புத்தக விமர்சனம் |
புதுமைக்கும், புரட்சிகரமான யோசனைகளுக்கும் உலகளவில் பெயர் பெற்றது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிதாமகனான ஸ்டீவ் ஜாப்ஸ், 1976-ல் அந்த நிறுவனத்தை தனது பெற்றோர்களின் கார் ஷெட்டில்தான் ஆரம்பித்தார். நன்றாக நடந்துவந்த நிறுவனம் 1980-களில் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தது. நிறுவனத்தின் உட்பூசலால் அதைத் தொடங்கிய ஸ்டீவையே தூக்கி யெறிந்தனர் உடனிருந்தவர்கள். அதற்குப் பிறகு ஸ்டீவ் தனியாக 'நெக்ஸ்ட்' (NeXT) என்கிற நிறுவனத்தையும் அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிக்கும் 'பிக்ஸர்' (Pixar) என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்து, மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார். 1997-ல் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை அதலபாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் ஸ்டீவ்வின் 'நெக்ஸ்ட்' நிறுவனத்தின் திறமை கண்டு அதற்கு விலை குறிக்கப்பட்டது. அதன்படி, கிட்டத்தட்ட 450 மில்லியன் டாலர்களுக்கு அது ஆப்பிளால் வாங்கப்பட்டது. ஸ்டீவ் மீண்டும் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனால் மூடப்படவிருந்த ஆப்பிள் நிறுவனம் காப்பாற்றப்பட்டது. இந்தப் புத்தகத்தில் ஆப்பிள் நிறுவனம் பற்றியும் அந்நிறு வனத்தின் கண்டுபிடிப்புகளுக்கு பின்னால் இருக்கும் செயல்திறன் பற்றியும் விலாவாரியாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் லியாண்டர். ஸ்டீவ்வின் குணாதிசயங்களான முழுமைத்துவம், சிறுசிறு விஷயங் களிலும் கவனம் செலுத்தும் தன்மை, பொருளின் வடிவமைப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் போன்ற பல விஷயங்களையும் அலசி ஆராய்ந்திருக்கிறார். இவருக்கும் மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ¨க்கும் இடையிலான விவாதங்களும் தீர்வுகளும் ஆங்காங்கே தலைகாட்டியிருக்கிறது. இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் லியாண்டர் அமெரிக்காவின் பிரபலமான 'வயர்ட்.காம்' (Wired.com) என்கிற நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் என்பதால் ஸ்டீவ் பற்றிய அனைத்து அம்சங்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார். | |
|
0 comments:
Post a Comment