புத்தக விமர்சனம் |
இந்தப் புத்தகத்தின் மூலம் நூலாசிரியர்கள் மாருதியின் 27 ஆண்டு சரித்திரத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நாளன்றுக்கு 100 கார்கள் (ஆண்டுக்கு சுமாராக 36,500 கார்கள்) மட்டுமே உற்பத்தித்திறன் கொண்டிருந்த மாருதி, இப்போது ஆண்டுக்கு 10 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறன் பெற்றிருக்கிறது. அரசு நிறுவனமாக ஆரம்பித்த 'மாருதி உத்யோக்' இன்று 'மாருதி சுஸ¨கி'யாக மாறி, தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நிரூபித்திருக்கிறது. என்னதான் அரசு நிறுவனமாக இருந்தாலும், அனுமதிகள் என்பது பறித்த பழமாக தானாக வந்து விடவில்லை. இதன் சேர்மன்களும், மேலாண்மை இயக்குநர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைத் திறம்பட முடிக்க நிறையவே கஷ்டப் பட்டதை புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள் ஒளிவு மறைவில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். சுஸ¨கி நிறுவனத்தின் பிரசிடென்ட்டாக இருந்த ஓசாமு சுஸ¨கி மாருதி நிறுவனத்தின் தலைமைப் பொறுப் பிலிருந்தவர்களிடம் வைத்திருந்த நம்பிக்கை பற்றியும் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் கார் புக் செய்தவர்களுக்கு எப்படி அது டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா? ஹரியானாவின் குர்கானில் உள்ள மாருதி தொழிற் சாலையிலிருந்து மாருதி டீலர் எங்கிருக்கிறாரோ, அதுவரை கார் ஓட்டிச் செல்லப்பட்டது. இதனால் கார் புக் செய்தவர் களுக்கு இன்றைக்கு ஷோ ரூமிலிருந்து கிடைப்பது போல புத்தம் புதிய கார் அன்று கிடைக்கவில்லை. காரணம், அன்றைக்கு கார்களை கொண்டு செல்லும் அளவிற்கு ரயில் பெட்டியோ, டிரெய்லரோ இல்லை. இந்த நேரத்தில், அமெரிக்காவில் வேலை பார்த்துவந்த கே.ரங்கசாமி என்கிற ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயர் இந்தியா திரும்ப தீர்மானித்தார். இந்தியாவுக்கு ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாருதி காரைக் கொண்டு செல்லத் தேவையான டிரெய்லரை வடிவமைத்துக் கொடுக்க மாருதியுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் வடிவமைத்த டிரெய்லரில்தான் 1984 முதல் மாருதி கார்கள் கொண்டு செல்லப்பட்டன. அதன்பிறகு ரயில்வே வேகன்களில் கார்களைக் கொண்டு செல்லும் படி மாற்றி அமைக்கப்பட்டது. இப்படி பல சுவையான விஷயங்கள் இப்புத்தகத்தில் பொதிந்து இருக்கின்றன. | |
|
0 comments:
Post a Comment