உப்​புக் கணக்கு

Author: Nagaraji.B /





எழுத்​தா​ளர் வித்யா சுப்​ர​ம​ணி​யம் எழு​தி​யுள்ள "உப்​புக் கணக்கு' நாவலை வர​லாற்​றுப் புதி​னம் என்றோ சமூக நாவல் என்றோ முத்​திரை குத்​தி​விட முடி​யாது.​ உப்பு சத்​தி​யா​கி​ர​கத்​தில் தொடங்கி,​​ தேசப் பிரி​வி​னை​யின்​போது ஏற்​பட்ட வகுப்​புக் கல​வ​ரத்தை மைய​மாக வைத்து கதை பின்​னப்​பட்​டி​ருக்​கி​றது.​

உப்பு சத்​தி​யா​கி​ர​கம் பற்றி பள்​ளிக்​கூட பாடங்​க​ளில் இருப்​ப​தை​விட தெளி​வா​கவே சொல்​லப்​பட்​டி​ருக்​கி​றது.​ நாவ​லில் வரும் மாந்​தர்​க​ளின் தேச பக்​தி​யும் காந்​திஜி மீதான பற்​றும் கற்​ப​னையோ மிகையோ அல்ல என்​ப​தால் பல இடங்​க​ளில் நெகிழ்ச்சி ஏற்​ப​டு​கி​றது.​

திரைப்​ப​ட​மாக்​கத்​தக்க நல்ல கதை அமைப்பு.​ முதி​ய​வர்​கள்,​​ இளை​ய​வர்​கள் அனை​வ​ரை​யும் நிச்​ச​யம் ஈர்க்​கும் இந்த நாவல்.​ ராஜாஜி,​​ கல்கி சதா​சி​வம் உள்​ளிட்​டோ​ரின் பங்​கைத் தேவை​யான அள​வுக்கு நாவல் விவ​ரிக்​கி​றது.

0 comments:

Post a Comment

Pages