nov7
The Four Conversations
Author: Nagaraji.B /எனர்ஜி பஸ்
Author: Nagaraji.B /
|
The Elephant And The Twig-ஜெஃப் தாம்ஸன்
Author: Nagaraji.B /
உங்கள் வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பெரிய யானை வளர்க்கிறீர்கள். அந்த யானையைக் கட்டிப்போடுவதற்கு எதைப் பயன்படுத்துவீர்கள்?
தோல் பட்டை? தாம்புக் கயிறு? இரும்புச் சங்கிலி?... இவை எதுவும் தேவையில்லை,யானையை ஒரு சின்னக் குச்சியில் கட்டிப் போட்டுவைத்தாலே போதும்.
இது என்ன கூத்து? அத்தனை பெரிய மிருகத்தைக் கட்டிப் போடுவதற்குத் தக்கனூண்டு குச்சியா?யானை நினைத்தால் அரை நொடியில் அறுத்துக்கொண்டு ஓடிவிடுமே.
உண்மைதான். ஆனால், அந்த யானை ‘நினைக்க’ வேண்டுமே, அதான் மேட்டர்!
சின்ன வயதில்,அந்த யானைக்குட்டியை ஒரு கனமான இரும்புச் சங்கிலியில் பிணைத்து நன்றாகக் கட்டிப்போட்டிருப்பார்கள். யானைக்குட்டி அதிலிருந்து விடுபடுவதற்கு எவ்வளவோ போராடிப் பார்க்கும். இழுக்கும், தள்ளும், முட்டும், மோதும், ஒரு பலனும் இருக்காது.
இப்படிக் கொஞ்ச நாள் போராடித் தோற்கிற யானைக்குட்டி, ஒருகட்டத்தில் தன்னால் இந்தப் பிணைப்பிலிருந்து விடுபடமுடியாது என்று முடிவு செய்துவிடுகிறது. விடுதலைக்கு முயற்சி செய்வதையே நிறுத்திவிடுகிறது.
இப்போது அந்த யானை பல நூறு கிலோ எடை கொண்ட பிரமாண்ட மலைபோல நிற்கிறது. ஆனால், இப்போதும் நம்முடைய யானை தப்பி ஓட முயற்சி செய்வதே இல்லை.தன்னைக் கட்டிப் போட்டிருப்பது ஒரு சாதாரணக் குச்சிதான்,லேசாக இழுத்தாலே அது விடுபட்டுவிடும் என்பதுகூட அந்த யானைக்குப் புரிவதில்லை.
நம்மில் பலரும் இந்த யானையைப் போல்தான்.நமது திறமைகள் என்னென்ன,நம்மால் எதையெல்லாம் சாதிக்கமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளாமல், அதிசாதாரணமான மனத்தடைகளுக்கெல்லாம் பயந்து ஒதுங்கி நிற்கிறோம்.அவற்றை உடைத்துக்கொண்டு வெளியே வரத் தயங்குகிறோம்.
இந்த யானைக்கதையை மையமாக வைத்து ‘The Elephant And The Twig’
என்ற பிரமாதமான பாஸிட்டிவ் சிந்தனைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜெஃப் தாம்ஸன்.
ஜெஃப் தாம்ஸனைப் பொறுத்தவரை, நாம் ஒவ் வொருவரும் யானை பலம் கொண்டவர்கள். நம்மைச் சில சின்னக் குச்சிகள் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றன. அவற்றை முறித்து எறிந்துவிட்டு வெளியேறும் போதுதான் நமது முழு பலமும் முழுத் திறமையும் உலகிற்குத் தெரிகிறது. அதிவேக முன்னேற்றம் சாத்தியப்படுகிறது.
இதற்காக, ஜெஃப் தாம்ஸன் 14 முக்கியமான விதிமுறைகளைச் சொல்லித்தருகிறார். அவை இங்கே சுருக்கமாக:
1 எதையும் அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப்போடாதீர்கள். செயல்படுவதற்குப் பொருத்தமான நேரம், இதோ, இந்த விநாடிதான்!
2 நம்முடைய உலகத்தில் நாம்தான் கடவுள். அந்த சக்தியை உணர்ந்து, பொறுப்போடு முடிவெடுங்கள்.
3 நாம் நம்மை என்னவாகக் கற்பனை செய்துகொள்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். நீங்கள் என்ன நினைக்கப் போகிறீர்கள்?
4 உங்களுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்கான பயணத்திற்கு எரிபொருள் தேவை.அந்த ‘எனர்ஜி’யை எங்கிருந்து, எப்படிப் பெற்றுக்கொள்வது என்று யோசியுங்கள்.
5 வாழ்க்கை நெடுகிலும் நாம் பல முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும். அதை வேறு யாரும் செய்யமாட்டார்கள்.நமக்காக முடிவெடுக்கும் அதிகாரம் நம்மிடம் மட்டுமே உள்ளது.
6 சுறுசுறுப்போடு தொடர்ந்து செயல்படுவதற்கு ஏற்ற மனநிலை அவசியம். உற்சாகமான மனத்தை முதலில் வளர்த்துக் கொள்ளுங்கள்
7 உங்களுக்கென்று சில இலக்குகளைக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நோக்கிப் பயணம் புறப்படுங்கள்.உங்கள் செயல்வேகம் ஜிவ்வென்று எகிறும்
8 இலக்கை அடையும்வரை விடுவதில்லை என்கிற பிடிவாதம் வேண்டும். நடுவில் வேறு எந்த இலக்கையும் பார்த்து மயங்குவதில்லை என்கிற மன உறுதியும் வேண்டும்
9 உங்களுடைய நேரத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அடிக்கடி கவனியுங்கள்.அநாவசியமான நேரக்கொல்லிகளை விரட்டியடியுங்கள்
10 நதியைப்போல் ஓடிக்கொண்டிருக்க, நம் திறமைகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு வளர்த்துக் கொள்ளவேண்டும்.
11 தேவைதான் நம்முடைய வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. உங்களுடைய தேவைகளை, எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொண்டு தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்
12 நேர்மை முக்கியம். இலக்கை அடையக் குறுக்குவழிகளைப் பின்பற்றாதீர்கள்
13 நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். அவற்றைப்போலச் சிறந்த ஆசிரியர்கள் எங்கும் கிடையாது
14 அடுத்தவர் உங்கள்மீது குறை சொன்னால் கோபப்படாதீர்கள். தவறு செய்யாத மனிதர் யார்? அவர்கள் சுட்டிக்காட்டுவதில் உண்மை இருந்தால் அதை மதித்து நம்மைத் திருத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அது நம் வளர்ச்சியைத் தடுக்காது, வேகப்படுத்தும்!.
புத்தக விமர்சனம் -Maruti's story
Author: Nagaraji.B /புத்தக விமர்சனம் |
இந்தப் புத்தகத்தின் மூலம் நூலாசிரியர்கள் மாருதியின் 27 ஆண்டு சரித்திரத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நாளன்றுக்கு 100 கார்கள் (ஆண்டுக்கு சுமாராக 36,500 கார்கள்) மட்டுமே உற்பத்தித்திறன் கொண்டிருந்த மாருதி, இப்போது ஆண்டுக்கு 10 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறன் பெற்றிருக்கிறது. அரசு நிறுவனமாக ஆரம்பித்த 'மாருதி உத்யோக்' இன்று 'மாருதி சுஸ¨கி'யாக மாறி, தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நிரூபித்திருக்கிறது. என்னதான் அரசு நிறுவனமாக இருந்தாலும், அனுமதிகள் என்பது பறித்த பழமாக தானாக வந்து விடவில்லை. இதன் சேர்மன்களும், மேலாண்மை இயக்குநர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைத் திறம்பட முடிக்க நிறையவே கஷ்டப் பட்டதை புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள் ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். சுஸ¨கி நிறுவனத்தின் பிரசிடென்ட்டாக இருந்த ஓசாமு சுஸ¨கி மாருதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப் பிலிருந்தவர்களிடம் வைத்திருந்த நம்பிக்கை பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் கார் புக் செய்தவர்களுக்கு எப்படி அது டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா? ஹரியானாவின் குர்கானில் உள்ள மாருதி தொழிற் சாலையிலிருந்து மாருதி டீலர் எங்கிருக்கிறாரோ, அதுவரை கார் ஓட்டிச் செல்லப்பட்டது. இதனால் கார் புக் செய்தவர் களுக்கு இன்றைக்கு ஷோ ரூமிலிருந்து கிடைப்பது போல புத்தம் புதிய கார் அன்று கிடைக்கவில்லை. காரணம், அன்றைக்கு கார்களை கொண்டு செல்லும் அளவிற்கு ரயில் பெட்டியோ, டிரெய்லரோ இல்லை. இந்த நேரத்தில், அமெரிக்காவில் வேலை பார்த்துவந்த கே.ரங்கசாமி என்கிற ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயர் இந்தியா திரும்ப தீர்மானித்தார். இந்தியாவுக்கு ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாருதி காரைக் கொண்டு செல்லத் தேவையான டிரெய்லரை வடிவமைத்துக் கொடுக்க மாருதியுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் வடிவமைத்த டிரெய்லரில்தான் 1984 முதல் மாருதி கார்கள் கொண்டு செல்லப்பட்டன. அதன்பிறகு ரயில்வே வேகன்களில் கார்களைக் கொண்டு செல்லும் படி மாற்றி அமைக்கப்பட்டது. இப்படி பல சுவையான விஷயங்கள் இப்புத்தகத்தில் பொதிந்து இருக்கின்றன. | |
|
புத்தக விமர்சனம்
Author: Nagaraji.B /புத்தக விமர்சனம் |
புதுமைக்கும், புரட்சிகரமான யோசனைகளுக்கும் உலகளவில் பெயர் பெற்றது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிதாமகனான ஸ்டீவ் ஜாப்ஸ், 1976-ல் அந்த நிறுவனத்தை தனது பெற்றோர்களின் கார் ஷெட்டில்தான் ஆரம்பித்தார். நன்றாக நடந்துவந்த நிறுவனம் 1980-களில் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தது. நிறுவனத்தின் உட்பூசலால் அதைத் தொடங்கிய ஸ்டீவையே தூக்கி யெறிந்தனர் உடனிருந்தவர்கள். அதற்குப் பிறகு ஸ்டீவ் தனியாக 'நெக்ஸ்ட்' (NeXT) என்கிற நிறுவனத்தையும் அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிக்கும் 'பிக்ஸர்' (Pixar) என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்து, மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார். 1997-ல் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை அதலபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் ஸ்டீவ்வின் 'நெக்ஸ்ட்' நிறுவனத்தின் திறமை கண்டு அதற்கு விலை குறிக்கப்பட்டது. அதன்படி, கிட்டத்தட்ட 450 மில்லியன் டாலர்களுக்கு அது ஆப்பிளால் வாங்கப்பட்டது. ஸ்டீவ் மீண்டும் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனால் மூடப்படவிருந்த ஆப்பிள் நிறுவனம் காப்பாற்றப்பட்டது. இந்தப் புத்தகத்தில் ஆப்பிள் நிறுவனம் பற்றியும் அந்நிறு வனத்தின் கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் இருக்கும் செயல்திறன் பற்றியும் விலாவாரியாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் லியாண்டர். ஸ்டீவ்வின் குணாதிசயங்களான முழுமைத்துவம், சிறுசிறு விஷயங் களிலும் கவனம் செலுத்தும் தன்மை, பொருளின் வடிவமைப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் போன்ற பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்திருக்கிறார். இவருக்கும் மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ¨க்கும் இடையிலான விவாதங்களும் தீர்வுகளும் ஆங்காங்கே தலைகாட்டியிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் லியாண்டர் அமெரிக்காவின் பிரபலமான 'வயர்ட்.காம்' (Wired.com) என்கிற நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் என்பதால் ஸ்டீவ் பற்றிய அனைத்து அம்சங்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார். | |
|
புத்தக விமர்சனம் -The India Way..
Author: Nagaraji.B /புத்தக விமர்சனம் |
ஒரு காலத்தில் எதற்கெடுத்தாலும் மேலை நாட்டை மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று அவர்கள் நம்மை அனைத்துத் துறைகளிலும் பின்பற்றும் நிலைக்கு வளர்ந்திருக்கிறோம், வளர்ந்து கொண்டிருக்கிறோம்... இதன் பின்னணியில் அமெரிக்காவின் வார்ட்டன் ஸ்கூலைச் சேர்ந்த நூலாசிரியர்கள் இந்தியாவில் உள்ள 100 பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.-க்களிடம் பேட்டிக் கண்டு, அவர்களின் நிறுவனங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் முடிவுகளை புத்தக வடிவில் தந்திருக்கிறார்கள். இந்தியாவில் 3,000 டாலருக்கு காரும், 300 டாலருக்கு கம்ப்யூட்டரும், 30 டாலருக்கு மொபைல் போனும் கிடைப்பது சாத்தியமாகியிருக்கிறது. இதற்குக் காரணம் புதுமைகளைக் கண்டறியும் ஆராய்ச்சிக் கூடமாக இந்தியா மாறிவருவதுதான். இந்தியாவின் மென்பொருள் தொழில் வளர்ச்சி பற்றி நூலாசிரியர்கள் குறிப்பிடும் போது, ''ஆரம்பத்தில் விலை மலிவு என்பதால் வாடிக்கையாளர்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கிறார்கள். அதற்குப்பிறகு அத்தொழிலில் இருக்கும் தகுதி, திறமை கருதி அப்படியே இங்கேயே நிலைத்து விடுகிறார்கள்'' என்கிறார்கள். இதனால்தானோ என்னவோ, நமது மென்பொருள் மற்றும் பி.பீ.ஓ. நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 'இந்தியாவுக்கு வேலைகளை அனுப்பும் நிறுவனங்களுக்கு அதிகமாக வரி விதிக்கப்படும்' என்கிற அறிவிப்பை கேட்டும் அதிகமாக சலித்துக் கொள்ள வில்லை! 1991-க்கு முன்னும், பின்னும் அரசு அதிகாரிகளின் செயல்பாடு குறித்து புராக்டர் அண்ட் கேம்பிளின் தலைமைப் பொறுப்பிலிருந்த குருசரண்தாஸ் குறிப்பிடும் போது, ''எனது முப்பது ஆண்டுகால பிஸினஸ் வாழ்க்கையில் நான் சம்பந்தப்பட்டத் தொழிலை அறிந்து கொண்ட ஒரு அதிகாரியைக் கூட நான் சந்தித்ததில்லை. இருப்பினும் எனது தொழிலை நசுக்கும் சக்தி அவர்களிடம் இருந்தது'' என்கிறார். எவ்வளவு அப்பட்டமான உண்மை. ஆனால் இன்று நிலைமை மாறிவருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய தொழில் குழுமங்களான டாடாவும், பிர்லாவும் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியுடன், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டன. 1898-ம் ஆண்டில், நாட்டு நலனில் அக்கறை கொண்ட டாடா குழுமத்தின் அப்போதைய தலைவ ரான ஜாம்ஷெட்ஜி டாடா தனது சொத்தில் பாதியை கிட்டத்தட்ட 2 லட்சம் பவுண்ட்டை பெங்களூரில் 'இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்' ஆரம்பிக்கக் கொடுத்தார். இது அமெரிக்காவில் 'கார்னிஜ் மெலன் பல்கலைக்கழகம்' ஆரம்பிக்க ஆண்ட்ரூ கார்னிஜ் கொடுத்த 1 மில்லியன் டாலரை விட அதிகமானதாகும் (அந்த காலகட்ட மதிப்பீட்டின்படி)!. ஆக, இந்திய நிறுவனங்களிடம் தனிநலனிலும் பொதுநலம் மிகுந்திருக்கிறது. தவிர, 'ஜுகாத்' என சொல்லப்படுகிற இருக்கிற வசதி வாய்ப்புகளை மிகவும் திறமையாகப் பயன்படுத்தும் தன்மையும் இந்தியர்களாகிய நமக்குக் கை வந்த கலை. | |
|
Tipping Point...
Author: Nagaraji.B /
|
புத்தக விமர்சனம் -Alexander the Great's Art of Starategy
Author: Nagaraji.B /மாவீரன் அலெக்ஸாண்டர் பற்றி அறியாதவர்கள் அபூர்வம். 33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் உலகையே தன் காலடியில் கிடத்தியவன். எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அலெக்ஸாண்டரின் வீரத்திலும் விவேகத்திலும் கட்டுண்டவர்களாகதான் இருப்பார்கள். குறிப்பாக ராணுவம், அரசியல் மற்றும் தொழிற்துறைகளில் இருப்பவர்களுக்கு அந்த மாவீரன் ஒரு முக்கியமான ரோல் மாடல். அவன் இறந்து (கி.மு. 323) கிட்டத்தட்ட 2400 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் உலகம் அவன் புகழ் பாடக் காரணம் அவனுடைய செயல்திறன்தான். கி.மு. 356-ல் கிரேக்க நாட்டில் பிறந்த அலெக்ஸாண்டருக்கு மெசடோனியாவின் அரசனாக முடிசூட்டப்பட்ட போது 20 வயதே! அடுத்த 13 ஆண்டுகளில் உலகின் பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம். இந்நூலாசிரியரான பார்த்தா போஸிற்கு அலெக்ஸாண்டர் பற்றிய அறிமுகம், குவைத்திற்கு அருகிலிருக்கும் ஃபெயில்கா தீவிலுள்ள சிதிலமடைந்த துறைமுக நகரத்தை பெற்றோர்களுடன் தனது ஏழாவது வயதில் பார்வையிடச் சென்றபோது ஏற்பட்டதாகக் கூறுகிறார். அந்த ஈடுபாடும், தாக்கமும்தான் அலெக்ஸாண்டர் பற்றிய தேடலுக்கு வித்திட்டது என்றும் அதன் விளைவுதான் இந்தப் புத்தகம் என்றும் கூறும் இவர் 'டெல்லி மேனேஜ்மென்ட் அசோஸியேஷன்' விருது பெற்றவர். 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிளேட்டோ அகாதமியில் அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்றவர் அலெக்ஸாண்டர். அன்றைக்கு அவர் கண்டுபிடித்த, பயன்படுத்திய ராணுவ யுக்திகள் இன்றும் பலரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அலெக்ஸாண்டரின் தலைமைப் பண்பு மற்றும் ராணுவ செயல்திறனால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர். அவர்களில் சிலர் வின்ஸ்டன் சர்ச்சில், ஆப்ரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, பிராங்ளின் ரூஸ்வெல்ட், ஜாக் வெல்ஸ் (ஜீ.இ. நிறுவனத்தின் முன்னாள் அதிபர்). அது போல அவனது யுக்திகளில் சிலவற்றை தங்களது தொழில் மேம்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வெற்றி பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் கிழக்கிந்திய கம்பெனி, டெல், ஜீ.இ, ஹோண்டா, வால்மார்ட் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்நூலின் சிறப்பு என்னவென்றால் அன்றைக்கு அலெக்ஸாண்டரினால் கடைப்பிடிக்கப்பட்ட, அறிமுகப்படுத்தப்பட்ட பல செயல்திறன்கள் எப்படி அவனுக்குப் பிறகு இன்றைக்கு வரைக்கும் தொழில், ராணுவ மற்றும் அரசியல் வெற்றிகளுக்கு உதவியாக இருந்து வருகிறது என்பதைப் பல ஆதாரங்களுடன் தந்திருப்பதுதான். அலெக்ஸாண்டர் அப்படி என்னதான் செய்துவிட்டார்? என்று கேட்கிறவர்களுக்கு இதோ அவருடைய சில செயல்முறைகளும் யுக்திகளும்:
|
The Science of selling
Author: Nagaraji.B /வாய்ஜாலம் மட்டும் போதாது! ''உங்க பையன் டிகிரி முடிச்சிட்டானே? அடுத்து என்ன பண்ணப் போறான்?'' ''குறைவான மார்க்தான் வாங்கிருக்கான்; எம்.ஏ. சேர முயற்சி பண்றான். அதுக்கு இடம் கிடைக்காட்டி இன்னொரு திட்டம் வெச்சிருக்கேன்.'' ''என்னது அது?'' ''பய நல்லாப் பேசுவான், எல்லோர்கிட்டேயும் நல்லாப் பழகுவான். அதனால் அவனை சேல்ஸ் லைனில் விட்டுடலாம்ன்னு நினைக்கிறேன்.'' ''நல்ல ஐடியா சார். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். அதுவும் விற்பனைத் துறையில் ஜெயிக்க நல்லாப் பேசத் தெரிஞ்சாப் போதும். வேறே ஒண்ணுமே வேண்டாம்.'' விற்பனையிலும் போட்டிகள். அதுவும், பொருளாதாரத் தாராளமாக்குதலுக்குப் பிறகு போட்டிகள் உலக மயமாகிவிட்டன. உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் விற்பனையாகும் பொருட்களைப் பாருங்கள். பள்ளிக்கூடக் குழந்தைகள் வாங்கும் பேனா, பென்சில், ரப்பர், பொம்மைகள் என அவர்களுடைய பல தேவைகளைத் தீர்த்து வைப்பது தமிழ்நாட்டு, தென்னிந்திய, வட இந்தியப் பொருட்கள் அல்ல; சீனாவின் தயாரிப்புகள்தான் எல்லாம்! எங்கிருந்து போட்டி வரும் என்றே தெரியாத சூழ்நிலை. நிறுவனம் தன் அதிக வியாபாரத்துக்கு, லாபத்துக்கு நம்பியிருப்பது விற்பனையாளர்களைத்தான். அந்த விற்பனையாளர்கள் அந்தக் காலத்தைப் போல வாய் ஜாலத்தை மட்டுமே நம்பிப் பிழைக்க முடியாது. பழகும் சாமர்த்தியம், பேச்சுத் திறமை ஆகியவற்றைத் தாண்டி, ஏராளமான திறமைகள், குணநலன்கள் விற்பனையாளர்களுக்குத் தேவைப்படுகின்றன. அவை என்னென்ன என்று சொல்வதுதான் இந்தப் புத்தகம். தற்போதைய காலகட்டத்தில் விற்பனை என்பது வெறும் கலை மட்டும் அல்ல, அது அறிவியல் துறையை அடித்தளமாகக் கொண்டதும் ஆகும். அதனால்தான் 'தி சயின்ஸ் ஆஃப் செல்லிங்' என்கிற தலைப்பை இந்தப் புத்தகத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள். விற்பனை என்பது கம்பெனிகளுக்கு எவ்வளவு முக்கியம் என்கிற பாலபாடத்தில் இருந்து முதல் அத்தியாயம் தொடங்குகிறது. அடுத்து வரும் பகுதிகளில்... விற்பனையாளரின் பணிகள். விற்பனைத் திறமைகள். இலக்கில் குறி வைத்தல். வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்து கொள்ளுதல். வாடிக்கையாளர்களிடம் என்ன கேள்விகள், எப்படிக் கேட்பது? வாடிக்கையாளர் எதிர்ப்புகளை வெற்றிகரமாகச் சந்தித்தல். விற்பனையைப் பெருக்கும் வழிகள். என விற்பனையின் எல்லா அம்சங்களையும் ஆசிரியர் முழுமையாக விளக்குகிறார். புத்தக ஆசிரியர் ஆலப்பாட், ஜாம்ஷெட்பூர் நகரில் இருக்கும் இந்தியாவின் முன்னணி நிர்வாகவியல் கல்லூரியான 'சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட்டில்' எம்.பி.ஏ. படித்தவர். பல ஆண்டுகள் சென்னை கோத்தாரி நிறுவனத்தில் பணியாற்றியவர். கடந்த முப்பது ஆண்டுகளாக சொந்த விற்பனை நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருவதோடு, விற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறார். இதனால், ஆலப்பாட் சொல்லும் கருத்துக்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் நடைமுறையில் கடைப்பிடிக்கக் கூடியவையாக இருக்கின்றன. புத்தகத்தின் அமைப்பிலும் எழுத்திலும் ஆசிரியரின் திறமை பளிச்சிடுகிறது. விற்பனைத் துறை என்பது ஒரு மாபெரும் கடல். அதில் எந்த ஒரு முக்கிய அம்சத்தையும் விடாமல், அத்தனை விஷயங்களையும் 200 பக்கங்களில் சொல்லியிருப்பதை ஒரு சாதனை என்றே சொல்லலாம்! சொல்லிய விதத்திலும் அபார நேர்த்தி, ஒழுங்கு இருக்கிறது. பொதுவாக 200 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தில் 15, 20 அத்தியாயங்கள் இருக்கும். ஆனால், ஆலப்பாட் தன் புத்தகத்தை 37 சின்னச் சின்ன அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மையக் கருத்தைச் சொல்கிறது. அத்தியாய முடிவில் கருத்துச் சுருக்கத்தோடு முக்கியச் சொற்களுக்கான பொருளும் தந்துள்ளார். இரண்டாம் அத்தியாயம், முதல் அத்தியாயத்திலிருந்து நம் புரிதலை அடுத்த படிநிலைக்கு எடுத்துக்கொண்டு போகிறது. இப்படி 37 அத்தியாயங்களிலும் புரிதலில் மேலே நாம் பயணிப்பதை அருமையாகவே உணர வைக்கிறார் ஆசிரியர். விற்பனைத் துறையில் முதல் அடி எடுத்துவைக்க விரும்பும் கத்துக்குட்டி முதல் அனுபவசாலிகள் வரை அத்தனை பேருக்கும் பயன்படும்படியாகப் புத்தகம் அமைந்திருக்கிறது. சில ஆலோசனைகள்: ஆசிரியரின் பல்வேறுபட்ட அனுபவங்களைப் பிரதிபலிக்கும் உதாரணங்களும் நிகழ்ச்சிகளும் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். வாசகர்களின் அறிவுக்கு மட்டுமல்ல, படிக்கும் சுவாரஸ் யத்தை அதிகரிக்கவும் அவை உதவியிருக்கும். வாசகர்களுக்கு சில பயிற்சிகளைக் கொடுத்திருக் கலாம். தெரிந்துகொண்ட கருத்துக்களைப் பட்டை தீட்டிக் கொள்ள அவை உதவியிருக்கும். இவை குறைகள் அல்ல, புத்தகத்தை இன்னும் மெருகேற்றும் ஆலோசனைகள். மொத்தத்தில் விற்பனைத் துறையில் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி, அல்லது இத்துறை பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவராக இருந்தாலும் சரி, கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது |
Employees First....
Author: Nagaraji.B /பெரும்பாலான கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் 'வாடிக்கையாளர்தான் ராஜா' (Consumer is the King) என்று எழுதி வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 'கA Customer is the most important visitor to our premises என்று மகாத்மா காந்தி சொன்னதாக பல இடங்களில் எழுதி வைத்திருப்பதை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் ஹெச்.சி.எல். டெக்னாலஜியின் சி.இ.ஓ. வினித் நய்யார், தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குத்தான் முதல் மரியாதை; அதற்குப் பிறகுதான் வாடிக்கையாளர்கள் என்று ஒரு 'தடாலடி'யான கருத்தைத் திடமாகக் கூறியதுடன், அதை நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டிருக்கிறார். இந்தப் புதுமையான கருத்து தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவி யிருக்கிறது என்பதை இந்தப் புத்தகத்தில் பல சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகள் மூலமாகச் சொல்லியிருக்கிறார்.
1976-ல் சிவ் நாடார் ஆரம்பித்த ஹெச்.சி.எல். குழுமம் 25 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி டாலர் வருமானத்திலிருந்து 500 கோடி டாலர் வருமானத்துக்கு உயர்ந்தது. 2000 முதல் 2005 வரை நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் இருந்தாலும், மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது ஒரு தேக்கம் தெரிய ஆரம்பித்தது. நிறுவனத்தில் உள்ள பலரும் தங்களது நிறுவனத்தின் வளர்ச்சியில் திளைத்திருந்ததால் மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியை அவதானிக்கத் தவறிவிட்டார்கள்.
இந்த சமயத்தில்தான் சிவ் நாடாரின் வேண்டுகோளுக்கிணங்க ஹெச்.சி.எல்.டி.யின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் வினித். அதற்குப் பிறகு நடந்தது வரலாறு! இன்றைக்கு 26 நாடுகளில் சுமார் 58,000 பேர் வேலை பார்க்கும் இந்நிறுவனத்தின் (ஹெச்.சி.எல்.டி மற்றும் இது சார்ந்த நிறுவனங்கள்) வருமானம் கிட்டத்தட்ட 260 கோடி டாலர்! ஹெச்.சி.எல். நிறுவனம் 500 கோடி டாலர் வருமானத்தை எட்ட பல ஆண்டுகள் ஆனது. ஆனால் ஹெச்.சி.எல்.டி.
260 கோடி டாலர் வருமானத்தை எட்ட எடுத்துக்கொண்ட காலம் மிக சொற்பமான ஆண்டுகளே! இந்த விறுவிறு வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது 'நிறுவன ஊழியர்களுக்கு முதல் மரியாதை' என்கிற கருத்து.
உலக அளவில் வேறு சில நிறுவனங்களும் இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து பெரிய வெற்றியைக் கண்டிருக்கின்றன. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், ஸ்டார்பக்ஸ் (உலக மெங்கும் காபி கடைகளை வெற்றிகரமாக நடத்தி வரும் நிறுவனம் இது) போன்ற நிறுவனங்கள் இதற்கு உதாரணங்கள்.
இந்த புரட்சிகரமான கருத்துக்குக் காரணம், 'நமது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் களை நன்கு கவனித்துக் கொண்டால், நிச்சயமாக அவர்கள் வாடிக்கையாளர்களிடம் நன்றாக நடந்து கொள்வார்கள்; அதனால் தொழில் செழிக்கும்' என்கிற ஒரு மனோரீதியான கொள்கைதான்.
இந்த கொள்கையை ஒரு நிறுவனத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் முக்கிய மாகத் தேவைப்படுவது, நாம் என்ன (What) செய்யவிருக்கிறோம்? அதை எப்படிச் (How) செய்யவிருக்கிறோம் என்பதுதான்.
இதற்கு நான்கு நிலைகளைச் சுட்டிக் காட்டுகிறார்
புத்தகத்தின் ஆசிரியர் வினித்.
1 மிரர் - மிரர் (நம்மை நாமே கண்ணா டியில் பார்த்துக் கொள்ளும்போது நம் வெளித்தோற்றத்தில் ஏதாவது தவறிருப்பின் அதைச் சரிசெய்து கொள்ளுகிற மாதிரி, ஒரு நிறுவனத் தில் ஏற்படும் மாற்றங்களைச் சரி செய்ய இது போன்ற ஒரு சுய அலசல் தேவை!)
2நிறுவனத்தில் மாற்றம் கொண்டுவரும் எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதை நடைமுறைக்குக் கொண்டுவரும் தைரியம் ஒரு சிலரிடம்தான் இருக்கும். இந்த இரண்டிற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டு மெனில் ஊழியர்களிடையே நம்பிக்கையையும் நிறுவனத்தின் குறிக்கோள்களையும் அதை அடையக்கூடிய வழிமுறைகளையும் எந்த ஒளிவு மறைவுமின்றி எடுத்துச் சொல்ல வேண்டும்.
3 பிரமிட் போன்று இருக்கிற நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுமானத்தைத் தலைகீழாக ஆக்க வேண்டும். நிறுவனத்தில் காலங்காலமாக இருந்து வரும் 'பல அடுக்கு'களை (Hierarchy) உடைத்து, 'வேல்யூ ஜோன்' (Value Zone) என்கிற ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். இங்குதான் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் தொடர்பு வைத்துக் கொள்வார்கள். அதற்குத் தலைமை நிர்வாகம் தனது முழு ஒத்துழைப்பையும் தரவேண்டும். (இந்த வேல்யூ ஜோனில் உள்ளவர்களின் நடவடிக்கைகளுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இது வழக்கமாக இருந்துவரும் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறானது!)
4 சி.இ.ஓ.வின் ரோலை முற்றிலு மாக மாற்றியமைப்பது. அதாவது, எல்லாவற்றுக்கும் பதிலளிப்பதற்குப் பதிலாக கேள்வி கேட்க வேண்டும். தான் ஒருவர்தான் மாற்றத்திற்கான சூத்ரதாரி என்கிற நினைப்பை சி.இ.ஓ. மறக்க வேண்டும். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வேல்யூ ஜோனிற்கு அருகில் உள்ள அடுத்த தலைமுறையைத் தயார்படுத்த வேண்டும்.
மேற்கூறிய நான்கு நிலைகளையும் திறம்பட செயல்முறைப்படுத்தியதன் விளைவு:
2005லிருந்து 2009 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஹெச்.சி.எல்.டி.க்கு கிடைக்கப் பெற்ற 70 சதவிகித 'டீல்'களை இந்திய ஐ.டி. துறையில் ஜாம்பவான்களாகத் திகழும் நான்கு பெரிய குழுமங்களுடன் போட்டியிட்டு வென்றது.
நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஐந்து மடங்காகப் பெருகியது.
வேலையை விட்டுச் செல்லும் ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதமாகக் குறைந்தது.
'ஊழியர்கள் திருப்திகரமாக இருக்கிறார்களா?' என்று கண்டறிய தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் முந்தைய ஆண்டுகளில் இருந்ததைவிட 70 சதவிகிதம் அதிகரித்திருந்தது.
புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும்கூட வெற்றிகரமான ஒரு நிறுவனத்தை உருவாக்கி நடத்திச் செல்ல விரும்புகிறவர்களுக்கு இது ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
விவேகானந்தரின் விவேக மொழிகள்
Author: Nagaraji.B /
முட்டாள் என்பது நல்ல பெயரா?
Author: Nagaraji.B /புகழ்பெற்ற ஆசிரியர் ஒருவரிடம் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களில் ஒருவன் பெயர் "முட்டாள்". அதனால் அவனை மற்ற மாணவர்கள் "முட்டாளே இங்கே வா! முட்டாளே இதைச் செய்!" என்று கேலி செய்தனர்.
தன் பெயரே தன்னைக் கேலிக்கு உள்ளாக்குகிறதே" என்று வருந்தினான்.
ஆசிரியரை வணங்கிய அவன், "ஐயா, எனக்கு ஒரு நல்ல பெயராக நீங்கள் வைக்க வேண்டும். எல்லோரும் மதிக்கும் பெயராக அது இருக்க வேண்டும்." என்று வேண்டினான்.
"நீ இங்கிருந்து புறப்பட்டு பல ஊர்களுக்கும் சென்று வா. எந்தப் பெயர் உனக்குப் பிடிக்கிறது என்று தேர்ந்தெடுத்து வந்து சொல். அந்தப் பெயரையே உனக்கு வைத்து விடுகிறேன்" என்றார் அவர்.
அங்கிருந்து புறப்பட்ட அவனும் ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தான்.
வழியில் சிலர் சுடுகாட்டிற்குப் பிணம் ஒன்றைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். இறந்தவனைப் பற்றி விசாரித்தான் முட்டாள். இறந்தவன் பெயர் தேவன் என்று தெரிந்து கொண்டான்.
"தேவன் எப்படிச் சாவான்?"என்று கேட்டான் அவன்.
"தேவன் என்ற பெயருடையவனும் இறந்து விட்டான். சாவு என்ற பெயருடையவனும் இறந்து விட்டான். பெயரில் என்ன உள்ளது? ஒருவனை அடையாளம் காட்டுவதுதான் பெயர். இது தெரியாமல் என்னிடம் கேள்வி கேட்கிறாயே, நீ என்ன முட்டாளா?" என்று எரிச்சலுடன் பதில் சொன்னான் ஒருவன்.
இன்னொரு ஊரை அடைந்தான் அவன். ஒரு வீட்டின் முன் நின்று,"அம்மா, தாகமாக உள்ளது குடிக்கத் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்டான்.
"தண்ணீரெல்லாம் தர முடியாது... இங்கிருந்து போ..." என்று விரட்டினாள் அந்த வீட்டிலிருந்தவள்.
அவளைப் பற்றி விசாரித்தான். அவள் பெயர் காவேரி என்று தெரிந்து கொண்டான்.
அங்கிருந்து சென்ற அவன் நான்கு சாலை சந்திப்பை அடைந்தான். எதிரி வந்த ஒருவரிடம்,"அய்யா, பக்கத்திலிருக்கும் நகரத்திற்கு எப்படி செல்வது/" என்று விசாரித்தான்.
அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்றார்.
உங்கள் பெயர் என்ன? என்றான்
அவர் "வழிகாட்டி" என்றார்.
இன்னொரு இடத்தில் ஒரு பெண்ணை அவள் தாய் அடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.
"ஏனம்மா அந்தச் சிறுமியை அடிக்கிறீர்கள்?'
"வேலைக்குச் சென்ற அவள் வேலை எதுவும் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி உள்ளாள். இன்று சாப்பாட்டிற்கு என்ன செய்வோம்? அதனால்தான் அடிக்கிறேன்."என்றாள் அவள்.
"உங்களின் மகளின் பெயர் என்ன" என்று கேட்டான்.
"திருமகள்" என்றாள் அவள்.
ஊர் திரும்பிய அவன் தன் ஆசிரியரை வணங்கினான்.
"என்ன பெயரித் தேர்ந்தெடுத்திருக்கிறாய்?" என்று கேட்டார் ஆசிரியர்.
"தேவன் என்ற பெயருடையவனால் சாவிலிருந்து தப்பிக்க முடியவில்லை. தாகத்திற்கு தண்னீர் தர மறுப்பவளின் பெயர் காவேரி. வழிகாட்ட முடியாதவனின் பெயர் வழிகாட்டி. வறுமையில் வாடுபவளின் பெயர் திருமகள். பெயர் ஒருவரை அடையாளம் காட்டும் குறியீடுதான். மற்ற பெயர்களுக்கு முட்டாள் என்கிற என்னுடைய பெயரே நன்றாக இருக்கிறது" என்றான் அவன்.
எல்லோருக்கும் பெயருக்கு ஏற்றபடியா செயல்பாடுகள் இருக்கிறது?
அகம், புறம், அந்தப்புரம்
Author: Nagaraji.B /இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.
மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம்.
ஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.
முகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
Author: Nagaraji.B /
சிறுகதை தொகுப்பு
துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காண முடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகு புனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ் புனைவியலை உருவாக்கு கின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.
பால்ய நதி
Author: Nagaraji.B /
சிறுகதை தொகுப்பு
வெயிலைக் கொண்டுவாருங்கள்
Author: Nagaraji.B /
சிறுகதை தொகுப்பு
அத்தனைக்கும் ஆசைப்படு
Author: Nagaraji.B /உங்களில் ஒரு நிச்சயமான ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்களா? வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் ரசித்து வாழ விருப்பமா? எல்லாப் பொழுதையும் இனமையாக ஆனந்தமாக அனுபவிக்க வழி தேடுகின்றவரா? கடவுள் பற்றிய பழமையான எண்ணஞ்களிலிருந்து வெளிப்பட்டு என்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க புதிய நோக்கில் சிந்தனையில் காண விருப்பமா? சுருங்கக்கூறின் வாழ்க்கையின் அத்துணை பரிமாணங்களையும் ஆனந்தமாக வாழ்ந்திட வழிகாட்டுகிறது சத்குரு ஜக்கிவாசுதேவின் "அத்தனைக்கும் ஆசைப்படு" . ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளியிடப்பட்டு தற்போது தனிப்புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. துன்பத்திற்க்குக் காரணம் ஆசையா? இப்படி ஏராளாமான விஷயங்களை ந்மக்கு தெளிவுபடுத்துவதோடு நம்மில் ஒரு நிச்சயமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் சந்திக்கவும், சிந்திக்கவும் செய்கிறது. "எதையும் ரசித்து ஈடுபாட்டுடனும், மனப்பூர்வமாகவும் செயலாற்றுவதினால் வெற்றி நிச்ச்யம் நம் வசமாகும்" என்னும் இப்புத்தகத்தை அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது நிச்சயம் படித்திட வேண்டும்.
தற்போது சுயவளர்ச்சி தொடர்பாக ஏராளமான புத்தகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இன்னும் சொல்லப்போனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இதன் விற்பனை தற்போது அதிகம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. காரணம் மனிதன் தற்போது தன்னை ஊக்குவிக்கும் உற்சாக மருந்தாக, வாழ்க்கைப்பற்றிய உண்மைத் திறவுகோலாக, வழிகாட்டுதலாக, வளர்ச்சிப் பாதையில் தன்னை முடுக்கும் உந்துசக்தியாக இம்மாதிரியான புத்தகங்களை கருதி ஏற்றுக்கொண்டிருப்பது தான்.
இத்தகைய புத்தகங்கள் பல வெளிவந்து கொண்டிருந்தாலும் அவையாவும் பிறர் கூறியவற்றை திருப்பிக்கூறும் எதிரொலியாகத்தான் இருக்கின்றன. மாற்று சிந்தனை,
புதியநோக்கு என்பதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க செயற்கையாகத்தனமான புத்தகங்கள் தான் அதிகம் காணப்படுகின்றன.
"அத்தனைக்கும் ஆசைப்படு" மேற்கூறியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வாழ்க்கையை முழுமையாக ரசிக்கக் கற்றுத்தருவது.
மகிழ்ச்சி என்பது என்ன?
பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி?
வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கையை நம் விருப்பப்படி அமைத்துக்
கொள்வது எப்படி?
மனப்பூர்வமாக செயாலாற்றுவது எப்படி?
வாஸ்து, ஜாதகம் இவையெல்லாம் உண்மையா?
கடவுள் என்பவர் யார்? அவர் எத்தகையவர்?
உடல் நலம்பெற உணவு முறை வைத்தியம்!
Author: Nagaraji.B /ஒவ்வொரு காய்கறியிலும்,பழங்களிலும், தானியங்களிலும் உள்ள சத்துக்கள் யாவை, அதன் பயன் என்ன என்பதை விரிவாக கூறியுள்ளார் நூலாசிரியர். முதியோருக்கு உதவும் உணவு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நோய்க்கும் என்ன உணவு கொடுப்பது என்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
60 அமெரிக்க நாட்கள்
Author: Nagaraji.B / பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
சுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் நூல் இது.
அமெரிக்கா போகணுமா?
Author: Nagaraji.B /அ அம்மா, ஆ ஆடு, இ இலை என்று அரிசுவடி கற்றுத்தருவது போல, பாஸ்போர்ட், விசாவில்
தொடங்கி, விமானத்துக்கு டிக்கெட் வாங்குவது, மூட்டை முடிச்சுகள் கட்டுவது, அமெரிக்காவில் வீடு தேடுவது, கார் வாங்குவது, இந்தியாவுக்குப் பணம் அனுப்புவது என்று அமெரிக்க வாழ்க்கையின் சகல
தேவைகளுக்கும் உற்ற உறுதுணைவனாக இந்தப் புத்தகம் இருக்கிறது.
யுவான் சுவாங் இந்தியப் பயணம்: முதல் தொகுதி
Author: Nagaraji.B /புதுமைப்பித்தன் பதிப்பகம், 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை83. (பக்கம்: 256).
புனிதப் பயணியருள் பவுத்த சமயத்தின்பால் தீராத பற்றுக் கொண்ட கன்பூசியசை சிந்தனை மரபு வழித் தோன்றலான யுவான் சுவாங்கின் இந்தியப் பயணக் குறிப்புகள், பேரார்வத்தைத் தூண்டக்கடியவை. யுவான்சுவாங் 16 ஆண்டு காலம் பயணம் செய்து தாம் நேரில் கண்டவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் அக்கால சீனப் பேரரசர் தான் வேண்டு
கோளுக்கேற்ப சீன மொழியில் எழுதினார். இப்பயண நூலை தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இரண்டையும் உள்ளடக்கமாகப் பெற்ற நூல் தமிழிலும் வர வேண்டும் என்று எழுந்த பேரவாவின் துவக்கமாக ஒரு பகுதியை முதல் தொகுதியாக நமது கைகளில் தவழ விட்டுள்ளனர் புதுமைப்பித்தன் பதிப்
பகத்தினர். இது இந்தியாவைப் பற்றிய யுவான்சுவாங் கருத்துக்களை அறிய உதவும்.
சென்னையிலிருந்து உலகை நோக்கி...
Author: Nagaraji.B /நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவதுடன், பயிற்சியால் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்ற ஆணித்தரமான கருத்தைக் கொண்டிருப்பவர் ஆசிரியர். கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் எழுதிய விஷயங்கள் இதில் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவிற்கு மன்மோகன் தலைமையிலான அரசு ஒரு புதிய தோற்றத்தை தந்திருக்கிறது என்பது உட்பட பல தகவல்கள் கொண்ட நூல்.