புதுமைப்பித்தன் பதிப்பகம், 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக்நகர், சென்னை83. (பக்கம்: 256).
புனிதப் பயணியருள் பவுத்த சமயத்தின்பால் தீராத பற்றுக் கொண்ட கன்பூசியசை சிந்தனை மரபு வழித் தோன்றலான யுவான் சுவாங்கின் இந்தியப் பயணக் குறிப்புகள், பேரார்வத்தைத் தூண்டக்கடியவை. யுவான்சுவாங் 16 ஆண்டு காலம் பயணம் செய்து தாம் நேரில் கண்டவற்றையும், கேள்விப்பட்டவற்றையும் அக்கால சீனப் பேரரசர் தான் வேண்டு
கோளுக்கேற்ப சீன மொழியில் எழுதினார். இப்பயண நூலை தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இரண்டையும் உள்ளடக்கமாகப் பெற்ற நூல் தமிழிலும் வர வேண்டும் என்று எழுந்த பேரவாவின் துவக்கமாக ஒரு பகுதியை முதல் தொகுதியாக நமது கைகளில் தவழ விட்டுள்ளனர் புதுமைப்பித்தன் பதிப்
பகத்தினர். இது இந்தியாவைப் பற்றிய யுவான்சுவாங் கருத்துக்களை அறிய உதவும்.
0 comments:
Post a Comment