இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.
மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம்.
ஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.
முகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.
அகம், புறம், அந்தப்புரம்
Author: Nagaraji.B /எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்
Author: Nagaraji.B /
சிறுகதை தொகுப்பு
துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காண முடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகு புனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ் புனைவியலை உருவாக்கு கின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.
பால்ய நதி
Author: Nagaraji.B /
சிறுகதை தொகுப்பு
வெயிலைக் கொண்டுவாருங்கள்
Author: Nagaraji.B /
சிறுகதை தொகுப்பு
அத்தனைக்கும் ஆசைப்படு
Author: Nagaraji.B /உங்களில் ஒரு நிச்சயமான ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்களா? வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் ரசித்து வாழ விருப்பமா? எல்லாப் பொழுதையும் இனமையாக ஆனந்தமாக அனுபவிக்க வழி தேடுகின்றவரா? கடவுள் பற்றிய பழமையான எண்ணஞ்களிலிருந்து வெளிப்பட்டு என்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க புதிய நோக்கில் சிந்தனையில் காண விருப்பமா? சுருங்கக்கூறின் வாழ்க்கையின் அத்துணை பரிமாணங்களையும் ஆனந்தமாக வாழ்ந்திட வழிகாட்டுகிறது சத்குரு ஜக்கிவாசுதேவின் "அத்தனைக்கும் ஆசைப்படு" . ஆனந்தவிகடன் இதழில் தொடராக வெளியிடப்பட்டு தற்போது தனிப்புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. துன்பத்திற்க்குக் காரணம் ஆசையா? இப்படி ஏராளாமான விஷயங்களை ந்மக்கு தெளிவுபடுத்துவதோடு நம்மில் ஒரு நிச்சயமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் சந்திக்கவும், சிந்திக்கவும் செய்கிறது. "எதையும் ரசித்து ஈடுபாட்டுடனும், மனப்பூர்வமாகவும் செயலாற்றுவதினால் வெற்றி நிச்ச்யம் நம் வசமாகும்" என்னும் இப்புத்தகத்தை அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது நிச்சயம் படித்திட வேண்டும்.
தற்போது சுயவளர்ச்சி தொடர்பாக ஏராளமான புத்தகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இன்னும் சொல்லப்போனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இதன் விற்பனை தற்போது அதிகம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. காரணம் மனிதன் தற்போது தன்னை ஊக்குவிக்கும் உற்சாக மருந்தாக, வாழ்க்கைப்பற்றிய உண்மைத் திறவுகோலாக, வழிகாட்டுதலாக, வளர்ச்சிப் பாதையில் தன்னை முடுக்கும் உந்துசக்தியாக இம்மாதிரியான புத்தகங்களை கருதி ஏற்றுக்கொண்டிருப்பது தான்.
இத்தகைய புத்தகங்கள் பல வெளிவந்து கொண்டிருந்தாலும் அவையாவும் பிறர் கூறியவற்றை திருப்பிக்கூறும் எதிரொலியாகத்தான் இருக்கின்றன. மாற்று சிந்தனை,
புதியநோக்கு என்பதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க செயற்கையாகத்தனமான புத்தகங்கள் தான் அதிகம் காணப்படுகின்றன.
"அத்தனைக்கும் ஆசைப்படு" மேற்கூறியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வாழ்க்கையை முழுமையாக ரசிக்கக் கற்றுத்தருவது.
மகிழ்ச்சி என்பது என்ன?
பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி?
வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கையை நம் விருப்பப்படி அமைத்துக்
கொள்வது எப்படி?
மனப்பூர்வமாக செயாலாற்றுவது எப்படி?
வாஸ்து, ஜாதகம் இவையெல்லாம் உண்மையா?
கடவுள் என்பவர் யார்? அவர் எத்தகையவர்?
உடல் நலம்பெற உணவு முறை வைத்தியம்!
Author: Nagaraji.B /ஒவ்வொரு காய்கறியிலும்,பழங்களிலும், தானியங்களிலும் உள்ள சத்துக்கள் யாவை, அதன் பயன் என்ன என்பதை விரிவாக கூறியுள்ளார் நூலாசிரியர். முதியோருக்கு உதவும் உணவு, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நோய்க்கும் என்ன உணவு கொடுப்பது என்ற விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
60 அமெரிக்க நாட்கள்
Author: Nagaraji.B / பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
சுஜாதா தன் அமெரிக்க அனுபவங்களை எழுதும் இந்த நூல் ஒரு பயணக் கட்டுரை அல்ல. அமெரிக்க சமூக, கலாசார, அரசியல், பொருளியல் வாழ்க்கையினை சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாகச் சித்தரிக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தைத் தாண்டி அதன் ஆதார உண்மைகள் இன்றும் மாறாதவை. அமெரிக்கா என்ற கனவை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் நூல் இது.
அமெரிக்கா போகணுமா?
Author: Nagaraji.B /அ அம்மா, ஆ ஆடு, இ இலை என்று அரிசுவடி கற்றுத்தருவது போல, பாஸ்போர்ட், விசாவில்
தொடங்கி, விமானத்துக்கு டிக்கெட் வாங்குவது, மூட்டை முடிச்சுகள் கட்டுவது, அமெரிக்காவில் வீடு தேடுவது, கார் வாங்குவது, இந்தியாவுக்குப் பணம் அனுப்புவது என்று அமெரிக்க வாழ்க்கையின் சகல
தேவைகளுக்கும் உற்ற உறுதுணைவனாக இந்தப் புத்தகம் இருக்கிறது.
யுவான் சுவாங் இந்தியப் பயணம்: முதல் தொகுதி
Author: Nagaraji.B /புதுமைப்பித்தன் பதிப்பகம், 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை83. (பக்கம்: 256).
புனிதப் பயணியருள் பவுத்த சமயத்தின்பால் தீராத பற்றுக் கொண்ட கன்பூசியசை சிந்தனை மரபு வழித் தோன்றலான யுவான் சுவாங்கின் இந்தியப் பயணக் குறிப்புகள், பேரார்வத்தைத் தூண்டக்கடியவை. யுவான்சுவாங் 16 ஆண்டு காலம் பயணம் செய்து தாம் நேரில் கண்டவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் அக்கால சீனப் பேரரசர் தான் வேண்டு
கோளுக்கேற்ப சீன மொழியில் எழுதினார். இப்பயண நூலை தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இரண்டையும் உள்ளடக்கமாகப் பெற்ற நூல் தமிழிலும் வர வேண்டும் என்று எழுந்த பேரவாவின் துவக்கமாக ஒரு பகுதியை முதல் தொகுதியாக நமது கைகளில் தவழ விட்டுள்ளனர் புதுமைப்பித்தன் பதிப்
பகத்தினர். இது இந்தியாவைப் பற்றிய யுவான்சுவாங் கருத்துக்களை அறிய உதவும்.
சென்னையிலிருந்து உலகை நோக்கி...
Author: Nagaraji.B /நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவதுடன், பயிற்சியால் பல சாதனைகளைப் படைக்க முடியும் என்ற ஆணித்தரமான கருத்தைக் கொண்டிருப்பவர் ஆசிரியர். கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர் எழுதிய விஷயங்கள் இதில் அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவிற்கு மன்மோகன் தலைமையிலான அரசு ஒரு புதிய தோற்றத்தை தந்திருக்கிறது என்பது உட்பட பல தகவல்கள் கொண்ட நூல்.
THE MIND OF RAMANA MAHARSHI , The Mind of Adi Shankaracharya
Author: Nagaraji.B / வெளியீடு: 48. ஆர்யா கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033.
தொலைபேசி: 044-2480 3091 / 3092 / 3093 / 3094.
இ-மெயில்: chennai.sales@jaicobooks.com
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
Author: Nagaraji.B /
சாகித்ய அகடமி விருது பெற்ற கவிஞர் புவியரசுவின் அணிந்துரையுடன் ஆரம்பமாகும் இந்த நூலில், பாரதியாரின் பாஞ்சாலி சபதமும், ஓஷோவின் கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிய பார்வையும் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. விரிவாக எழுதப்பட வேண்டிய இந்த ஒப்பாய்வை சுருக்கமாக ஆசிரியர் இந்த நூலில் எழுதியிருக்கிறார்.இதில் உள்ள தகவல்களைப் படிக்கையில், விரிவுபடுத்தப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளடக்கிய இந்த, "தலைப்பை மரபின் முத்தையா தமிழ் கூறும் நல்லுலகுக்கு பெரிய அளவில் வழங்க வேண்டும் என்று கேட்க வைக்கிறது.