வெயிலைக் கொண்டுவாருங்கள்

Author: Nagaraji.B /

வெயிலைக் கொண்டுவாருங்கள்
சிறுகதை தொகுப்பு
பாதரசத்தைப் போல எவர் கையிலும் வசப் படாமலும் சதா அழகு காட்டி உருண்டோடியபடியுமாய் இருக்கிறது கதை என்னும் அபூர்வ திரவம். அன்றாடப் பிரச்சினைகளே கதை என்னும் காலனியக் காமாலை எங்கும் நிரம்பி வழியும் சூழலில் கதை என்பது ஒர் அறிதல் முறையெனக் கொள்ளவும பின் நவீனப் புனைவியலுக்கான கதை மொழியை உருவாக்கவும் முனையும் இக்கதைகளை அதி கதைகள் என அழைக்கலாம். புலன் சார் புனைக் கதைகளாய் இருக்கும் இந்த Modern fables தமிழில் புதிய கதையாடலை உருவாக்க முனைகின்றன.

0 comments:

Post a Comment

Pages