் புதுமையான கருத்து தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவி யிருக்கிறது என்பதை இந்தப் புத்தகத்தில் பல சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகள் மூலமாகச் சொல்லியிருக்கிறார்.







1976-ல் சிவ் நாடார் ஆரம்பித்த ஹெச்.சி.எல். குழுமம் 25 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி டாலர் வருமானத்திலிருந்து 500 கோடி டாலர் வருமானத்துக்கு உயர்ந்தது. 2000 முதல் 2005 வரை நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் இருந்தாலும், மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது ஒரு தேக்கம் தெரிய ஆரம்பித்தது. நிறுவனத்தில் உள்ள பலரும் தங்களது நிறுவனத்தின் வளர்ச்சியில் திளைத்திருந்ததால் மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியை அவதானிக்கத் தவறிவிட்டார்கள்.



இந்த சமயத்தில்தான் சிவ் நாடாரின் வேண்டுகோளுக்கிணங்க ஹெச்.சி.எல்.டி.யின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் வினித். அதற்குப் பிறகு நடந்தது வரலாறு! இன்றைக்கு 26 நாடுகளில் சுமார் 58,000 பேர் வேலை பார்க்கும் இந்நிறுவனத்தின் (ஹெச்.சி.எல்.டி மற்றும் இது சார்ந்த நிறுவனங்கள்) வருமானம் கிட்டத்தட்ட 260 கோடி டாலர்! ஹெச்.சி.எல். நிறுவனம் 500 கோடி டாலர் வருமானத்தை எட்ட பல ஆண்டுகள் ஆனது. ஆனால் ஹெச்.சி.எல்.டி.



260 கோடி டாலர் வருமானத்தை எட்ட எடுத்துக்கொண்ட காலம் மிக சொற்பமான ஆண்டுகளே! இந்த விறுவிறு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது 'நிறுவன ஊழியர்களுக்கு முதல் மரியாதை' என்கிற கருத்து.



உலக அளவில் வேறு சில நிறுவனங்களும் இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து பெரிய வெற்றியைக் கண்டிருக்கின்றன. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், ஸ்டார்பக்ஸ் (உலக மெங்கும் காபி கடைகளை வெற்றிகரமாக நடத்தி வரும் நிறுவனம் இது) போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணங்கள்.



இந்த புரட்சிகரமான கருத்துக்குக் காரணம், 'நமது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் களை நன்கு கவனித்துக் கொண்டால், நிச்சயமாக அவர்கள் வாடிக்கையாளர்களிடம் நன்றாக நடந்து கொள்வார்கள்; அதனால் தொழில் செழிக்கும்' என்கிற ஒரு மனோரீதியான கொள்கைதான்.



இந்த கொள்கையை ஒரு நிறுவனத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் முக்கிய மாகத் தேவைப்படுவது, நாம் என்ன (What) செய்யவிருக்கிறோம்? அதை எப்படிச் (How) செய்யவிருக்கிறோம் என்பதுதான்.



இதற்கு நான்கு நிலைகளைச் சுட்டிக் காட்டுகிறார்

புத்தகத்தின் ஆசிரியர் வினித்.



1 மிரர் - மிரர் (நம்மை நாமே கண்ணா டியில் பார்த்துக் கொள்ளும்போது நம் வெளித்தோற்றத்தில் ஏதாவது தவறிருப்பின் அதைச் சரிசெய்து கொள்ளுகிற மாதிரி, ஒரு நிறுவனத் தில் ஏற்படும் மாற்றங்களைச் சரி செய்ய இது போன்ற ஒரு சுய அலசல் தேவை!)



2நிறுவனத்தில் மாற்றம் கொண்டுவரும் எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதை நடைமுறைக்குக் கொண்டுவரும் தைரியம் ஒரு சிலரிடம்தான் இருக்கும். இந்த இரண்டிற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டு மெனில் ஊழியர்களிடையே நம்பிக்கையையும் நிறுவனத்தின் குறிக்கோள்களையும் அதை அடையக்கூடிய வழிமுறைகளையும் எந்த ஒளிவு மறைவுமின்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.



3 பிரமிட் போன்று இருக்கிற நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுமானத்தைத் தலைகீழாக ஆக்க வேண்டும். நிறுவனத்தில் காலங்காலமாக இருந்து வரும் 'பல அடுக்கு'களை (Hierarchy) உடைத்து, 'வேல்யூ ஜோன்' (Value Zone) என்கிற ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். இங்குதான் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தொடர்பு வைத்துக் கொள்வார்கள். அதற்குத் தலைமை நிர்வாகம் தனது முழு ஒத்துழைப்பையும் தரவேண்டும். (இந்த வேல்யூ ஜோனில் உள்ளவர்களின் நடவடிக்கைகளுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இது வழக்கமாக இருந்துவரும் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறானது!)



4 சி.இ.ஓ.வின் ரோலை முற்றிலு மாக மாற்றியமைப்பது. அதாவது, எல்லாவற்றுக்கும் பதிலளிப்பதற்குப் பதிலாக கேள்வி கேட்க வேண்டும். தான் ஒருவர்தான் மாற்றத்திற்கான சூத்ரதாரி என்கிற நினைப்பை சி.இ.ஓ. மறக்க வேண்டும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வேல்யூ ஜோனிற்கு அருகில் உள்ள அடுத்த தலைமுறையைத் தயார்படுத்த வேண்டும்.



மேற்கூறிய நான்கு நிலைகளையும் திறம்பட செயல்முறைப்படுத்தியதன் விளைவு:



2005லிருந்து 2009 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஹெச்.சி.எல்.டி.க்கு கிடைக்கப் பெற்ற 70 சதவிகித 'டீல்'களை இந்திய ஐ.டி. துறையில் ஜாம்பவான்களாகத் திகழும் நான்கு பெரிய குழுமங்களுடன் போட்டியிட்டு வென்றது.



நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஐந்து மடங்காகப் பெருகியது.



வேலையை விட்டுச் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதமாகக் குறைந்தது.



'ஊழியர்கள் திருப்திகரமாக இருக்கிறார்களா?' என்று கண்டறிய தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட 70 சதவிகிதம் அதிகரித்திருந்தது.



புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும்கூட வெற்றிகரமான ஒரு நிறுவனத்தை உருவாக்கி நடத்திச் செல்ல விரும்புகிறவர்களுக்கு இது ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

hi

Author: Nagaraji.B /

hjhjh

விவேகானந்தரின் விவேக மொழிகள்

Author: Nagaraji.B /


விவேகானந்தரின் விவேக மொழிகள்
  • மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.
  •  மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை லட்சியங்களாகும்.
  • யார் ஒருவர் எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
  • துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல் வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிகிறது.
  • ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.
  • அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே அந்த வழி.
  • எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.
  • மூளை - தசைகள் - நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
  • நாம் நினைக்கும் எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.
  • ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.
  • எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் போக்குவதற்கான பேராற்றல்! உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக நம்புங்கள்.
  • மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.
  • பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.
  • துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.
  • கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.

முட்டாள் என்பது நல்ல பெயரா?

Author: Nagaraji.B /

புகழ்பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களில் ஒருவன் பெயர் "முட்டாள்". அதனால் அவனை மற்ற மாணவர்கள் "முட்டாளே இங்கே வா! முட்டாளே இதைச் செய்!" என்று கேலி செய்தனர்.

தன் பெயரே தன்னைக் கேலிக்கு உள்ளாக்குகிறதே" என்று வருந்தினான்.

ஆசிரியரை வணங்கிய அவன், "ஐயா, எனக்கு ஒரு நல்ல பெயராக நீங்கள் வைக்க வேண்டும். எல்லோரும் மதிக்கும் பெயராக அது இருக்க வேண்டும்." என்று வேண்டினான்.

"நீ இங்கிருந்து புறப்பட்டு பல ஊர்களுக்கும் சென்று வா. எந்தப் பெயர் உனக்குப் பிடிக்கிறது என்று தேர்ந்தெடுத்து வந்து சொல். அந்தப் பெயரையே உனக்கு வைத்து விடுகிறேன்" என்றார் அவர்.

அங்கிருந்து புறப்பட்ட அவனும் ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தான்.

வழியில் சிலர் சுடுகாட்டிற்குப் பிணம் ஒன்றைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். இறந்தவனைப் பற்றி விசாரித்தான் முட்டாள். இறந்தவன் பெயர் தேவன் என்று தெரிந்து கொண்டான்.

"தேவன் எப்படிச் சாவான்?"என்று கேட்டான் அவன்.

"தேவன் என்ற பெயருடையவனும் இறந்து விட்டான். சாவு என்ற பெயருடையவனும் இறந்து விட்டான். பெயரில் என்ன உள்ளது? ஒருவனை அடையாளம் காட்டுவதுதான் பெயர். இது தெரியாமல் என்னிடம் கேள்வி கேட்கிறாயே, நீ என்ன முட்டாளா?" என்று எரிச்சலுடன் பதில் சொன்னான் ஒருவன்.

இன்னொரு ஊரை அடைந்தான் அவன். ஒரு வீட்டின் முன் நின்று,"அம்மா, தாகமாக உள்ளது குடிக்கத் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்டான்.

"தண்ணீரெல்லாம் தர முடியாது... இங்கிருந்து போ..." என்று விரட்டினாள் அந்த வீட்டிலிருந்தவள்.

அவளைப் பற்றி விசாரித்தான். அவள் பெயர் காவேரி என்று தெரிந்து கொண்டான்.

அங்கிருந்து சென்ற அவன் நான்கு சாலை சந்திப்பை அடைந்தான். எதிரி வந்த ஒருவரிடம்,"அய்யா, பக்கத்திலிருக்கும் நகரத்திற்கு எப்படி செல்வது/" என்று விசாரித்தான்.

அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்றார்.

உங்கள் பெயர் என்ன? என்றான்

அவர் "வழிகாட்டி" என்றார்.

இன்னொரு இடத்தில் ஒரு பெண்ணை அவள் தாய் அடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.

"ஏனம்மா அந்தச் சிறுமியை அடிக்கிறீர்கள்?'

"வேலைக்குச் சென்ற அவள் வேலை எதுவும் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி உள்ளாள். இன்று சாப்பாட்டிற்கு என்ன செய்வோம்? அதனால்தான் அடிக்கிறேன்."என்றாள் அவள்.

"உங்களின் மகளின் பெயர் என்ன" என்று கேட்டான்.

"திருமகள்" என்றாள் அவள்.

ஊர் திரும்பிய அவன் தன் ஆசிரியரை வணங்கினான்.

"என்ன பெயரித் தேர்ந்தெடுத்திருக்கிறாய்?" என்று கேட்டார் ஆசிரியர்.

"தேவன் என்ற பெயருடையவனால் சாவிலிருந்து தப்பிக்க முடியவில்லை. தாகத்திற்கு தண்னீர் தர மறுப்பவளின் பெயர் காவேரி. வழிகாட்ட முடியாதவனின் பெயர் வழிகாட்டி. வறுமையில் வாடுபவளின் பெயர் திருமகள். பெயர் ஒருவரை அடையாளம் காட்டும் குறியீடுதான். மற்ற பெயர்களுக்கு முட்டாள் என்கிற என்னுடைய பெயரே நன்றாக இருக்கிறது" என்றான் அவன்.

எல்லோருக்கும் பெயருக்கு ஏற்றபடியா செயல்பாடுகள் இருக்கிறது?

அகம், புறம், அந்தப்புரம்

Author: Nagaraji.B /

இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.
மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம்.

ஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

முகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்

Author: Nagaraji.B /

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
சிறுகதை தொகுப்பு
நவீன தமிழ் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாக தனிமையும்
துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காண முடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகு புனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ் புனைவியலை உருவாக்கு கின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.

பால்ய நதி

Author: Nagaraji.B /

பால்ய நதி
சிறுகதை தொகுப்பு
கதைகளிடமிருந்து தெரிந்து கொள்ள எவ்வளவோயிருக்கின்றது. பின்னிரவு நேரத்தின் நட்சத்திரங்களைப் போல எங்கோவொரு ஆழத்திலிருந்து கதைகள் மின்னிக்கொண்டிருக்கின்றன. இக்கதைகள் பெரிதும் நிலக்காட்சிகளின் மீது உருவாகியவை வெறுங்கையை மூடினாலும் திறந்தாலும் உள்ளே எதுவும் அற்று இருப்பது ஆச்சரியமில்லையா எனக்கொள்ளும் மன நிலையே இக்கதைகளை எழுதச் செய்திருக்கிறது.

வெயிலைக் கொண்டுவாருங்கள்

Author: Nagaraji.B /

வெயிலைக் கொண்டுவாருங்கள்
சிறுகதை தொகுப்பு
பாதரசத்தைப் போல எவர் கையிலும் வசப் படாமலும் சதா அழகு காட்டி உருண்டோடியபடியுமாய் இருக்கிறது கதை என்னும் அபூர்வ திரவம். அன்றாடப் பிரச்சினைகளே கதை என்னும் காலனியக் காமாலை எங்கும் நிரம்பி வழியும் சூழலில் கதை என்பது ஒர் அறிதல் முறையெனக் கொள்ளவும பின் நவீனப் புனைவியலுக்கான கதை மொழியை உருவாக்கவும் முனையும் இக்கதைகளை அதி கதைகள் என அழைக்கலாம். புலன் சார் புனைக் கதைகளாய் இருக்கும் இந்த Modern fables தமிழில் புதிய கதையாடலை உருவாக்க முனைகின்றன.

அத்தனைக்கும் ஆசைப்படு

Author: Nagaraji.B /

உங்களில் ஒரு நிச்சயமான ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்களா? வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் ரசித்து வாழ விருப்பமா? எல்லாப் பொழுதையும் இனமையாக ஆனந்தமாக அனுபவிக்க வழி தேடுகின்றவரா? கடவுள் பற்றிய பழமையான எண்ணஞ்களிலிருந்து வெளிப்பட்டு என்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க புதிய நோக்கில் சிந்தனையில் காண விருப்பமா? சுருங்கக்கூறின் வாழ்க்கையின் அத்துணை பரிமாணங்களையும் ஆனந்தமாக வாழ்ந்திட வழிகாட்டுகிறது சத்குரு ஜக்கிவாசுதேவின் "அத்தனைக்கும் ஆசைப்படு" . ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளியிடப்பட்டு தற்போது தனிப்புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது சுயவளர்ச்சி தொடர்பாக ஏராளமான புத்தகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இன்னும் சொல்லப்போனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இதன் விற்பனை தற்போது அதிகம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. காரணம் மனிதன் தற்போது தன்னை ஊக்குவிக்கும் உற்சாக மருந்தாக, வாழ்க்கைப்பற்றிய உண்மைத் திறவுகோலாக, வழிகாட்டுதலாக, வளர்ச்சிப் பாதையில் தன்னை முடுக்கும் உந்துசக்தியாக இம்மாதிரியான புத்தகங்களை கருதி ஏற்றுக்கொண்டிருப்பது தான்.

இத்தகைய புத்தகங்கள் பல வெளிவந்து கொண்டிருந்தாலும் அவையாவும் பிறர் கூறியவற்றை திருப்பிக்கூறும் எதிரொலியாகத்தான் இருக்கின்றன. மாற்று சிந்தனை,
புதியநோக்கு என்பதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க செயற்கையாகத்தனமான புத்தகங்கள் தான் அதிகம் காணப்படுகின்றன.

"அத்தனைக்கும் ஆசைப்படு" மேற்கூறியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வாழ்க்கையை முழுமையாக ரசிக்கக் கற்றுத்தருவது.

துன்பத்திற்க்குக் காரணம் ஆசையா?
மகிழ்ச்சி என்பது என்ன?
பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி?
வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கையை நம் விருப்பப்படி அமைத்துக்
கொள்வது எப்படி?
மனப்பூர்வமாக செயாலாற்றுவது எப்படி?
வாஸ்து, ஜாதகம் இவையெல்லாம் உண்மையா?
கடவுள் என்பவர் யார்? அவர் எத்தகையவர்?

இப்படி ஏராளாமான விஷயங்களை ந்மக்கு தெளிவுபடுத்துவதோடு நம்மில் ஒரு நிச்சயமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் சந்திக்கவும், சிந்திக்கவும் செய்கிறது. "எதையும் ரசித்து ஈடுபாட்டுடனும், மனப்பூர்வமாகவும் செயலாற்றுவதினால் வெற்றி நிச்ச்யம் நம் வசமாகும்" என்னும் இப்புத்தகத்தை அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது நிச்சயம் படித்திட வேண்டும்.


உடல் நலம்பெற உணவு முறை வைத்தியம்!

Author: Nagaraji.B /

ஒவ்வொரு காய்கறியிலும்,பழங்களிலும், தானியங்களிலும் உள்ள சத்துக்கள் யாவை, அதன் பயன் என்ன என்பதை விரிவாக கூறியுள்ளார் நூலாசிரியர். முதியோருக்கு உதவும் உணவு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நோய்க்கும் என்ன உணவு கொடுப்பது என்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

60 அமெரிக்க நாட்கள்

Author: Nagaraji.B /

பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.

சுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் நூல் இது.

அமெரிக்கா போகணுமா?

Author: Nagaraji.B /

கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.60

அ அம்மா, ஆ ஆடு, இ இலை என்று அரிசுவடி கற்றுத்தருவது போல, பாஸ்போர்ட், விசாவில்
தொடங்கி, விமானத்துக்கு டிக்கெட் வாங்குவது, மூட்டை முடிச்சுகள் கட்டுவது, அமெரிக்காவில் வீடு தேடுவது, கார் வாங்குவது, இந்தியாவுக்குப் பணம் அனுப்புவது என்று அமெரிக்க வாழ்க்கையின் சகல
தேவைகளுக்கும் உற்ற உறுதுணைவனாக இந்தப் புத்தகம் இருக்கிறது.

யுவான் சுவாங் இந்தியப் பயணம்: முதல் தொகுதி

Author: Nagaraji.B /

புதுமைப்பித்தன் பதிப்பகம், 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை83. (பக்கம்: 256).


புனிதப் பயணியருள் பவுத்த சமயத்தின்பால் தீராத பற்றுக் கொண்ட கன்பூசியசை சிந்தனை மரபு வழித் தோன்றலான யுவான் சுவாங்கின் இந்தியப் பயணக் குறிப்புகள், பேரார்வத்தைத் தூண்டக்கடியவை. யுவான்சுவாங் 16 ஆண்டு காலம் பயணம் செய்து தாம் நேரில் கண்டவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் அக்கால சீனப் பேரரசர் தான் வேண்டு
கோளுக்கேற்ப சீன மொழியில் எழுதினார். இப்பயண நூலை தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இரண்டையும் உள்ளடக்கமாகப் பெற்ற நூல் தமிழிலும் வர வேண்டும் என்று எழுந்த பேரவாவின் துவக்கமாக ஒரு பகுதியை முதல் தொகுதியாக நமது கைகளில் தவழ விட்டுள்ளனர் புதுமைப்பித்தன் பதிப்
பகத்தினர். இது இந்தியாவைப் பற்றிய யுவான்சுவாங் கருத்துக்களை அறிய உதவும்.

சென்னையிலிருந்து உலகை நோக்கி...

Author: Nagaraji.B /

நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவதுடன், பயிற்சியால் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்ற ஆணித்தரமான கருத்தைக் கொண்டிருப்பவர் ஆசிரியர். கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் எழுதிய விஷயங்கள் இதில் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவிற்கு மன்மோகன் தலைமையிலான அரசு ஒரு புதிய தோற்றத்தை தந்திருக்கிறது என்பது உட்பட பல தகவல்கள் கொண்ட நூல்.


பதிப்பகம், 3/2, சுவாதிராம் டவர்ஸ், 3<, துர்கா பாய் தேஷ்முக் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028. (பக்கம் 220)

Pages