பார​தி​யா​ரின் விஜயா சூரி​யோ​த​யம் இதழ்​கள்

Author: Nagaraji.B /

1909-1910 ஆண்​டு​க​ளில் பார​தி​யார் விஜயா,​​ சூரி​யோ​த​யம் ஆகிய இதழ்​க​ளில் எழு​திய தலை​யங்​கங்கள்,​​ நகைச்​சுவை கட்​டு​ரை​க​ளின் தொகுப்பு.​ அக்​கால கட்​டத்​தில் வெளி​வந்த செய்​தி​க​ளும் தொகுத்​துக் கொடுக்​கப்​பட்​டுள்​ளன.​ அக்​கால கல்வி,​​ அர​சி​யல்,​நாட​கம்,​​ பக்தி போன்ற பல விஷ​யங்​கள் பற்றி பார​தி​யார் தனக்​கே​யு​ரிய உயி​ரோட்​ட​மான நடை​யில் தலை​யங்​கங்கள் எழு​தி​யுள்​ளார்.​ பார​தி​யா​ரின் தீர​மிக்க சுதந்​திர உணர்​வை​யும் தேசப் பக்​தி​யை​யும் அவை நமக்​குக் காட்​டு​கின்​றன.​ இரண்டு இதழ்​க​ளி​லும் அந்​நா​ளில் வெளி​வந்​துள்ள செய்​தி​க​ளும் தொகுத்​துக் கொடுக்​கப்​பட்​டுள்​ளன.​ அன்​றைய நாட்டு நிகழ்​வு​களை நாம் தெரிந்து கொள்​வ​தற்கு இந்​நூல் உத​வு​கி​றது.​ மாபெ​ரும் கவி​ஞ​ரான பார​தி​யா​ரின் பன்​மு​கத்​தன்​மையை வெளிச்​ச​மிட்​டுக் காட்​டும் சிறந்த நூல்.​ அரிய தொகுப்பு.

0 comments:

Post a Comment

Pages