உப்புக் கணக்கு
Author: Nagaraji.B /எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதியுள்ள "உப்புக் கணக்கு' நாவலை வரலாற்றுப் புதினம் என்றோ சமூக நாவல் என்றோ முத்திரை குத்திவிட முடியாது. உப்பு சத்தியாகிரகத்தில் தொடங்கி, தேசப் பிரிவினையின்போது ஏற்பட்ட வகுப்புக் கலவரத்தை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது.உப்பு சத்தியாகிரகம் பற்றி பள்ளிக்கூட பாடங்களில் இருப்பதைவிட தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. நாவலில் வரும் மாந்தர்களின் தேச பக்தியும் காந்திஜி மீதான பற்றும் கற்பனையோ மிகையோ அல்ல என்பதால் பல இடங்களில் நெகிழ்ச்சி ஏற்படுகிறது.திரைப்படமாக்கத்தக்க நல்ல கதை அமைப்பு. முதியவர்கள், இளையவர்கள் அனைவரையும் நிச்சயம் ஈர்க்கும் இந்த நாவல். ராஜாஜி, கல்கி சதாசிவம் உள்ளிட்டோரின் பங்கைத் தேவையான அளவுக்கு நாவல் விவரிக்கிறது.
உப்புக் கணக்கு-வித்யா சுப்ரமணியம்; பக்.416; ரூ.150; தேவி வெளியீடு, 23/11, காசிம் சாகிப் தெரு, இராயப்பேட்டை, சென்னை-600 014.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment